Friday, August 21, 2020

ஸ்ரீ குரு சரித்திரம்


சப்த ரிஷிகளில் மிக ச்ரேஷ்டரான அத்ரி மகரிஷிக்கும் பதிவ்ரதா சிரோன்மணியான அனுஸுயா மாதாவிற்கு மும்மூர்த்திகளின் அம்சமாக பிறந்தவர் ஸ்ரீ தத்தாத்ரேயர்.

குரு பரம்பரை என்பது ஸ்ரீ தத்தாத்ரேயரிடம் இருந்துதான் ஆரம்பம்.

தத்தாத்ரேய வழிபாடு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் மிக மிக அதிகம். அதற்குக் காரணம் இந்த இரண்டு மாநிலங்களில் மட்டுமே தத்தாத்திரேய அவதாரங்களாக பல மகான்கள் இருந்துள்ளார்கள் என்பதே. அவர்களுக்கு ஸ்ரீ குரு சரித்திரம் என்பது அதி ஸ்ரேஷ்டமாக கருதப்படுகிறது. அதில் தத்தாத்ரேயரின் கலியுக முதல் இரண்டு அவதாரங்களான ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகள் வரலாறு மிக விரிவாக கூறப்பட்டுள்ளன.  

இந்த புத்தகம் ஸ்ரீ நரசிம்ஹ சரஸ்வதி ஸ்வாமிகளின் சீடரான ஒரு சித்தர் ஸ்ரீ நரசிம்ஹ சரஸ்வதி ஸ்வாமிகளின் பெருமைகளை அவருடைய ஒரு பக்தரான நமத்ஹரகா என்பவருக்கு விளக்கிக் கூறுவதாக உள்ளது. தத்த பக்தர்களுக்கு இந்நூல் வேதமாக கருதப்படுகிறது.

ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதியின் சீடரான ஸ்ரீ கங்காதர சரஸ்வதி முதலில் மராத்தியத்திலும் பிறகு வந்த ஸ்ரீ  வாசுதேவானந்த சரஸ்வதி என்னும் தேம்பெ ஸ்வாமிகள் சமஸ்க்ரிதத்திலும் மற்றும் பலர் பல மொழிகளிலும் இயற்றி இன்று பல லக்ஷம் மக்கள் நித்ய பாராயணம் செய்யும் ஓர் ஒப்பற்ற புனித நூலாக ஸ்ரீ குரு சரித்திரம் விளங்குகிறது.

ஸ்ரீ குரு சரித்திரம் அவ்வளவு எளிதாக யாராலும் பாராயணம் பண்ண முடியாது. பூர்வ ஜென்ம புண்ணியக்குவியல்களால் மட்டும்தான் ஒருவரால் இதன் ஒரு அத்தியாயமாவது படிக்க முடியும். அதிலும் சப்தாக பாராயணம் அதி ஸ்ரேஷ்டம். நாம் நினைத்த கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேறும். மிகவும் ஆச்சாரமாக அனுஷ்டித்தல் அவசியம். நிரந்தர லட்சுமி மற்றும் குரு கடாக்ஷம் ஸ்ரீ குரு சரித்திர பாராயணத்தால் கிடைக்கும். நமது பூஜை அறையில் இப்புத்தகம் இருத்தலே பரம ஐஸ்வர்யம்.

குருச்சரித்திரத்தை இடை விடாது தொடர்ந்து 16 ஆண்டுகள் படித்ததின் பயனாக ஸ்ரீ தத்தாத்ரேயர் ஸ்ரீ மாணிக் பிரபு மகாராஜ் ஆக ஸ்ரீ மனோஹர நாயக ஹரகுடே, தாய் ஸ்ரீ பய தேவி தம்பதிக்கு மகனாக பிறந்தார்.

இப்புனித நூலை ஒருமித்த மனதுடன் நமது கோரிக்கையை மனதில் சங்கல்பித்து கொண்டு சப்தாக பாராயணம் (வியாழக் கிழமை தொடங்குவது உத்தமம்) அல்லது எந்தவொரு நன்னாளில் பின்வரும் முறைப்படி ஏழு நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

முதல் நாள் - 1 - 9 அத்தியாயங்கள் வரை
இரண்டாம் நாள் - 10-21 அத்தியாயங்கள் வரை
மூன்றாம் நாள் - 22-29 அத்தியாயங்கள் வரை
நான்காம் நாள் - 30-35 அத்தியாயங்கள் வரை
ஐந்தாம் நாள் - 36-38 அத்தியாயங்கள் வரை
ஆறாம் நாள் - 39-43 அத்தியாயங்கள் வரை
இப்புனித நூலை பாராயணம் செய்வதால் இல்லம் லட்சுமி கடாக்ஷமாய் நிரந்தர ஐஸ்வர்யத்துடன், மஹான்களின் தரிசனம் மற்றும் புண்ணிய மஹநீயர்கள் சூக்ஷும ரூபத்தில் இல்லத்தில் தோன்றுவார்கள். நமது அனைத்து பாவங்களும், தாரித்ரியங்களும், தீராத ரோகங்களும், கொடிய நோய்களும், நிறைவேறாத நீண்ட நாள் பிரார்த்தனைகளும், புத்திர சந்தானமும், உத்தியோக உயர்வும், நிறைந்த கல்வியும், ஞானமும் மற்றும் அனைத்து விதமான நியாயமான வேண்டுதல்களும் நிறைவேறும். யார் யார் சிரத்தை எப்படியோ அதற்கேற்ற பலன் கிடைக்கும்.

ஸ்ரீ ராமாயணம் , ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீ சுந்தரகாண்டம், ஸ்ரீ தேவி பாகவதம் போன்று ஸ்ரீ குரு சரித்திரத்தையும் சப்தாக பாராயணம் செய்வது மஹா மஹா புண்ணியம். 

ஒவ்வொரு நாளும் பாராயணம் செய்த பிறகு பூஜை செய்ய வேண்டும். வேறு இடங்களில் உணவருந்த கூடாது. சைவ உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். புலனடக்கம் அவசியம். சப்தாக பாராயணம் நிறைவடைந்தவுடன் ஏழை எளியோர்களுக்கும், அந்தணர்களுக்கு அன்னதானம் செய்வது மிக உத்தமம்.

குரு சரிதத்தில் புண்ணிய க்ஷேத்ர மஹிமைகள், சிவ பூஜை மஹாத்ம்யம், ஸ்ரீ ருத்ர பாராயண பலன், குருவின் சிறப்பு, பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு, சிவராத்ரியின் மஹிமை, பலன் மற்றும் அனுஷ்டிக்கும் விதம், சோமவார விரத பலன், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதின் பலன், அந்தணர்கள் வாழும் வழிமுறைகள், விபூதியின் மஹிமை, ருத்ராக்ஷத்தின் மஹிமை, குருவின் மஹிமை, அத்ரி மஹரிஷியின் ஆற்றல் மற்றும் அனுசுயா மாதாவின் கற்பின் சிறப்பு, அனந்த விரதத்தின் பலன், தத்தாத்ரேயரின் அவதாரம், பதிவிரதா தர்மம், அத்திமரத்தின் பெருமை, அந்தணர்கள் வாழும் வழிமுறைகள் இந்நூலில் உள்ளதை போன்று வேறு எந்த நூலிலும் விரிவான விளக்கங்களுடன் இல்லை.

ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா, தனது பக்தரான ஸாதேவை குரு சரித்திரத்தை பாராயணம் செய்யும்படி கூறினார். ஒரு வாரம் பாராயணம் செய்தவுடன் ஸாதேவின் கனவில் பாபா தம் கையில் குருசரித்திரத்துடன் காணப்பட்டார். பின்னர் பாபாவிடம் இந்த காட்சியின் கருத்து என்ன?  குரு சரித்திரத்தை இன்னொரு வாரம் (ஸப்தாஹம் -7 நாட்களுக்குள் படித்தல்) பாராயணம் செய்ய வேண்டுமென்பதா? என்று கேட்டார். அதற்கு பாபா "ஆம் குரு சரித்திரத்தை சிரத்தையுடன் பாராயணம் செய்யும் பக்தன் தூய்மை பெற்று நலம் பெறுகிறான். பகவான் அவனிடம் மகிழ்ச்சி கொண்டு, அவனை சம்சாரத்தினின்றும் காப்பாற்றுகிறார்" என்று கூறினார்.

குரு சரித்திரத்தை பாராயணம் செய்வதினால் அறியாமை விலகி ஸ்ரீ குருவிடம் திடமான பக்தி ஏற்படும். குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை பொழியும். அப்படி சேவிக்கும் பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம்.  குரு சரித்திரத்தை பாராயணம் செய்வதனால் உங்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேறும். 
 

5 comments:

  1. It is very good to know about the importance of chanting and reading of the biography of Guru Dattatreya. I have see how Marathi speakers in North Karnataka and some Kannadigas there are very much devoted to Dattatreya. The adoration extended to the fight tree said to be the abode Him. Pleased with the peace and piety coming on reading blogs by Raghu.
    Thanks.

    ReplyDelete
  2. ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ! தங்களின்ஸ்ரீகுருசரித்திரம் ஆன்மீக பதிவினை படித்தேன் அதிஅற்புதமானபதிவு ஆதிகுரு தத்தாத்ரேயர் ஆவார் குரு சரித்திரம் படிப்பதற்கு மஹா புண்ணியம் பண்ணியிருக்கவேண்டும் என்ற தங்களின் கூற்று உண்மை அதைபடிப்பதாலோ அல்லது பாராயணம் செய்வதாலோ ஒருவருக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கப்பெறுகிறது நமது கவலைகள் உடல் உபாதைகள் கல்வி ஞானம் செல்வசிறப்புகள்கிடைக்கப்பெறுகிறோம்‌. எதிரிகளின் தொல்லைகள் அழிக்கப்படுகிறது இந்த விபரங்களை உங்களது ஆன்மீக பதிவு மூலம் தெரிந்துகொண்டேன் இராமாயணம் பாகவதம் சுந்தர காண்டம் தேவி பாகவதம் ஆகியவற்றிற்கு இணையானது குரு சரித்திரம் என்ற உங்களின் விளக்கம் சத்தியம் தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஆன்மிக விஷயங்களை ஆழ்ந்த பற்றுடன் விளக்கமாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்

    ReplyDelete
  4. ஸ்ரீ குரு சரித்திரம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தகவல் அருமை. மிக்க நன்றி.

    ReplyDelete
  5. குருபரம்பரை ஸ்ரீ தத்தாத்ரேயர் இடமிருந்து ஆரம்பம் இந்த வழிபாடு மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் அதிகம் தமிழ்நாட்டில் அவ்வளவாக இல்லை தத்தாத்திரேயர் அவதாரங்கள் ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் மற்றும் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமிகள் வரலாறு இங்கு கூறப்படுகிறது இந்த வரலாறுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு அதற்கேற்ற பலன் கிடைக்கும் என்பது குறிப்பிடப்படுகிறது வாழ்த்துக்கள்.

    ReplyDelete