நமது பாரதம் எத்தனையோ ஆச்சர்யங்களையும் அதிசயத்தக்க நிகழ்வுகளையும்
தன்னகத்தே கொண்டுள்ளது என்றால் மிகையாகாது. மஹாபாரதம் என்னும் மாபெரும் இதிஹாசத்தில்
அப்படி கொட்டி கிடைக்கும் வைரங்கள் கோடானு கோடி. அப்பேற்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும்
ஓர் பதிவு.
மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் குந்திதேவியின் புத்திரன் என்ற இரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது.
கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில
நாட்கள் முன்பு தான் அறிந்திருந்தான்.
அதுவும் கிருஷ்ண பகவானின் லீலையால்!
மிகவும் நல்லவனான கர்ணனுக்கு ஏன் இப்படிப்பட்ட ஒரு
வாழ்வு?
இதற்கு விடை கர்ணனுடைய பூர்வ ஜன்ம இரகசியத்தில்
உள்ளது.
ஆம்! பூர்வ ஜன்மத்தில் கர்ணன் சஹஸ்ர கவசன் என்ற
அசுரனாக இருந்தான். என்றால் நம்ப சற்று கடினமாக உள்ளது அல்லவா? அவனின் அட்டூழியம் அதனால்
அதிகரித்தது. தேவர்களை துன்புறுத்தி மாபாதகம் செய்தான்.
பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின் படி அவனுடைய
சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது.
எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல
முடியாது.
அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள்
தவமிருந்து விட்டு, அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால்
ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும்.
இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும், போரும், யாகமும்
செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான்.
எனினும், இதனைச் சாமான்ய மனிதர்களால் சாதிக்க
இயலவில்லை.
எனவே, சஹஸ்ர கவசன் தேவர்களுக்கு செய்யும் கொடுமைகள்
அனைத்தும் தொடர்ந்தன.
அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி அசுர உபாதையை ஒழிக்க
உதவுமாறு வேண்டினர்.
விண்ணவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர்
கொடுமையை ஒழித்து அமரவாசிகளுக்கு ஆறுதல் உண்டு பண்ணத் திருவுளம் கொண்டு நர
நாராயணர்களாக (அதாவது நரனும் அவரே, நாராயணனும் அவரே) தனது சக்தியை இரண்டு
விதத்தில் வடிவமைத்தார். இப்படியாக அவதரித்தார்.
ஸஹஸ்ரகவசனை ஸம்ஹரிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி
செய்தனர்.
நரன் 12 வருடங்கள் தவம் புரிய, நாராயணர் அசுரனுடன்
போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி
செய்து 999 கவசங்களை நர, நாராயணர்கள் அறுத்து எறிந்தனர்.
இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது.
எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ரகவசன் சூரிய லோகம்
போய்ச் சேர்ந்தான். ‘தன்னைத் தேடி வந்து அபயம் கேட்டவன் அரக்கனாக இருந்தாலுமே! அவனுக்கு
அடைக்கலம் அளிக்க வேண்டிய கடமை தன்னுடையது’ என்பதை உணர்ந்த சூரிய தேவன். அவனைத்
தனது சூரிய லோகத்தில் இருக்குமாறு பணித்தார்.
சஹஸ்ரகவசன் தனக்கு அடைக்கலம் அளித்த சூரிய தேவனையே
தனது இஷ்ட தெய்வமாக பாவித்து வணங்கி வந்தான். சூரிய லோகத்திலேயே அவனது அப்பிறவி
முடிந்தது.
இந்த சஹஸ்ரகவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக
கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள (பூர்வ ஜன்ம கவசம்) ஒரு கவசத்தோடு பிறப்பெடுத்தான்.
இந்தக் கவசமும் அறுக்கப்பட வேண்டியதே!
இந்தக் காரியத்திற்காகவே பகவான் மகாவிஷ்ணு நர
ரூபத்தில் அர்ஜுனனாகவும், நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் ஜனித்தனர்.
12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது. அந்த
நரனுடைய 12 வருடத் தவமேயாகும்.
பகவான் ஸ்ரீமன் நாராயணனின் சுதர்சனத்தாலும் துளைக்க முடியாத வஜ்ரம் கர்ணனின் கவச குண்டலம். இந்த ரஹஸ்யத்தை அறிந்துதான் இந்திரனின் மூலம் எஞ்சியுள்ள ஓர் கவசத்தையும் யாசகமாக பெற்றார். தேர்ந்த ராஜதந்திரம் அது!!
க்ரிஷ்ணனால் மட்டுமே சாத்தியப்பட கூடிய மகா மகா ராஜதந்திரம்.
பகவான் ஸ்ரீமன் நாராயணனின் சுதர்சனத்தாலும் துளைக்க முடியாத வஜ்ரம் கர்ணனின் கவச குண்டலம். இந்த ரஹஸ்யத்தை அறிந்துதான் இந்திரனின் மூலம் எஞ்சியுள்ள ஓர் கவசத்தையும் யாசகமாக பெற்றார். தேர்ந்த ராஜதந்திரம் அது!!
க்ரிஷ்ணனால் மட்டுமே சாத்தியப்பட கூடிய மகா மகா ராஜதந்திரம்.
கவசம் நீங்கியதால் தான் அர்ஜுனனால் கர்ணணை கொல்ல
முடிந்தது.
நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னால் நமது
பூர்வ ஜென்ம தொடர்பு இல்லாமல் எதுவும் நடப்பது இல்லை.
பூர்வ ஜென்ம தொடர்பில்லாமல் தற்போது எதுவும் நடப்பதில்லை. நூற்றுக்கு நூறு உண்மை. நன்றாக உள்ளது. நன்றி.
ReplyDeleteமகாவீரர் கர்ணன் பிறப்பின் இரகசியம் அறிந்து பிரமித்துப்போய் விட்டேன் அற்புதமான ஆன்மீக தகவல் இது போன்ற புதிய தகவல்கள் அடிக்கடி தர உங்களை அன்புடன் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்
ReplyDeleteNandraga ulladhu..ayya
ReplyDeleteGood one sir..will be very useful for spiritual..
ReplyDeleteArumaiyo arumai
ReplyDeleteNice story. This information is new for me. Thanks
ReplyDeleteIt is a good effort to post information like this, which is not known to many people. Continue you job to enlighten people with rare information. God bless you.
ReplyDeleteஉண்மை. பூர்வ ஜென்ம புண்ணியத்தால் தாங்கள் போன்றவர்களிமிருந்து ஆன்மீகப் பதிவு அறிகிறோம். வாழ்க வளமுடன்.
ReplyDeleteIt is a good effort to present such information, which is generally not known to many people. Continue your job. God bless you.
ReplyDeleteReally interesting to read.gid bless u Raghu.
ReplyDeleteArumai.ellam nadapathu oru kariyathin thodakame
ReplyDeleteThanks very good
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDeleteவாழ்த்துக்கள்
I know about the life from this story.
ReplyDeleteMiga azhagana varthaigalail ezuthi vanthullir..vaazhtukkal
ReplyDeleteGood to know the secret. Share more for us to know and learn good things from our epic
ReplyDeleteThough I know about Karnan, his prevoius janma story is new to me. Thanks for a detailed study and giving us an opportunity to know about him.
ReplyDeleteமிக மிக அருமை. முற்றிலும் புதிய நலன் தரும் பதிவு.
ReplyDeleteIt is a very nice write up on the previous birth of Dhaanasura Karna.
ReplyDeleteReally very intersting. Way to go.
ReplyDeleteThe previous birth history of karna is not known to me.Raghu clearly explained this in his article. Thanks.
ReplyDeleteஅருமை. மிக அருமை. நன்றி வாழ்த்துக்கள் Thiru Raghu
ReplyDeleteExcellent writeup.
ReplyDeleteGood Morning
ReplyDeleteReally New Info About Sri Karna's
Poorva Janma
Good Work
Thanks For Sharing
Thanks for sharing . lots of informations.very excellent!
ReplyDelete👌🙏
ReplyDelete����
ReplyDelete👌👌
ReplyDeleteGood one
ReplyDelete