இந்து
சமயத்தில் சாதுர்மாஸ்ய வ்ரதம் என்பது துறவிகள் மழைக்காலமான ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி
வரை, நான்கு மாதங்கள் ஒரே இடத்தில் தங்கி, வேத வேதாந்தங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள். இந்த மாதங்களில் துறவிகள்
உணவு முறையில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்வார்கள். முதல் மாதம் உணவில் காயும்
பழங்களும் இருக்கும். இரண்டாம் மாதம் பால் தவிர்ப்பார்கள். மூன்றாம் மாதம் தயிரை தவிர்ப்பார்கள்.
நான்காம் மாதம் பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.
துறவிகள், வெளியூர்களுக்குச் சென்றால் ஓர் இரவுக்கு
மேல் தங்கக் கூடாது. அதிகபட்சம் மூன்று நாள் தங்கலாம் என்றாலும், மழை மாதத்தில் ஒரே
இடத்தில் நான்கு மாதங்கள் தங்கி இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரங்கள். ஏனெனில், மழைக்
காலத்தில்தான் பூச்சி, புழுக்கள் உட்பட ஊர்வனவை வெளியில் வரும். அவற்றைத் தெரியாமல்
காலால் மிதித்துக் கொன்றுவிடும் பாவத்தைக் கூட துறவிகள் செய்யக்கூடாது என்பதற்காகவே
இந்த விதிவிலக்கு.
இல்லறத்தார், சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட பீடாதிபதிகள் ஒருவரையாவது இந்த நான்கு மாதத்தில் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டும். த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய கோட்பாடுகளை முறையே கைக்கொண்ட, ஆனந்த தீர்த்தர் என்ற மத்வர், ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோர் வழி வந்தவர்கள் அனைவரும் இந்த சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்வார்கள்.
இல்லறத்தார், சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்ட பீடாதிபதிகள் ஒருவரையாவது இந்த நான்கு மாதத்தில் ஒரு முறையேனும் சென்று தரிசிக்க வேண்டும். த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் ஆகிய கோட்பாடுகளை முறையே கைக்கொண்ட, ஆனந்த தீர்த்தர் என்ற மத்வர், ஆதிசங்கரர், ராமானுஜர் ஆகியோர் வழி வந்தவர்கள் அனைவரும் இந்த சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்வார்கள்.



(1) மது அருந்தாமை
(2) தகாத பாலுறவில் ஈடுபடாமை
(3) மாமிசம் உண்ணாமை
(4) சூதாடாமை











நாமும் இந்த சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து ஸ்ரீமன் நாராயணனின் அனுக்கிரஹம்
பெறுவோம்.
அத்புதமான பதிவு.
ReplyDeleteSuper, பலரும் அறியாத விஷயம். தங்களின் பயணம் தொடரட்டும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks for spiritual information.
ReplyDeleteHereafter, everyday I will chant Rama and Krishna nama.
Extraordinary information given by you regarding Sathurmatha viratham you are explained how to perform the viratha in a simplest way Thank you Raghu sir God bless you sir Iam egerly expecting your next blog
ReplyDeleteThanks.Very informative.
ReplyDeleteஅருமை.ஆனால் அவர்களைப் போல் வேண்டாத உணவைத் தவிர்க்கலாம். ஆனால் சிலவற்றைத் தவிர்க்க முடியாதே. முயற்சி செய்வோம்.
ReplyDeleteஉங்களின் பதிவு மிகவும் நன்றாக உள்ளது .
ReplyDeleteஅற்புதமான பதிவு. மாதங்களின் சமஸ்கிருத பெயர்களுக்கு இணையான தமிழ் மாத பெயர்களையும் குறிப்பிட்டால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteஇந்துமத விரோதிகளால் திரித்து கூறப்படும் சமஸ்கிருத மந்திரங்களுக்கு தகுந்த விளக்கம் அளித்தால் அவர்களுக்கு தக்க பதிலடியாக இருக்கும்.
தங்கள் வினாவிற்கு விடை அளித்து விட்டேன். மிக்க நன்றி.
Deleteநன்றி ரகு. நல்ல பதிவு.
ReplyDeleteGood narration. Months can be put in tamil as well for better understanding of everyone. Dakshinayana Punyakalam will start during this period (i.e. Sun God will change His direction of horses towards South. Sri Gurubhyo Namaha
ReplyDeleteதங்கள் வினாவிற்கு விடை அளித்து விட்டேன். மிக்க நன்றி.
ReplyDelete