பராசர
மகரிஷி என்பவருக்கும் சத்யவதி என்ற மீனவப் பெண்மணிக்கும் பரமேஸ்வரனின் அனுகிரஹத்தால்
மகனாக வ்யாஸர் பிறந்தார்.
சத்யவதி
பராசர மகரிஷியிடம் பின்வரும் மூன்று நிபந்தனையின் படி திருமணம் புரிகிறார்.
-
நம் இருவரையும் யாரும் பார்க்கக் கூடாது
-
மீனவ பெண்மணி என்பதால் தன் மீது வீசும் மீன் நாற்றம் நீங்கி
பரிமள சுகந்த வாசம் வீச வேண்டும். நான் உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றினாலும் நான்
கன்னித் தன்மையுடன் இருக்க வேண்டும்
- தன் குழந்தை அறிவாளியாக நன்கு படித்தவன் ஆகவும் மீனவனாக
இல்லாமல் ஒரு முனிவன் ஆக விஷ்ணு பகவான் அம்சமாக இருக்கவேண்டும் என்று சத்யவதி நிபந்தனை
செய்தாள்.
வியாசர்
க்ருஷ்ண த்வீபம் என்ற இடத்தில் பிறந்ததால் இவரை "க்ருஷ்ண த்வைபாயனர் என்றும்
அழைப்பர். வசிஷ்டரின் குலத் தோன்றல் என்பதால் வாசிஷ்டர் என்ற பெயரும் உண்டு.
சப்த
சிரஞ்சீவிகளில் ஒருவர்.
பதரிகாஸ்ரமத்தில்
நித்யம் வாசம் புரிவதால் பாதராயணர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.
பதினெட்டுப்
புராணங்களை இயற்றியவரும் இவரே.
நான்கு வேதங்களை முறையாக தொகுத்ததால் வேத வ்யாஸர் என்னும்
பெயர் பெற்றார். அப்படி முறையாக தொகுத்த வேதங்களை தன்னுடைய பிரதான 4 சிஷ்யர்களிடம்
முறையே, ரிக் வேதத்தை பைல முனிவரிடமும், யஜுர் வேதத்தை வைசம்பாயன முனிவரிடமும், ஸாம
வேதத்தை ஜைமினி முனிவரிடமும், அதர்வண வேதத்தை ஸுமந்த் முனிவரிடமும் ஒப்படைத்து, இன்றளவும்
நின்று நிலைபெறச் செய்தவர் என்பதால் அவர் வேதவ்யாஸர் என்றே அழைக்கப் படுகிறார். வ்யாஸர்
என்றால் தொகுப்பாளர் (Composer) என்று பொருள்.
பின்
இவர் பிரும்ம சூத்திரம் என்ற அரிய நூலை எழுதி நமக்கெல்லாம் ஒரு பொக்கிஷமாக அருளியிருக்கிறார்.
மேலும் நமக்கு வேதம், உபநிஷதம், புராணங்கள் போன்று பல பொக்கிஷங்கள் அவர் மூலம்
கிடைத்திருக்கின்றன. ப்ரஹ்ம ஸூத்ரம் என்ற இவரது நூல் தான் நம் நாட்டின் அத்வைத, விசிஷ்டாத்வைத,
த்வைத வேதாந்தங்களின் தோற்றுவாய் ஆகும்.
மகாபரதப்போரை
கண் தெரியாமல் இருந்த திருதாஷ்டிரர் பார்க்க விரும்பினார். யுத்த பூமியில் நடக்கும்
எல்லா காட்சிகளையும் அரண்மணையில் இருந்தபடியே வர்ணிக்கும் சக்தியை சஞ்சயனுக்கு அளித்து
திருதாஷ்டிரரது ஆசையைப்பூர்த்தி செய்தவர் ஸ்ரீவேதவியாசர் தான். அவரிடம் அத்தனை
சக்தி இருந்தது.
வ்யாஸர்
கூற ஸ்ரீ கணபதி தன்னுடைய தந்தங்களில் மஹாபாரதம் இயற்றினார். இவ்விடம் பத்ரியில் மனா
என்னும் இடத்தில் வ்யாஸ குஹா என்று அழைக்கப்படுகிறது.
மூன்று
மதத்தினருக்கும் [அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம்] இவரே மூல குரு.
பகவத்
கீதையின் 10 ஆவது அத்யாயமான விபூதி யோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணன், முனிவர்களில் நான்
வியாசன் என்று கூறுகிறார்.
இதிஹாஸங்களான
ராமாயணம் வால்மீகி முனிவராலும், மஹாபாரதம் வியாச முனிவராலும் இயற்றப்பட்டவை. ராமாயணம்
24,000 ஸ்லோகங்களைக் கொண்டது என்றால், மஹாபாரதம் (அதில் அடங்கியுள்ள பகவத்கீதை (ம)
விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உட்பட) 1,00,000 ஸ்லோகங்களைக் கொண்டது என்றால் எவ்வளவு பெரிய சாதனை
என்று மலைக்கத் தோன்றுகிறது அல்லவா?
வியாசர்
முனிவர்களுக்கெல்லாம் முனிவர்; ரிஷிகளுக்கெல்லாம் ரிஷி. அதனால் தான் வியாச பூஜை, எந்த
வேதாந்தத்தைப் பின்பற்றும் ஸ்வாமிகளும் கடைப்பிடிக்க வேண்டிய நோன்பாக நடைமுறைப் படுத்தப்
பட்டுள்ளது.
வியாசருக்கு
எவ்வளவு பெரிய மகத்துவத்தைத் தந்துள்ளனர் என்றால், அவரை பகவான் வ்யாஸர் என்று அழைப்பதுடன்,
அவரை ”ஒரு தலை உடைய பிரம்மா ; இரு கை உடைய விஷ்ணு , நெற்றிக்கண் இல்லாத சிவன்"
என்று போற்றுகின்றனர் :
அசதுர்முகயத் ப்ரஹ்மா
அசதுர்புஜ விஷ்ணவே
அபால லோசனஃ சம்பு
பகவான் பாதராயண:।।
ஒவ்வொரு
வருடமும் ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக
குரு பரம்பரை பின்வருமாறு வரையறுக்கபட்டுள்ளது:
பரமேஸ்வரன் - ஸ்ரீமன்
நாராயணன் - சதுர் முக ப்ரஹ்மா - வசிஷ்டர் -
சக்தி - பராசரர் - வ்யாஸர் - சுக ப்ரஹ்மம்
- கௌட பாதர் - கோவிந்தா பகவத் பாதர் - ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யர் என்று வருகிறது.
தினமும் அதி காலையில் இந்த குரு பரம்பரையை நினைத்து வணங்கினால்
சகல தேவதைகளை வணங்கிய பலன் கிடைக்கும்.
வ்யாஸம் வஸிஷ்ட நஃதாரம்
சக்தேஃ பௌத்ரம் அகல்மஷம்।
பராசராத்மஜம் வந்தே
சுகதாதம் தபோநிதிம்
வ்யாஸாய விஷ்ணு ரூபாய
வ்யாஸ ரூபாய விஷ்ணவே।
நமோவை ப்ரஹ்ம நிதயே
வாசி'ஷ்டாய நமோ நம:।।
மிகவும் எளிமையாகவும் நல்ல நடையுடன் உள்ளது. நன்றி
ReplyDeleteமிகவும் அருமையான பதிவு மகாபாரதம் இயற்றியவர் வியாசர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் பதினெட்டு புராணங்கள் இயற்றியதும் வியாசர் என்பது இன்று தான் புரிந்தது நிறைய விபரக்குறிப்புகுறிப்பாகபுராண/இதிகாசங்கள்வாயிலாகவெளிப்படுத்யுள்ளீர்கள வாழ்த்துக்கள் உங்கள் ஆன்மீக பணி தொடர என் வாழ்த்துக்கள்
ReplyDeleteNicely narratted. Thank you. Sri Gurupyo Namaha🙏
ReplyDeleteSimply super
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு. ஜெய் சாய் ராம்
ReplyDeleteVedha vyasa is author of Mahabaratham and many more divine religious puranas.Mahabaratham is considered to be the longest epic.Moreover the author is himself participating in the epic. Therefore the life of vedha vyasa is unique. Very nice Raghu.
ReplyDeleteGreat and excellent info. ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ!!
ReplyDelete🙏🙏 அருமையான மற்றொரு பதிவு. நன்றி.
ReplyDeleteNice one Raghu. Where is the reference for guru parampara that you had mentioned
ReplyDeleteThis is the guru paramapara for smarthas that mentioned in adhvaitha sampradaya.
Deleteமிகவும் அருமையான பதிவு . வாழ்த்துக்கள்
ReplyDeleteExcellent presentation. So many unknown information recd. through this article. God bless you.
ReplyDeleteGood presentation
ReplyDeleteவேதவியாசர் பற்றிய இவ்வளவு செய்தியா! மிக அருமை.
ReplyDeleteமிகவும் எளிமையான நடை. Bhagwan vyaasar பற்றி அறியாத மிக அரிய தகவல்கள், அவருடைய புகைப்படம் அருமை. நன்றி ஓம் நமோ ஸ்ரீ குருப்யோ நமஹ
ReplyDeleteExcellent well narrated about vyasar thanks
ReplyDeleteBhargavi
வேத வியாசரைப் பற்றிய பிரமிப்பூட்டும் விஷயங்கள். இது ஆசிரியரின் அயராத உழைப்பையும், அவருடைய ஆன்மீக ஈடுபாட்டையும் காட்டுகிறது.
ReplyDeleteஇன்னும் பல இந்துமத பெருமைகளை ஆசிரியர் வெளிக்கொண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் ஆவலும் தோன்றுகிறது.