நமது பாரத
தேசத்தில் எத்தனையோ மஹான்கள் ஸ்ரீமன் நாராயணனையும் ஸ்ரீருத்ரனாகிய ஈஸ்வரனையும் நாம
சங்கீர்த்தனத்திலும் உபாஸனையிலும் வழிபட்டனர்.
வழிபாடுகளில்
மிக மிக கடினமான வழிபாடு ஸ்ரீ வித்யா உபாசனையாகும். ஸ்ரீ வித்யா உபாசனையை நன்கு நெறிப்படுத்தியவர்களில்
ஸ்ரீ பாஸ்கரராயர் முதன்மை பெறுகிறார்.
இவரால் தான் ஸ்ரீ வித்யா உபாசனை பெருமை பெற்றது என்றால் மிகையாகாது. பல பண்டிதர்களை
வாதத்தில் வென்று, தோல்வியே அறியாத பாஸ்கரர் என்னும் அழியா புகழ் பெற்றார்.
ஸ்ரீ பகவத்பாத
சங்கராச்சார்யர் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுத முற்படும் பொழுது ஒவ்வொரு
முறையும் அவர் கைக்கு ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தான் கிடைத்தது. ஸ்ரீ சங்கரர் தனது சிஷ்யரிடம்
வினவ, அதற்கு சிஷ்யர் தான் ஒவ்வொரு முறையும் லலிதா சஹஸ்ரநாமம் எடுத்து வரும் பொழுது
ஒரு சிறுமி வழி மறித்து தன்னிடம் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் கொடுத்ததையும் கூறினார். தனது
ஞான திருஷ்டியால் அறிந்த சங்கரர், அம்பிகையின் பால ரூபமான பாலா த்ரிபுரசுந்தரி தன்னிடம்
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம பாஷ்யம் எழுதும் படியும், பிற்காலத்தில் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம
பாஷ்யம் எழுத ஸ்ரீ பாஸ்கர ராயர் அவதரிப்பதையும் , அவர் மூலம் ஸ்ரீ லலிதா உபாசனை செழுத்தோங்கி வளரும் என்றும் அவரே ஸ்ரீ வித்யா உபாசனையில் முதன்மையானவர் என்ற பெருமையும் பெறுவார்
என்று அம்பிகை கூறினாள். அப்பேற்பட்ட மகிமை பொருந்திய ஸ்ரீ வித்யா உபாசகர்தான் ஸ்ரீ
பாஸ்கர ராயர்.
கோடிக்கணக்கில்
ஸ்ரீ வித்யா மந்திரம் ஜெபித்து ஸ்ரீ
லலிதாம்பிகையுடன் பேசும் வாக்வன்மை பெற்றவர்.
இவருடைய 'வரிவஸ்யா ரகசியம்',
'ஸௌபாக்கிய பாஸ்கரம்',
'சேது பந்தம்'
முதலிய மூன்று படைப்புகளும் முக்கியமானவை.
லலிதா ஸஹஸ்ரநாமம்,
ஸௌந்தரியலஹரி,
இவையிரண்டிற்கும் பாஸ்கரராயருடைய உரையே பிரதானமான உரைகளாகும். இவருடைய லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யத்தைப் பார்த்தால் இவருடைய மேதாவிலாசம்
நன்கு புலப்படும். வேதம், ஆகமம், புராணம், மந்திர சாஸ்திரம், ஸ்ரீ வித்யை முதலியவற்றில்
இவருக்குள்ள பரந்த அறிவு யாவரையும் வியப்பில் ஆழ்த்துவதற்குரியது. அவர் ஒரு மாபெரும் உபாசகர், மேதை, மிகப் பெரும் கல்விமான்.
ஸ்ரீ வித்யா உபாசனையில் இவரை விஞ்சியவர் இலர். அவருடைய தோளில் கிளி வடிவில் ஸ்ரீ லலிதாம்பிகை நித்யம் வீற்றிருப்பாள்.
பாஸ்கரராயர் மஹாராஷ்டிரத்தில்
பாகா எனும் இடத்தில் பிறந்தவர். இவருடைய
தந்தை கம்பீரராயர், தாய் கோனாம்பா. கம்பீரராயர் பெரும் பண்டிதர். விஜயநகர மன்னனால்
பாரதி எனப் பட்டமளிக்கப்பட்டவர். தந்தையார் தம் மகனை எட்டாவது வயதில் காசிக்கு அழைத்துச்சென்று
அங்குள்ள நரசிம்மாத்வரி என்பவரிடம் வேதக்கல்வியைக் கற்க ஏற்பாடு செய்தார். கங்காதர
வாஜபேயி என்பவரிடம் கௌட தர்க்கத்தைப் பயின்றார்.
இவருக்கு ஆனந்தி மற்றும் பார்வதி என இரு மனைவியர். இவர் காசியில் இரு மனைவியருடன் சில காலம் வசித்தார்.
ஒரு நாள் இவரின் கடனை அடைப்பதற்கு அம்பிகையே இவரின் மனைவியின் உருவில் வந்து
கடனை அடைத்தாள்.
காசி க்ஷேத்ரத்தில் ஸ்ரீ குங்குமானந்தா யோகி ஓர் மிகப்பெரும்
சக்தி வேள்வி நடத்த எண்ணம் கொண்டு அனைத்து பண்டிதர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்
ஸ்ரீ பாஸ்கர ராயரை மிகவும் மதித்தார். இது மற்ற பண்டிதர்களுக்கு மிகவும் பொறாமையாக
இருந்தது. அந்த பொறாமை கொண்ட பண்டிதர் கூட்டம் ஸ்ரீ பாஸ்கர ராயரை அவமானபடுத்த தக்க
தருணத்திற்காக காத்திருந்தனர்.
ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தில் ஒரு நாமா வருகிறது.
'மஹாசதுஷ்ஷஷ்டி
கோடி யோகினி கண ஸேவிதா' (237ஆம் நாமம்) - அறுபத்துநான்கு கோடி யோகினி கணத்தாரால் சேவிக்கப்படுகிறவள்.
அதை விளக்கும்போது ஓர் அறிஞர் அவரைக் கேட்டார்:
"உண்மையிலேயே அறுபத்து நான்கு கோடி யோகினிகள் இருக்கின்றனரா?"
இருப்பதாக ராயரவர்கள் சொன்னார்.
"அப்படியானால் அவர்களின் பெயர்களைச் சொல்லுங்கள்"
"அப்படியே சொல்கிறேன். நான் சொல்லச் சொல்ல நீங்கள்
எழுதிக்கொள்ளுங்கள்."
பாஸ்கரராயர் வரிசையாக யோகினிகளின் பெயர்களைச் சொல்லலானார்.
அப்பண்டிதர்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை.
அன்னை லலிதாம்பிகை கிளி ரூபத்தில் ஸ்ரீ பாஸ்கர ராயரின்
தோள் மீது அமர்ந்து 64 கோடி யோகினிகள் பெயரை கூறினார். இவ்வரிய காட்சி ஸ்ரீ குங்குமானந்தா
யோகிக்கு மட்டும் கிடைத்தது. 64 கோடி யோகினிகள் பெயரை கூறிய ஒரே சாக்த உபாசகர் ஸ்ரீ
பாஸ்கர ராயர் மட்டுமே.
குங்குமானந்தர் கண்டு மகிழ்ந்த தேவியின் காட்சியைத் தானும்
காண வேண்டும், தயவு பண்ணுங்கள்! என்று நாராயண தீர்த்தா என்ற பண்டிதர் பாஸ்கர ராயரிடம்
வேண்டினார். கெஞ்சினார். பிடிவாதம் பிடித்தார். அவருக்கும் தேவியின் காட்சி கிடைத்தது.
ஆனால் அந்தத் தெய்வீக ஒளியைக் கண்டு தாங்க முடியாமல் கண்
பார்வையை அவர் இழந்தார்.
அதன் பின் பாஸ்கர ராயர் அளித்த பூஜா தீர்த்தம் பெற்றுக்
கண்களைத் துடைத்துக் கொண்டதும் இழந்த பார்வையைப் பெற்றார் என்று வரலாறு கூறுகிறது.
பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு இன்றளவும்
வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன. இவரால் வழிபடப்பெற்ற ஸ்ரீசக்ர பூர்ணமேரு இன்றும்
திருவிடைமருதூர்ப் பெருங்கோயிலில் மூகாம்பிகை சன்னிதியில் வழிபடப்படுகிறது.
தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு
ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.
குறிப்பு : பாஸ்கரராஜபுரம் - மயிலாடுதுறையிலிருந்தும், குற்றாலம், ஆடுதுறையிலிருந்தும்
ரயில், பஸ், கார் மூலம் வசதியாகச் சென்று வரலாம். குற்றாலத்திலிருந்து 4 கி.மீ.யும்,
ஆடுதுறையிலிருந்து 5 கி.மீ.யும் தொலைவிலுள்ளது.
பாஸ்கர ராய சரணம் ப்ரபத்யே!!!!
பகிர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteThanks for the detailed and unknown facts about the great Bhaskararayar.
ReplyDeleteNow only I have known about Bhaskararayar.Thank you.
ReplyDeleteExcellent
ReplyDeleteமற்றுமொரு அருமையான தகவல்களுடன் கூடிய நல்ல பதிவு.
ReplyDeleteஜெய் சாய் ராம்
அருமையான பதிவு. மிக்க நன்றி. பணி தொடர இறைவனை பிராத்தனை செய்கிறேன்.
ReplyDeleteபாஸ்கரராயரைப் பற்றி மிக அற்புதமாக எடுத்து எழுதியுள்ளீர்கள். மிக்க நன்றி.
ReplyDeleteGood work Raghu. Keep going
ReplyDeleteஅருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteThanks for sharing Raghu. This narration looks good and this inspires me to get to know more about him.
ReplyDeleteபாஸ்கராயர் அவர்கள் வித்தியா உபாசனை நெறிமுறை படுத்தியவர்களில் முதன்மை பங்கு வகிப்பவர் என்பதும் அம்பிகை லலிதாம்பிகை உடன் இணைந்து பேசும் வல்லமை பெற்றவர் என்பதும் தற்பொழுது தான் அடியேனுக்கு தெரியவந்து உள்ளது அரிதான விபரங்களை மிகவும் அக்கறை கொண்டு படைக்கும் பாங்கு பாராட்டுக்கு உரியது உங்கள் ஆன்மீக பணி மேலும் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்
ReplyDeleteSuper
ReplyDelete