மேகநாதன் இலங்கை வேந்தன் ராவணேஸ்வரனுக்கும் மண்டோதரிக்கும்
பிறந்தவன். அவன் பிறந்து அழும் ஓசை கேட்டு மேகங்களே பயந்து நடுங்கியதால் இராவணன்
மேகநாதன் என பெயர் வைத்தான்.
இந்திரவித்தை இதை கற்க அளப்பரிய ஞானம், திறமை
வேண்டும். இதுவரை இந்திர வித்தை அறிந்தவர்கள் மூன்று பேர் மட்டுமே. அவர்கள் விக்ரமாதித்தன்,
சாலிவாகனன் மற்றும் இந்திரஜித்.
இவன் ஒருவனே மும்மூர்த்திகளை நோக்கி நேரடியாக தவம்
செய்து அவர்களின் பாசுபதம், பிரம்மாஸ்திரம், வைஷ்ணவாஸ்திரம் பெற்றவன். மகாபாரத்தில்
மும்மூர்த்திகளின் ஆயுதம் பெற்ற ஒரே வீரன் அஸ்வத்தாமன்
தேவாதி தேவனான இந்திரனையே வெற்றி பெற்றதால்
இந்திரஜித் என்னும் அழியாப் புகழ் பெற்றவன்.
காவியம்
கண்ட ஒரே அதிமகாரதி. 12 மகாரதிகளுக்கு இணையானவன். 86,40,000 வீரர்களுடன் சண்டை
போடும் திறன் மிக்கவன்.
(ராமர், கிருஷ்ணர், இந்திரஜித், ஹனுமார்
போன்றோருடன் சிவனின் அவதாரங்களாகிய வீரபத்ரர், பைரவர் ஆகியோரும் அதிமகாரதி
ஆவார்கள்)
அனுமன் இலங்கை வந்த போது அவன் அழகை பார்த்து சிவனின்
புத்திரனோ இல்லை அஷுவினி குமாரனோ யார் இந்த பேரழகன் என ஆச்சரியம் பட்டார். அனுமனையே
கட்டி இழுத்து வந்தவன். ராம லக்ஷ்மணரை மூர்ச்சை போட வைத்தவன்.
மிகப் பெரிய
போர்வீரர்களில் ஒருவனாக அவர் கருதப்படுகிறான். இவன் மந்திர வலிமைப்படைத்தவன். இவனை
ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் மற்றும் வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி பூமியில்
இதுவரை பிறந்த சிறந்த போர் வீரன் என்று கருதப்படுகிறான்.
இந்திரஜித் 670
லட்சம் வானரங்களை
ஒரே நாளில் கொன்றான். இந்தப் போரில் கிட்டத்தட்ட பாதி வானர இனம் அழிந்தது.
அவன் சக்ராஜித்,
ராவணி, வாசவஜித், வரிதனதா மற்றும் கானாந்தா என்றும் அழைக்கப் பட்டான். சுலோச்சனா
இந்திரஜித்தின் மனைவியாவர். மேகநாதன் மந்திர போர், சூனியம் மற்றும் தந்திரம்
ஆகியவற்றில் நிபுணராக இருந்தான். சுலோச்சனா பாம்புகளின் அரசனான சேச நாகனின் மகள்
ஆவார். இவளை இராவணின் மகனான இந்திரஜித்து மணந்து கொண்டான். கதைகளில் சுலோச்சனா
வீரம் மிகுந்தவளாகக் காட்டப்படுகிறாள். இந்திரஜித்து இராமனுடன் போரிடச் செல்கையில்
அழாமலும் அவனைத் தடுக்காமலும் சுலோச்சனா வீரத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இவன் ஒருவனே நிகும்பலா என்னும் அதர்வண காளியின் தீவிர
பக்தன். நிகும்பலா தேவியே இன்று வணங்கும் ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி. அதனால் மேகநாதனை
வெற்றி கொள்வது என்பது ராம லக்ஷ்மணர்களுக்கே பிரம்ம ப்ரயத்தனமாக இருந்தது. இவனை
கொல்பவன் கல்யாணமாகி 14 வருடம் மனைவியுடன் சேராமலும் 14 வருடங்கள் நித்திரை
கொள்ளாதவன் ஆகியும் இருக்க வேண்டும் என்னும் ஓர் வித்தியாசமான வரம் பெற்று
இருந்தான். இவன் நிகும்பலா யாகம் செய்து முடித்து விட்டால் அவனை அழிப்பது என்பது
எவராலும் முடியாத காரியம் என்னும் ரஹஸ்யத்தை விபீஷணன் மூலமாக அறிந்த லக்ஷ்மணன்
ஹனுமாநின் துணை கொண்டு அந்த யாகத்தை அழித்தார். 14 ஆண்டுகள் தூங்காமல் இருந்ததால்
இலட்சுமணன் நிகும்பலையின் யாகத்தை அழிக்கும் ஆற்றலை பெற்றிருந்தார். பிரம்மா
முன்னரே கூறியது போல நிகும்பலையின் வேள்வியை அழிக்கக்கூடியவன் இந்திரஜித்தையும்
வதைக்கக்கூடும். அதன்படி இந்திரஜித் இலட்சுமணனால் வதைக்கப்பட்டான்.
கோடி அர்ஜுனர்கள் வந்தாலும் ஒரு மேகநாதனுக்கு ஈடாக
முடியாது.
ஒரு அதிமகாரதி அதுவும் தமிழன் என்பது நாம் அனைவரும் பெருமை
வேண்டிய ஒன்று.
உங்கள் திறமை எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. தொடரட்டும் உங்கள் சேவை.
ReplyDeleteSo simple and nice
ReplyDeleteI am very happy to read such an exhaustive and beautiful pen portrait of Mehanathan.
ReplyDeleteGood Story
ReplyDeleteVery good presentation. Keep on sending portrait s of purana/ithihasa characters. Thanks.
ReplyDeleteதங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடங்கட்டும்...
ReplyDeleteஇந்திரஜித் எந்தளவுக்கு பராக்கிரம சாலி என்பதை உங்கள் ஆன்மீக பதிவு மூலம் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி உங்கள் ஆன்மீக பதிவு மூலம் நிறையவே புதிய புதிய கதாபாத்திரங்களை அறிந்து கொள்ள முடிகிறது இது உங்கள் கடின உழைப்பால் எங்களுக்கு கிடைத்த பரிசு வால்மீகியும் கம்பரும் மேகநாதனை எந்தளவுக்கு பாராட்டியுள்ளனர்என்பதை முன்பு ஒரு முறை நீங்கள் கூறிய தாக ஞாபகம் வளர்க உங்கள் ஆன்மீக பணி வாழ்த்துக்கள்
ReplyDeleteThe life history of Meganathan is clearly explained by Raghu in this article. Thanks.
ReplyDeleteNice to know more details about Meganadhan.
ReplyDeleteஅத்புதம்
ReplyDeleteVery crisp and nice depiction of Athimaharathi Mehanathan. His warfield status quite exclaimed by Lord Rama and Hanuman. And moreover Lord Rama spent more time on how to handle Indrajith. Blessings to your coming up article. Sri Rama Jaya Rama Jaya Jaya Rama Rama.
ReplyDeleteGreat and wonderful message. Thanks a lot Mr. Raghu
ReplyDeleteஅற்புதம். அரிய விவரங்களை தெளிவுபட எடுத்துரைப்பது. நன்றி
ReplyDeleteஅருமை. மேகநாதனை விட லெட்சுமனன் மன உறுதி மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் ஆன்மீக பதிவு மேலும் வளர வாழ்த்துக்கள்.
ReplyDeleteWonderful information.vazhthukkal .
ReplyDelete