சப்த ரிஷிகளில் மிக ச்ரேஷ்டரான அத்ரி மகரிஷிக்கும்
பதிவ்ரதா சிரோன்மணியான அனுஸுயா மாதாவிற்கு மும்மூர்த்திகளின் அம்சமாக பிறந்தவர்
ஸ்ரீ தத்தாத்ரேயர்.
குரு பரம்பரை என்பது ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் இருந்துதான்
ஆரம்பம்.
சூலம் ஏந்திய ருத்ர அவதாரி. ஸ்ரீ குரு சரித்திரம், ஸ்ரீ
பாத ஸ்ரீ வல்லப சரிதம்ருதம் என்னும்
மகாபுராணம் இவரை பற்றி பல அறிய தகவல்களை நமக்கு அளிக்கிறது. அவ்வளவு எளிதாக
யாராலும் இவ்விரண்டு சரிதங்களை பாராயணம் பண்ண முடியாது. அதிலும் சப்தாக பாராயணம்
அதி ஸ்ரேஷ்டம். நாம் நினைத்த கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேறும்.
மிகவும் ஆச்சாரமாக அனுஷ்டித்தல் அவசியம். நிரந்தர லட்சுமி மற்றும் குரு கடாக்ஷம் ஸ்ரீ குரு சரித்திரம், ஸ்ரீ பாத ஸ்ரீ
வல்லப சரிதம்ருதம் பாராயணம் மூலம் கிடைக்கும். நமது இல்லத்தில் பூஜை அறையில் இவ்விரண்டு
புத்தகங்கள் இருப்பது பரம ஐஸ்வர்யம்.
திருமூர்த்திகளின்
அவதாரமான அவரே குருக்களுக்கு எல்லாம் குருவான சத்குரு ஆவார். இந்த பூமியில்
குரு மற்றும் சிஷ்யர்களுக்கு இடையே எப்படிப்பட்ட உறவு இருக்க வேண்டும், ஒரு
குருவின் மூலமே மக்களின் மன நிலையை ஆன்மீக வழியில் செலுத்திய கலிகாலத்தில் கலியின்
தாக்கத்தினல் விளையும் தீமையை எப்படி அழிக்க வேண்டும் போன்றவற்றை நடைமுறையில்
எடுத்துக்காட்டவே தத்தாத்திரேயர் தாமே ஒரு குருவாக பல அவதாரங்களை எடுத்துக் காட்டி
உள்ளார். தத்தாத்திரேயரே ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபாவாகவும், ஸ்ரீ நருசிம்ம
ஸரஸ்வதி ஸ்வாமிகளாகவும், ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளாகவும், ஸ்ரீ மானிக்பிரபு மற்றும் ஷீரடி சாயிபாபா போன்ற பல ரூபங்களில்
தோன்றி முதல் குரு பரம்பரையை உருவாக்கினார்.
ஆதி குரு ஸ்ரீ தத்தாத்ரேயர் கலியுகத்தில் எடுத்த
முதன்மை அவதாரம் ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர். மகா தபஸ்வி யதிகளில் ஸ்ரேஷ்டர்.
அபரிமிதமான பூர்வ ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே இவரை பற்றி நாம் சிறிதளவாவது அறிய
முடியும். வெளி உலகத்திற்கு அதிகம் தெரியாமல் குப்தமாக மற்றும் சுக்ஷும ரூபமாக
அருளும் பரம குரு.
அவதார நோக்கம்
ஓர்
அமாவாசை தினத்தன்று அவர்கள் வீட்டில் சிரார்த்தம் (இறந்தவர்களுக்கு திதி
கொடுப்பது) நடைபெற்றது. பிராமண முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம்
வரிசையாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. திவசச் சமையல் தயாராக இருந்தது. பிராமணர்கள்
உணவருந்த வேண்டியது தான் பாக்கி. அந்த சமயத்தில் ஒரு துறவி அவ்வீட்டு வாசலில்
வந்து, பவதி பிட்சாந்தேஹி! என்று சொல்லிக்கொண்டு நின்றார்.
ஆசார முறைப்படி இறந்த முன்னோர்களுக்குத் திதி
கொடுக்கும் நாளன்று வெளி ஆட்கள் யாருக்கும் உணவளிக்கக்கூடாது. பிட்சை
அளிக்கக்கூடாது. மேலும் வந்திருக்கும் பிராமணர்கள் உணவருந்தி, காக்கைகளுக்கு
அன்னமிட்ட பிறகு தான், வீட்டில் உள்ளவர்களே சாப்பிட முடியும். மிகுந்த
சிரத்தையுடன், கூடுதல் கவனத்துடன் பிராமணர்கள் பொறுப்பாகச் செய்ய வேண்டிய சடங்கு
இது.
இவ்வளவும் சுமதி நன்றாக அறிந்தவள்
தான். என்றாலும் வாயிலில் நின்ற துறவிக்கு உணவளிக்காமல் அவரைப் பசியுடன்
திருப்பியனுப்ப அவள் விரும்பவில்லை. எனவே, வகுக்கப்பட்ட நியமங்களை மீறி அவள்
பிராமணர்கள் சாப்பிடும் முன் பிட்சுவாக வந்தவருக்கு அன்னமிட்டாள்.
கணவனுக்கு அடங்கிய நிலையில் குலதர்மத்தை கடைப்பிடிக்க
வேண்டிய கட்டாயம் இருந்தும் துணிவுடன் பசியறிந்து உணவு அளித்த சுமதியின்
முன் பிட்சை பெறுபவராக, மும்மூர்த்திகளின் ஒருமித்த மகானாகிய ஸ்ரீ தத்தாத்ரேயர்
நின்றார். அவளது தாய்மைப் பண்பைப் பாராட்டி. தாயே! உன் சேவையைக் கண்டு நான்
மகிழ்ந்தேன். வேண்டும் வரத்தைக்கேள்! என்று கூறினார்.
அவள் அவரை வணங்கிப் பலவிதமாகத் துதித்தாள். பிறகு
ஸ்வாமி! தாங்கள் என்னைத் தாயே! என்று அழைத்தீர்கள். அந்த வாக்கு பொய்க்கக்கூடாது.
உம்மைப் போன்ற ஞானியை நான் மகனாகப் பெற வேண்டும். ஏனென்றால் எனக்குப் பிறக்கும்
குழந்தைகள், பிறந்த சில காலத்திற்குள்ளாகவே இறந்து விடுகின்றன. பிழைத்து உயிர்
வாழ்கின்ற குழந்தைகள் குருடாகவும், முடமாகவும் இருக்கின்றன! என்று கூறிக் கண்ணீர்
விட்டாள்.
அவள் வேண்டுகோளை வந்திருந்த தத்தர் ஏற்பதாகக் கூறி
அதில் ஒரு மாற்றத்தையும் கூறினார். அம்மா! உன் விருப்பப்படி எம்மைப் போன்ற ஒரு
ஞானி மகனாகப் பிறப்பான். ஆனால் அவன் அநேக நாள் உன் வீட்டில் தங்க மாட்டான். பெரிய
ஞானியாகி உன் துன்பங்களைப் போக்கி, உலகில் ஞான மார்க்கத்தைப் பரப்புவான்! என்று
சொல்லி மறைந்தார்.
பக்தையான சுமதி நடந்தவற்றை
அப்படியே தன் கணவரிடம் கூறினாள். இருவரும் மனம் மகிழ்ந்து, நெகிழ்ந்து இறைவனை
வழிபட்டுப் போற்றித் துதித்தனர். பிறகு பக்தியுடன் ஸ்ரீ தத்தரின் அவதாரத்தை
எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
சுமதி தன்னுடைய கணவனின்
அனுமதி இல்லாமல் சிரார்த்த (திதி) தினத்தில் பிட்சை அளித்துவிட்ட போதிலும், தோஷம்
ஏதும் ஏற்படவில்லை. மாறாக எந்த சிரார்த்தம் செய்தாலும் முடிவில் ஏகோ விஷ்ணு! என்று
சொல்லி அந்த விஷ்ணுவிற்கு அர்ப்பணம் செய்கின்றோமோ எந்த விஷ்ணுவிற்கே அவள்
அன்னமிட்டதால், பித்ருக்கள் சுவர்க்கத்தை அடைந்து பிறவிப் பிணி தீர்த்தனர்.
எனவே, மதிய வேளையில் யார் பிட்சைக்கு வந்தாலும்,
ஒன்றும் இல்லை போ! என்று சொல்லாமல் நம் சக்திக்கு ஏற்றவாறு பிட்சை இட வேண்டும்.
அந்த நேரத்தில் வீட்டிற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உணவிட்டு உபசரிக்க
வேண்டும். தத்தர் எந்த ருபமாக வருவார் என்று சொல்ல முடியாது.
ஸ்ரீ தத்தர்
அளித்த வாரத்தின் படி, கி.பி. 1320 ஆண்டு ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ப்ரம்மஸ்ரீ கண்டிகோட்டா
அப்பலராஜ சர்மா அவர்களுக்கும் அகண்ட லக்ஷ்மி சௌபாக்யவதி சுமதி மஹாராணிக்கும் மூன்றாவது
குழந்தையாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் என்னும் ஊரில்
பிறந்தார். பிறந்த குழந்தையின் கால்களில் மீன் மற்றும் ஆமை மற்றும் சங்கு போன்ற வடிவ
ரேகைகள் இருந்தன. அப்படிப்பட்ட ரேகைகள் சாதாரண மானிடர்களுக்கு இருக்காது. தப்பித்தவறி
யாருக்காவது சங்கு ரேகை இருக்க முடியும். அதைக் கொண்டவர்கள் பெரும் வித்வான்களாக இருப்பார்கள்.
ஆனால் கூர்ம அவதாரத்தைக் குறிக்கும் ஆமை மற்றும் மச்சாவதாரத்தைக் குறிக்கும் மீன் போன்ற
உருவ ரேகைகள் மானிடர்களுக்கு இருக்காது. அவை இரண்டும் பெரிய மகான்களாக உருவெடுக்க
உள்ளவர்களுக்கும், தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே இருக்கும். மேலும்
அந்தக் குழந்தையின் ஜாதகத்தை ஆய்வு செய்த பண்டிதர்கள் அந்த குழந்தை நிச்சயமாக தெய்வாம்சம்
பொருந்தியது என்றும், பிற்காலத்தில் பெரும் ஞானியாக உருவெடுப்பார் என்றும், பல சீடர்களைக்
கொண்டு அவர்களுக்கு தர்ம நெறிகளை போதிக்கும் ஆசானாக இருந்து பெருமை மிக்கவராகவும் விளங்குவார்
என்று கூறினார்கள். அதைக் கேட்ட பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்படியாக
நல்ல அம்சங்களோடு பிறந்த குழந்தைக்கு ஸ்ரீபாதா என்று பெயரிட்டார்கள்.
வேதம், சாஸ்திரங்களில்
அபார ஞானம், தேஜஸ், வீர்யம், ஸ்ரீ பாதருக்கு சிறு வயதிலே இருந்தது கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
இவருக்கு திருமணம்
செய்துவைக்க பெற்றோர்கள் முடிவு எடுத்ததை அறிந்த ஸ்ரீ பாதர், ”அம்மா, என்னை தயவு செய்து
தவறாக நினைக்காதே. நான் உனக்கு மகனாகப் பிறந்ததே
உனக்கு நல்லதொரு மகன் வேண்டும் என்று நீ வேண்டியதினால்தான். இந்த ஜென்மத்தில் நான்
மனித குல மேம்பாட்டுக்கு என்னை அர்பணித்துக் கொண்டுதான் உன் மூலம் வெளி வந்தேன். அதற்காக
நான் உன்னைக் கை விட்டு விடுவேன் என்று தவறாக நினைக்காதே. மனித குலத்தில் நீங்களும்
ஒன்றுதானே. நான் ஏற்கனவே யோக லஷ்மியை மணந்து கொண்டு விட்டவன் (அதாவது தான் தத்தாத்திரேயரின்
அவதாரம் என்பதை மறைமுகமாக எடுத்துக் காட்டினார். தத்தாத்திரேயரின் மனைவியே லஷ்மி தேவியின்
இன்னொரு அவதாரமான யோக லஷ்மி ஆவார்). ஆகவே எதற்கும்
அஞ்சாமல் நான் விரும்பும் வாழ்கையை கைகொள்ள எனக்கு நீங்கள் அனுமதி தர வேண்டும். என்
சகோதரர்களை கைவிட்டு சென்று விடுவேன் என்று எப்படி நீங்கள் நினைத்தீர்கள்? என்னை நம்பியவர்களை
நான் எப்படிக் கைவிடுவேன் என்று நினைக்கின்றீர்கள்? கவலை படவேண்டாம். அவர்களை பாதுகாப்பது
என் பொறுப்பு”.
இப்படியாகக்
கூறிய பின்னர் தனது இரண்டு சகோதரர்களையும் அருகில் வருமாறு சைகை காட்டினார். என்ன அதிசயம்
நடக்கிறது என்பது புரியாதது போல குருடராக இருந்தவரும் சைகையை புரிந்து கொண்டு அவர்
அருகில் செல்ல முடமானவரும் அவர் அருகில் சாதாரணமாக நடந்து சென்றதும் அவர்கள் இருவரின்
தலை மீதும் தனது கையை வைத்து ஸ்ரீ பாத வல்லபா
ஆசிர்வதிக்க, இரண்டு சகோதரர்களும் திடகார்த்தமான உடலுடன் உள்ள ஆண் மகன்களாக உருமாறினார்கள்.
இரு சகோதரர்களும் தமது சகோதரர் தங்களை விட வயதில் இளையவர் என்றாலும் கூட ஸ்ரீ பாத வல்லபாவின்
கால்களில் விழுந்து வணங்கினார்கள். அதைக் கண்ட பெற்றோர்கள் ஆனந்தம் அடைந்து அழுதார்கள்.
அங்கிருந்து
கிளம்பி வடநாட்டிற்கு சென்றவர் விந்திய மலை, திரிவேணி சங்கம், காசி, கயா, ஹரித்துவார்,
ரிஷிகேஷ், பத்ரிநாத், கேதர்நாத், என பல புனித
இடங்களுக்கும் சென்று அங்கிருந்த நதிகளில் நீராடி, ஆலயங்களை தரிசித்தப் பின் தத்தாத்திரேயர்
வசித்து வந்த இடமான சஹ்யாத்ரி மலை அடிவாரத்தை அடைந்தார். அங்கு தரிசனத்தை முடித்துக்
கொண்டப் பின் அங்கிருந்துக் கிளம்பி கோகர்ணம்
எனும் சென்றார். அது அவருக்கு முக்கியமான விஜயமாக அமைந்தது. வழி நெடுக அவருடைய தெய்வீக அருளை உணர்ந்து கொண்ட பல சாது, சன்யாச முனிவர்கள் அவரிடம் ஆசிகளைப்
பெற்றார்கள். அதை அறிந்து கொள்ள முடிந்தவர்கள் அவரது மஹான் எனும் தேஜஸ்சைக் கண்டு அவருக்கு சிஷ்யர்கள் ஆயினர். அவர் வட நாடுகளுக்கு சென்று வந்தது முதல் அவரது
சீடர்களினால் ஸ்ரீ பாத வல்லபா (வல்லபா என்றால் வலிமையானவர், திறமையானவர் என்று பொருள்)
என்று அழைக்கப்படலானார்.
ஸ்ரீ
பாத ஸ்ரீ வல்லபர் தான் பிரபஞ்சத்திலிருக்கும் ஸ்தாவர, ஜங்கம வஸ்துக்கள்
அனைத்திற்கும் மூல காரணம். அவர் ஒரு ஆலமரம் போன்றவர். அவரது துணை, அம்ச/பின்ன
அவதாரங்கள் அந்த மரத்தின் கிளைகள் போன்றவையாகும். ஆலமரத்தின் வேர்கள்
கிளைகளிலிருந்து தலைகீழாக தோன்றினாலும் தாய் மரமே எல்லாவற்றிற்கும்
அடிப்படையாகும். தேவர்கள் முதல் பூத பிசாசுகள் வரை உலகிலுள்ள அனைத்து
உயிரினங்களுக்கும் அவரே அடைக்கலம் கொடுப்பவர். புகலிடம் கொடுப்பவர். அனைத்து
சக்திகளும் அவரிடமிருந்தே தோன்றி அவரையே தஞ்சம் புகுகின்றன.
அநேக
ஜென்மங்களில் செய்த பாவங்கள் ஒழிந்த பிறகு புண்ணியங்கள் பலன் கொடுக்கத் துவங்கும்
பொழுது தான் ஒருவருக்கு தத்தரிடம் பக்தி பிறக்கும். தத்தரிடம் பரிபூரண பக்தி
ஏற்படும்பொழுது ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் தரிசனம், தொட்டு ஆசிர்வதித்தல்,
பேசுதல் இவற்றால் அருட் செல்வத்தை எந்த வயதிலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும்
பெறலாம்.
ஸ்ரீ
ஸ்ரீபாதர் சத் புருஷர்களுக்கு எளிதாக கிடைக்ககூடிய தங்கச் சுரங்கம். பாவம்
செய்பவர்களுக்கோ, தர்மத்தை மீரியவர்களுக்கோ அவர் ஒரு யமதர்மராஜா மாதிரி. ஸ்ரீ
ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் பெயரைச் சொன்னாலேயே, நாம் உறுதியாக அவரது அருளைப் பெறலாம்.
நாம் அனைத்து துன்பங்களிலிருந்தும் இழப்பிலிருந்தும் விடுதலை பெறலாம்.
சித்தர் மற்றும் யோகிகளுக்கு இவர் ஈஸ்வரன் அதனால் "யோகீஸ்வரன்"
எனப்படுகிறார்.
ஸ்ரீ
பாதரின் பக்தர்களுக்கு ' முடியாத காரியம் ' என்று ஒன்று இல்லவே இல்லை. நெற்றியில்
எழுதியுள்ளத் தலை எழுத்தை மாற்றி எழுதும் வலிமை வேறு எந்த தெய்வத்துக்கும் இல்லை.
அனால் ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதாரமான ஸ்ரீ ஸ்ரீபாதர், தன் பக்தனின் துன்பத்தைக்
கண்டு மனம் இறங்கி பிரம்மாவை அவன் தலை எழுத்தை அழித்துவிட்டுப் புதிய தலையெழுத்தை
எழுதுமாறு உத்தரவிடுவார்....
."இன்று
என் பக்தன் இறக்க வேண்டிய நாளாகும். நான் அவனது ஆயுளை மேலும் இருபது ஆண்டுகள்
நீட்டித்துள்ளேன். இந்த முடிவை அவனுடைய பக்தியின் காரணமாக அளிக்கிறேன் ."-
ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஜில்லாவில் இயற்கை எழில் கொஞ்சும்
பிட்டாபுரத்தில் உள்ளது குக்குடேஸ்வரர் திருக்கோவில். மகிமை வாய்ந்த 18 சக்தி பீடங்களுள்
பத்தாவது பீடமாகவும் பாத கயா தலமாகவும் புகழ்பெற்ற பிட்டாபுரம் புராதன ஆலயங்களுக்குப்
பெயர் பெற்ற நகரம் சக்தியின் உடல் பாகத்தில் பிருஷ்ட பாகம் விழுந்த இடமாதலால்
பீடிகாபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி பிட்டாபுரம் ஆனது. இந்த பிட்டாபுரத்தில்தான்
இவரின் மூல மஹாசமஸ்தானம் உள்ளது.
ஸ்ரீ
பாதரின் சத்திய வார்த்தைகள் சில...
*
நானே அனைத்து ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் வடிவம் ஆவேன்.
*
என் செயல்கள் யாவும் உங்கள் குணம் சத்கர்மா, பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே
அமையும். என்னை முழுமையாக சரணடைந்த பக்தனை நான் ஒருபோதும் கை விடமாட்டேன்.
வெகுதூரத்தில் வசிக்கும் என் பக்தனையும் என் ஷேத்திரத்திற்கு
வலுக்கட்டாயமாக இழுத்து வந்து விடுவேன். ரிஷி மூலம் நதி மூலம் கேட்கக்
கூடாது.
*
நான் தான் ஸ்ரீ தத்தாத்ரேயர். என் தத்துவம் மட்டுமே கோடான கோடி அண்டங்களில்
வியாபித்து உள்ளது. திசைகளே எனக்கு ஆடைகள். நான் ஒரு திகம்பரர். எவனொருவன்
உடல் மனம் சொல் தூய்மையுடன் " தத்த திகம்பரா! ஸ்ரீபாத ஸ்ரீ வல்லப
திகம்பரா! நரசிம்ம சரஸ்வதி திகம்பரா ! " என்று கூறுகிறானோ அங்கு
நான் சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.
*
எவனொருவன் நான் பிறந்த புனிதமான வீட்டில் தங்குகிறானோ அவன் நிச்சயமாக பரிசுத்தனாக
மாறிவிடுவான். அவனின் முன்னோர்கள் புண்ணிய லோகங்களை அடைவார்கள் .
*
பல்வேறு பிறவிகளில் செய்த புண்ணியத்தின் விளைவாகவே ஒருவன் பீடிகாபுர
அக்ரஹாரத்தில் அடியெடுத்து வைக்கிறான். என்னுடைய சக்தியைத் தெரிந்துக்கொள்ள
முதலில் நீங்கள் ஆன்மீகத் தேடுதலில் தீவிர ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். அதன்
பின்னரே என் சக்தி, இரக்கம், கருணை, அன்பு, பாதுகாப்பு, நான் பாவங்களிலிருந்து
மீட்பதை நன்கு தெரிந்து கொள்ள முடியும்.
*
நீங்கள் அனைவரும் என் விருப்பப்படியே அந்த அந்த நிலையில் இருக்கிறீர்கள்.
நான் நினைத்தால் ஆண்டியையும் அரசனாக்குவேன். அரசனை ஆண்டியாக்குவேன். என்னை
நம்பியுள்ள பக்தனுக்கு அவன் என்ன கேட்டாலும் தருவேன். நான் 'தேவை' என முடிவு
செய்து விட்டால் மண்ணையும் விண்ணாக்குவேன். விண்ணையும்
மண்ணாக்குவேன்.
*
என்னுடையவன் என எனக்கு யாரைப் பிடிக்குமோ அவனை தலை முடியைப் பிடித்து
பீடிகாபுரத்திற்கு இழுத்து வந்து விடுவேன். என்னுடைய விருப்பம் இன்றி எவரும்
என் பீடிகாபுரம் சமஸ்தானத்திற்கு வர இயலாது. அவர் எவ்வளவு பணக்காரராக
இருந்தாலும் மிகப் பெரிய யோகியாக இருந்தாலும் சரி. இது உறுதியான
சத்தியமாகும். நான் மட்டுமே யார் எப்பொழுது எத்தனைப் பேராக எந்த மாதிரி
பயணம் செய்து என்னை தரிசிக்க வரவேண்டும் என்பதை முடிவு செய்வேன். அது என்
விருப்பமே.
*
இந்தப் பிரபஞ்சப் படைப்பில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கூலிக்காரன்தான்.
நான் தான் முதலாளி. நான் மகிழ்ச்சியடைந்தால் உங்களுக்கு உரியதைவிட மிக
மிக அதிகமாகவே தருவேன். நான் கோபம் அடைந்தால் எவ்வளவு குறைத்துக்கொண்டு
மிதத்தை மட்டும் தான் தருவேன்.
*
மனமுருகி நான் பாவங்களிலிருந்து விடுபட்டவன் என உணர்ந்து, என்னை அடைக்கலம்
அடைந்து என்னை அன்புடன் , தத்த திகம்பரா ! ஸ்ரீபாத வல்லப திகம்பரா ! என்ற
அழைத்தால் அந்தச் க்ஷ்ணத்திலிருந்தே உங்களது பாவங்களை எரித்துப்
பொசுக்கி உங்களை புண்ணியவான் ஆக்குவேன்.
*
நான் என்னுடைய பக்தர்களுக்கு தாசானுதாசன் ஆவேன். என்னை தன் மனதில்
சிறை பிடிப்பவனே மிக மிகச் சிறந்த சக்ரவர்த்தி ஆவான். அப்படிப்பட்ட
பக்தனுக்கு மூவுலகங்களையும் ஆளும் ஸ்ரீ பரமேஸ்வரனே கூட வேலைக்காரன் போலச்
சேவை செய்வார்.
*
நான் ஒருவனே அனைத்து தர்மங்கள் மதங்கள் தத்துவங்கள் அனைத்திலும் சுயமாகப்
பிராகாசிப்பவனாவேன். அனைத்து தெய்வங்களிலும் தெய்வீக சக்திகளிலும்
நுணுக்கமாகப் பிரகாசிப்பவன் நானேயாவேன். நான் ஒருவனே உங்கள் அனைவரின்
வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் அந்தந்த உருவங்களின் மூலம் பெற்றுக்
கொள்பவன் ஆவேன். நான் ஒருவனே தான் அனைவருக்கும் அருள் பாலிப்பவன்.
*
என் புனித வரலாற்றை (ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரித்ராம்ருதம் ) படித்தால் ஆசைகள்
நிறைவேறும். எல்லாத் தடைகளும் விலகும். இந்த சரித்ராம்ருதத்தை ஒரு சராசரிப்
புத்தகம் என்று நினைத்துக் கொள்ளாதே. இது ஒரு தெய்வீகச் சைத்தன்யத்தின்
உயிருள்ள சக்திப் பிராவகம் ஆகும். நீ பக்தியுடன் இதைப் பாராயணம்
செய்யும்போது அந்த எழுத்துகளின் வலிமையானது என்னுடைய மானசீக
சைத்தன்யத்திற்குள் பாயும். உனக்கு தெரியாமலேயே உனக்கு என்னுடன் ஒரு
தொடர்பு எற்பட்டுவிடுவதால் உன்னுடைய நியாயமான கோரிக்கைகள், பிரார்த்தனைகள்
ஆசைகள் அனைத்தும் என்னுடைய கருணையால் நிறைவேற்றப் பட்டுவிடும். இந்த
புத்தகத்தை பூஜை அறையில் வைத்திருந்தால் துரதிர்ஷ்டமும் தீய சக்திகளும்
அங்கிருந்து துரத்தி அடிக்கப்பட்டுவிடும்.
ஸ்ரீ ஸ்ரீபாதர் தன்
பக்தர்களுக்கு அளித்த பன்னிரண்டு வாக்குறுதிகள்.
1.
என் வாழ்க்கை சத்சரித்திரத்தை பக்தியுடன் படிக்கும் ஒவ்வொரு இடத்திலும் நான்
சூக்ஷ்ம ரூபத்தில் இருப்பேன்.
2.
மனம், சொல், செயல் இவற்றால் என்னை பக்தியுடன் சரண் அடைந்தவனை நான் கண் இமை கண்ணைக்
காப்பது போலக் காப்பேன்.
3.
தினமும் மதியம் பீடிகாபுரத்தில் நான் பிக்ஷை எடுப்பேன். என் வருகை ரகசியமானது.
4.
என்னை இடைவிடாது தியானிப்பவர்களின் அனைத்து கர்மக் குவியல்களையும் எரித்து
சாம்பலாக்கிவிடுவேன். பல்வேறு ஜென்மங்களில் சேர்த்து வைத்திருந்த கர்மாக்களையும்
எரித்துப் பொசுக்கிவிடுவேன்.
5.
" ஓ ! ராமச்சந்திரா! சாப்பாடு போடு!" என்று பிக்ஷை கேட்பவருக்கு உணவு
அளித்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
6.
நான் ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் ! ஸ்ரீ மஹாலக்ஷ்மி அனைத்து சௌபாக்யங்களுடன்
என் பக்தர்கள் வீட்டில் பிரகாசமாக ஜொலிப்பாள்.
7.
உங்கள் மனம் தூய்மையாக இருந்தால் என் அருள் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.
8.
எந்த ஒரு கடவுளை வழிபட்டாலும், எந்த ஒரு சத்குருவின் வழி நடந்தாலும் எனக்கு
சம்மதமே.
9.
உங்களின் அனைத்து பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும், என்னை வந்தடையும். என்னுடைய
அருளானது உங்களுக்கு நீங்கள் வழிபடும் தெய்வம் வழியாகவோ, உங்களுடைய சத்குருவின்
வழியாகவோ உங்களை வந்தடையும்.
10.
ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் இந்த பெயருக்கும் உருவத்திற்கும் மட்டுமே கட்டுப்பட்டவர்
அல்ல. என்னுடைய தெய்வீக விஸ்வ ரூபத்தை அனைத்து தெய்வங்களின் உருவமாகவும் என் உடல்
பகுதிகளை அனைத்து சக்திகளாகவும் ஆன்மீக யோக சாதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
11.
என்னுடையது அவதாரம் முழுமையான யோக அவதாரமாகும். மிகச் சிறந்த யோகிகளும்,
சித்தர்களும் என் மீது இடைவிடாது தியானம் செய்து கொண்டிருப்பார்கள்.
12. என்னுடைய ஆதரவை நாடினால் நான் உங்களுக்கு
கர்மத்தின் வழியையும் போதிப்பேன். உங்களை எப்பொழுதும் வீழ்ச்சியிலிருந்தும்
துன்பத்திலிருந்தும் காப்பாற்றுகிறேன்.
ஸ்ரீ பாத ராஜம் சரணம் பிரபத்யே !
திகம்பரா ஸ்ரீ பாத ஸ்ரீ
வல்லப திகம்பரா!
(இந்த
மந்திரத்தை எப்பொழுதுவேண்டுமானாலும் ஜெபித்தால் எல்லா துக்கங்களும் பாபங்களும்
அழிந்து போய்விடும்)
சித்த மங்கள ஸ்தோத்திர பாராயணம் செய்தால் இவரின்
தரிசனம் கிடைக்கும். என்னுடைய அடுத்த பதிவில் சித்த மங்கள ஸ்தோத்ரத்தை
அளிக்கிறேன்.
திருக்கோயில் அமைவிடம்:
SRIPADA SRIVALLABHA MAHASAMSTHANAM
(Department
of Endowment, Andhra Pradesh)
Venugopalaswamy Temple Street,
PITHAPURAM - 533 450
E.G.Dist. A.P., India.
Office
hours : 9-00 A.M to 2-00 P.M.
4-00 P.M to 9-00 P.M.
Phone : (08869) 250300
: (08869) 250900
: (08869) 252300
Very good narrative.
ReplyDeleteExpecting your siddha mangala stothiram very soon.
ReplyDeleteVery nice narrative anna. I feel blessed!
ReplyDeleteThis is well presented. Honestly I am learning something new in everyone of your blogs bld this is not any different. Keep up the great work.
ReplyDeleteBlogs and
ReplyDeleteபூர்வ புண்ணியம் 🙏 ஆண்டவர் அநுக்கிரகம் . அருட்பெருஞ்ஜோதி 🔥 ஶ்ரீ பாத வல்லபர் சரணம். நன்றி Raghu Raman sir.
ReplyDeleteOne more nice presentation
ReplyDeleteஅருமையான தகவல். வாழ்த்துகள்.
ReplyDeleteVery beautiful narration of Guruji.Best wishes.
ReplyDeleteGenerally we know Shri Sankarar ShriMadhuvar& Shri Ramanujar From your valuable presentation I know Shri Dattatreya is the AdhiGuru& inKaliyuga Shri Shri Pathashrivallabar is the first avatharsm for guruparampara Well narrated the history in asimple way Let us all follow His teaching I think before lockdown you & your brother had an opportunity to visit Pithapuram & getting dharshan there Excellent sir please continue your Anmeega pani
ReplyDeleteDigambara Digambara Sripada Srivallabha Digambara! Awesome presentation of Adi Guru Dattatreya Avathara. Sripada Srivallabha Guru Miracles cannot be described by Adisesha by his thousand heads. Guru is sarvam, very different, simple and nice narration. Really good article to read and get blessed by Sri Guru Dattatreya!!
ReplyDeleteExcellent
ReplyDeleteஆஹா அருமை. யாரேனும் முன்வந்து, குழந்தைகளும் இப்படிப்பட்ட அபூர்வ விஷயங்கள் உணர்ந்துகொள்ளும் வண்ணம் இவற்றை படக்கதைகளாக வெளியிடுவார்களா?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks..for the wonderful article.. Sri gurubhyo namah. Avadootha chinthana guru Deva Dutta ������
ReplyDeleteValuable information about Guru Dhattathreya in a simple & effective narration.
ReplyDeleteமிக அருமையான பதிவு. மிக்க நன்றி
ReplyDeleteமிக அருமை. மிகவும் நன்றி
ReplyDeleteI like this message" ஓ ! ராமச்சந்திரா! சாப்பாடு போடு!" என்று பிக்ஷை கேட்பவருக்கு உணவு அளித்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். Its a great and very interesting to read this articles. Thanks a Lot Mr. Raghu, Best Regards, Karthikeyan. N
ReplyDeleteமிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி.ஓம் சாய் ராம்
ReplyDelete