ஸ்ரீமன் மத்வாச்சாரியர்
த்வைத மத ஸ்தாபகர். ஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு என்னும் கொள்கையை ஆணித்தரமாக நிலை
நாட்டியவர்.
வாயு தேவரின்
மூன்றாவது அவதாரமாக பிறந்தவர் ஸ்ரீ மன் மத்வசார்யர். (ஹனும, பீம முதல் இரண்டு அவதாரங்கள்).
தேவர்கள், பூமியில் அவதாரம் செய்யும் பொழுது தங்கள் ஸ்வரூப சாமர்த்தியத்தை வெளியே காட்டி
கொள்வதில்லை. வாயு தேவரும் ஸ்ரீ மன் மத்வாசார்யராக அவதரித்தபொழுது, சாதாரண மானிட குழந்தையாகவே
விளையாடினார்.
இவரின் இயற்பெயர்
வாசுதேவர். ஆனந்ததீர்த்தர் மற்றும் முக்ய ப்ராணர் என்றும் அறியப்படுகிறார். ‘மத்வர்’
என்றால் யாராலும் வெல்ல முடியாதவர் என்று பொருள்.
32 சர்வ லக்ஷணங்களுடன்
பிறந்த மஹான்.
ஆஞ்சநேயரின்
கலியுக அவதாரம்தான் ஸ்ரீமன் மத்வாச்சாரியர்.
அக்ஷரங்களை
உச்சரிப்பதில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு சமமாக திகழ்ந்தார்.
ஸ்ரீ வேதவ்யாஸரின்
பரி பூரண க்ருபா கடாக்ஷம் பெற்ற ஒரே மஹான்
ஸ்ரீமன் மத்வசார்யர்தான்.
மத்வ சம்பரதாயத்தில்
ப்ராதான்யமாக ஸ்ரீ மன் நாராயணனை வழிபட்டாலும், ருத்ர வழிபாடுகளையும் மேற்கொண்டு மத்வ
யதிகளுக்கு அதன் முக்கியத்துவத்தையும் உணர்த்திய
பெருமை மத்வரையே சாரும். உடுப்பியில் இவர் பிரதிஷ்டை பண்ணிய ஸ்ரீ அனந்தீஸ்வரராகிய ஈஸ்வரனும்
ஸ்ரீ குக்கே சுப்ரமண்யாவில் இவர் பிரதிஷ்டை பண்ணிய ஸ்ரீ ஸுப்ரமண்யருமே இதற்கு சாக்ஷி.
மன கட்டுப்பாடு
வேண்டும் என்றால் அதற்கு ஸ்ரீ ருத்ர வழிபாட்டினால் மட்டுமே முடியும் என்று கூறி ஆச்சர்யப்படுத்தியவர்.
இவரின் 37
சர்வ மூல கிரந்தங்கள் இன்றும் கட்டிலா என்னும் இடத்தில் பூமிக்கு அடியில் மிகவும் பத்திரப்படுத்தி
வைக்கப்பட்டுள்ளது.மாத்வர்களுக்கு சர்வ மூல க்ரந்தம் என்பது வேதத்திற்கு சமம்.
உடுப்பியில்
ஸ்ரீ கிருஷ்ணரை ப்ரதிஷ்டை செய்தவர். உடுப்பியை சுற்றி அஷ்ட மடங்களை நிறுவி 8 இளம் சன்யாசிகளை நியமித்து த்வைத்த மத கொள்கையை சிறப்பாக நெறி படுத்தியவர். இதன் வரலாறு மிகவும் புண்ணியமானது.
உடுப்பி
கிருஷ்ணர் கோயில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது.
இத்தலத்தின் மூலவர் ஸ்ரீகிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக்
கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் ஸ்ரீகிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு
நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர். அதனால் இத்தலத்து இறைவன் ‘அன்ன ப்ரம்மா’ என்று
அழைக்கப்படுகிறார்.
விஸ்வகர்மாவால்
செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது
மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட
பாலகிருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.
தட்சனின் சாபத்தால்
தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில்
கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன்
நிர்மாணித்த திருக்குளம் ’சந்திர புஷ்கரணி’. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம்
புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும்
ஆனது.
ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து
1600 சுலோகங்கள் எடுத்து அவைகளுக்கு உரை இயற்றினார். இவர்தான் முதன்முதலில் பாகவதத்தை
தத்துவ நூல்களில் மேற்கோள்களாக எடுத்தாண்டார் என்று வழக்கிலிருக்கிறது.
பதினெட்டாவது
வயதில் தஷிண சஞ்சாரம் மேற்கொண்டு வேதங்கள், இதிகாசங்கள், தர்ம சாஸ்திரம் போன்றவற்றில்
புலமை பெற்றார். கன்னடம், சமஸ்கிருதம், தமிழ், வங்காளம், இந்தி போன்ற மொழிகளை கற்றுத்
தேர்ந்தார். பின் திக்விஜயங்கள் மேற்கொண்டு த்வைத கொள்கைகளையும், தர்மத்தையும் நிலைநாட்டினார்.
அனைத்து ஆன்மீக
தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்தார். பனாரஸ், துவாரகா, அலகாபாத், இறுதியாக பத்ரிநாத்
சென்று “ப்ரம்ம சூத்திர பாஷ்ய” என்ற நூலை எழுதினார். பத்ரிநாதிற்கு வடக்கே சென்று வேத
வியாஸர் இருந்த உறைவிடத்தை கண்டுக்கொண்டார். வியாசரிடம் தன்னுடைய பகவத் கீதையின் வியாக்கியானத்தை
காட்டி அங்கீகாரம் பெற்றார். மேலும், வேதாந்த சூத்திரத்திற்கு விளக்கம் எழுத ஆசியும்
பெற்றார். வியாசதேவரை நேரடியாக சந்தித்துப் பேசியதால் சாஸ்திரங்களில் பொதிந்து இருக்கும்
உண்மையான அர்த்தத்தை மேலும் நன்றாக உணர்ந்து, வேதாந்தத்திற்கு தனது விளக்கத்தை எழுதினார்.
பின்னர் பத்ரிநாத்திலிருந்து திரும்பி பீகார், வங்காளம், ஒரிசா, ஆந்திரா வழியாக உடுப்பி
திரும்பினார்.
மத்வர் ஒரே
நேரத்தில் அனுமனாக ராமருக்கும், பீமனாக கிருஷ்ணனுக்கும், மத்வராக வேதவியாஸருக்கு பூஜை
செய்ததைப் பார்த்த இவருடைய சிஷ்யர் த்ரிவிக்ரிம பண்டிதாசாரியார் இயற்றியதே “ஹரி வாயுஸ்துதி”.
அதை பாராயணம் செய்தால் துன்பம், நோய், பிரச்சனை நீங்கி சகல நன்மைகள் நம்மை சுற்றி நடக்கும்.
குருக்ஷேத்திரத்தில்
மத்வர் தனது சிஷ்ய பரிவாரங்களுடன் இருந்தார். அப்போது, சிஷ்யர்கள் மத்வரை வணங்கி, அவர்
பீமனாக இருந்தபோது உபயோகித்த ஆயுதத்தை காண விருப்பம் தெரிவித்தனர். மத்வரும் குறிப்பிட்ட
இடத்தைக் காட்டி அங்கே தோண்டும்படி கூறினார். அவர்கள் அங்கு கண்ட காட்சி ஆச்சர்யத்தை
ஏற்ப்படுத்தியது. அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவு பெரிய கதை அங்கே கம்பீரமாக
காட்சியளித்தது.
மத்வர் பெரிய
அளவில் உணவு உட்கொள்ளுவதில் பெயர் பெற்றிருந்தார். கோவாவில், ஒர் அன்பர் அவருக்கு
4000 வாழைப் பழங்களையும், 30 குடம் பாலையும் சமர்ப்பித்து ஆசி வேண்டினார். மத்வர் எல்லா
பழங்களையும் சாப்பிட்டு, பாலையும் குடித்து முடித்தார்.அபார ஜீரண சக்தி உடையவர். இச்சம்பவமே இதற்கு சாக்ஷி, இவர் ஹனுமானின் அவதாரம் என்பதற்கு.
ஸ்ரீமத்வாசாரியரின் அதிசயத்தக்க உடல் வலிமை மத்வாசாரியர் இயற்கையிலேயே தலைமைப் பண்புடையவராகவும், புத்தி,
நல்லொழுக்கம், ஆன்மீக கலாசாரம் மட்டுமல்லாது உடல் வலிமையும் நன்றாக பெற்றவராக இருந்தார்.
மல்யுத்தம், நீச்சல், மலையேற்றம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். பரசுராமரின் வம்சத்தின்
வழியே வந்த பிராமண குலத்தில் பிறந்தவர் என்பதால், நல்ல உயரமும் உடல் பலமும் பெற்றவராக
இருந்தார். அவர் ஒருமுறை யாத்திரை சென்றபோது, அவரது சிஷ்யரான சத்ய தீர்த்தரை பயங்கரமான
வங்காளப் புலி ஒன்று தாக்கியபோது, தீரத்தோடு அப்புலியை எதிர்த்த மத்வாசாரியர் அதனை
ஓடச் செய்தார். மற்றொரு புண்ணிய யாத்திரையின் போது கொள்ளைக்கார கும்பல் ஒன்றினை எதிர்த்து
அவர்களையும் ஓடச் செய்தார். காதான்சரி என்ற முப்பது பேர் பலம் கொண்ட ஒருவன், ஒரு முறை
மத்வாசாரியருக்கு சவால் விட்டபோது, தமது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய ஆச்சாரியர்,
“இதை அசைத்தால் போதும்” என்று கூற, காதான்சரி அதைச் செய்ய இயலாமல் தோற்று ஓடினார்.
இவரின் வரலாறு , ஸ்ரீ நாராயண பண்டிதாச்சார்யரால் இயற்றப்பட்டு "ஸ்ரீ ஸுமத்வ விஜய மஹா காவியம்" என்று அழைக்கப்படுகிறது.
இவரின் வரலாறு , ஸ்ரீ நாராயண பண்டிதாச்சார்யரால் இயற்றப்பட்டு "ஸ்ரீ ஸுமத்வ விஜய மஹா காவியம்" என்று அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ சுப்ரமண்யத்தில் மத்வர் சமஸ்தான பூஜையை சில காலம் செய்து வந்தார். காலையில் உடுப்பியில்
பூஜை முடித்து, மதியம் வியாஸ முஷ்டி ஸ்தாபனம் செய்த இடத்தில் பூஜை முடித்து, அங்கிருந்து
ஸ்ரீ சுப்ரமண்யம் சென்று, பின் மாலை உடுப்பி திரும்பி பூஜை செய்தார். இது மத்வர் மட்டுமே
சாதிக்கக் கூடிய சாதனை.
திருப்பதியில்
ஒரு முறை சாதுர்மாஸ்ய வ்ரதத்தை மேற்க்கொண்டார். தினமும் பாட ப்ரவசனம் செய்து வந்தார்.
மிக்க தேஜஸ் கொண்ட முனிவர் ஒருவர், அந்த 4 மாதமும் தினம் தவறாது, மத்வரின் முன் அமர்ந்து
ப்ரவசனம் கேட்டார். அனைவரையும் அவர், காந்த சக்தியைப் போல் ஈர்த்தார். இறுதி நாள் ப்ரவசனத்தில்
அவரை, மத்வர் அங்கு உள்ளவர்களிடம், இவர் ருத்ர தேவரின் அவதாரமான சுகமுனிவர் எனக் கூறினார்.
மத்வர் தம்
ஸஞ்சாரத்தின் போது, பத்ரா நதிக் கரையிலிருந்த ஓர் க்ராமத்திற்குச் சென்றார். நதிக்கரையில்,
20x16x10 அடியும் சுமார் 50 டன் எடையுள்ள பாறை இருப்பதைக் கண்டார். இதை நதியின் குறுக்கே
வைத்தால் நதி நீரானது, விவசாயத்திற்கு பயன்படுமே என்று க்ராமத்தினரைக் கேட்டார். அவ்வாறு
செய்வது தங்களுக்கு சாத்தியமில்லை என அவர்கள் கூறினர். மத்வர் அதை தன் ஒரு கையால் தூக்கி,
நதியின் குறுக்கே சரியான இடத்தில், எவ்வித சிரமுமின்றி வைத்தார். இது அவர் பீமனின்
மறு அவதாரம் என்பதை தெளிவு படுத்தியது.
மிகவும் பலம்
பொருத்திய இரு மல்லர்கள் மத்வரை சவாலுக்கு அழைத்தனர். மத்வரோ தான் சன்யாஸி எனவும்,
மற்றவர் மேல் கை வைப்பது அதர்மம் எனவும் கூறி, எனினும் நீங்கள் இருவரும், நான்
பிரவசனம் செய்து கொண்டு இருக்கும் போது, என் குரல்வளையை அழுத்தி உமது பலத்தைக் காட்டலாம்
என்று கூறினர். அவர்களும், அவரது குரல்வளையை பலம் கொண்ட மட்டும் அழுத்தினர். சிறிது
நேரத்திலேயே சோர்வடைந்து தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். மத்வர் எப்போதும் போல்
மலர்ந்த முகத்தினராய் காணப்பட்டார்.
ஒரு முறை,
பல வித்வான்களிடையே மத்வர் க்ரந்த பாடங்கள் நடத்தி வந்தார். தினந்தோறும், அவர் பாடம்
நடத்துமிடத்தில், ஒர் எருது வந்தமர்ந்து, மிக உன்னிப்பாக அவர் நடத்தும் பாடத்தைக்
கேட்டுக் கொண்டு இருந்தது. ஒர் நாள், வித்வான்கள், மத்வரிடம் தங்கள் கிரந்தங்களுக்கு
விளக்கம் அளிக்கக் கூடியது யார் எனக் கேட்டனர். மத்வர், அங்கு இருந்த எருதை சுட்டிக்
காட்ட, பொறாமை கொண்ட வித்வான்கள், இந்த எருது பாம்பு கடித்து சாகட்டும் என சாபம்
இட்டனர்.
வித்வான்களின்
சாபம் பலித்தது. எருதானது பாம்பு கடித்து இறந்தது. இதையறிந்த மத்வர், கமண்டலத்தில்
ஜலத்தை நிரப்பி, தான் இயற்றிய த்வாதஶ ஸ்தோத்ரத்தை சொல்லி, முடியும் போது, கையில் கமண்டல
நீரை எடுத்து இறந்த எருதின் தேகத்தில் தெளித்தார். எருதானது உயிர் பெற்று எழுந்தது.
திடுக்கிட்ட வித்வான்களிடம் மத்வர் கூறினார், இந்த எருதானது தனது அடுத்த பிறவியில்,
எனது க்ரந்தங்களுக்கு விளக்கம் அளிக்கும் என உரைத்தார். அது போன்றே, எருது தனது மறு
பிறவியில், ஸ்ரீ ஸ்ரீ ஜய தீர்த்தராக, மத்வரின் க்ரந்தங்களுக்கு உரை எழுதி பெருமை பெற்றார்.
மனிதர்கள்
செல்லமுடியாத வேதவியாஸர் இருக்கும் இடத்திற்கு, ஜகத்குரு ஸ்ரீமன் மத்வாசாரியர் சென்று,
அங்கு வேதவியாஸ தேவரை தரிசித்து, அவரால் அழைத்துச் செல்லப்பட்டு, நாராயண பர்வதத்தில்
தவத்தில் இருக்கும் ஸ்ரீ ஹரியை தரிசனம் செய்தார் என்று மத்வவிஜயத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அந்த நாராயண ரூபியான ஸ்ரீஹரியுடன் பேசவும் செய்தார்.
ஸ்ரீ மத்வாசாரியரின் உபதேசங்கள் ஹரி என்று அறியப்படும் பகவான் விஷ்ணுவே முழுமுதற் கடவுள். அவரை
சாஸ்திரங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். பௌதீக உலகம் உண்மையானது. ஜீவாத்மாக்கள்
பகவான் விஷ்ணுவிலிருந்து வேறுபட்டவர்கள். ஜீவாத்மாவின் இயற்கை பகவானின் சேவகனாக இருப்பதுவே.
முக்தி பெற்ற நிலை, மாயைக்கு உட்பட்ட நிலை ஆகிய இரண்டு நிலைகளிலுமே ஜீவன்களுக்கு மத்தியில்
ஏற்றத் தாழ்வுகள் உண்டு. முக்தி என்பது பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளை அடைவதே;
அருவப் பிரம்மனில் கலப்பது அல்ல. தூய பக்தித் தொண்டினால் அந்த முக்தி சாத்தியமாகும்.
பிரத்யக்ஷம், அனுமானம், சாஸ்திரங்கள் ஆகிய மூன்றும் அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள்.
மத்வரின் மங்கலாசரண சுலோகம் :
அப்ரமம் பம்கரம்
ஹிதம் அஜடம் விமலம்ஸதா
ஆனந்ததீர்த்த
மதுலம் பஜே தாபத்ரயாபஹம்
1317ம் ஆண்டு,
மாக மாதம் மத்வர் தம் சிஷ்யர்களுக்கு ஐத்ரேய உபநிடதம் கற்றுக் கொடுத்தபோது பூக்கள்
அவர் மேல் மலைப்போல விழ, வாயுவின் அவதாரமான அவர் வாயுவாகவே மறைந்தார்.
அவர் பரம்பரையில்
வந்த ஜயதீர்த்தர், ஸ்ரீ பாத ராஜர் , வியாஸராஜர், வாதிராஜர்,ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர்,ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர் மற்றும் பலர் மத்வர் போற்றிய கொள்கைகளையும்,
தர்மத்தையும் நிலை நாட்டுவதற்காக பாடுபட்டனர். மத்வரை தினமும் நினைத்து அவர்
அருள் பெறுவோம், அவரின் கொள்கைகளை பரப்புவோம்.
பெங்களுரில்
இருந்து 396 கி.மீ பாஜகா ஷேத்திரத்திற்கு செல்லலாம்.
அருகில் இருக்கும்
ரயில் நிலையம் : உடுப்பி.
ஸ்ரீமத் ஹனுமத்
பீம மத்வாந்தர்கத ராமக்ருஷ்ண
வேதவ்யாஸாத்மக
லக்ஷ்மீ ஹயக்ரீவாய நம: !! ஹரி: ஓம் !!
ஹரி சர்வோத்தம வாயு ஜீவோத்தம!!
It was amazing to know about Madhavacharya. I am always proud to say I am a Madhwa.
ReplyDeleteஅருமை ஐயா. என்ன ஒரு தீர்க்கமான விளக்கங்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருக்கின்றது. நன்றி
ReplyDeleteExcellent story
ReplyDeleteத்வைத மத ஸ்தாபகர் மத்வாச்சாரியார் வாயு தேவரின் மூன்றாவது அவதாரம் வேதவியாசரின் பரிபூரண ஆசி பெற்ற மகான் உடுப்பியில் கிருஷ்ணரை ப்ரதிஷ்டை செய்தவர் பல மொழிகளை அறிந்த விற்பன்னர் அனைத்து முக்கிய ஆன்மீக தலங்களை தரிசித்த மகான் இவரின் சீடர் த்ரிவிக்ரம பண்டிதர் இயற்றிய ஹரிவாயுஸ்துதி அனைத்து துன்பங்களையும் போக்கும் அருமருந்து புத்திக்கூர்மை நல்லொழுக்கம் ஆன்மீக அறிவு உடல் வலிமை ஒருங்கே பெற்றவர் விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என்று அடித்து க்கூறுவார்ஸுமத்வ விஜய் மஹா காவியம் இவரின் வரலாற்றை விளக்கும் இதுபோன்ற தகவல்கள் அறிந்தேன் மிக்க மகிழ்ச்சி உங்கள் ஆன்மீக பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் வாழ்த்துக்கள்
ReplyDeleteA very attractive pen portrait of Madhwacharya swamiji who brought forth the dwaita tradition. Well written
ReplyDeleteஸ்ரீமன் மத்வாச்சாரியார்
ReplyDeleteஜீவாத்மாவும் பரமாத்மாவும் வேறு என்று நிலைநாட்டியவர் இவரது கொள்கை ஆதிசங்கரரின் கொள்கைக்கு மாறுபாடானது இவரது வாழ்க்கை வரலாறு நன்கு தெரிவிக்கப்பட்டுள்ளது இவர் வாய்வு தேவரின் மூன்றாவது அவதாரம் என்பது வியப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள்!
இது போன்ற ஆன்மீக கதைகளால் மனம் தெளிவடைவதோடு ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளவும் செய்கிறது. தொடர வேண்டும் இச் சீரிய பணி. வாழ்த்துக்கள்
ReplyDeleteVery interesting and unknown facts about ShriMadhwacharya are well presented. Thanks for the effort and pain taken in this great job.
ReplyDeleteமத்துவாச்சாரியாரின் உடல் வலிமையும், உடுப்பி கிருஷ்ணன் அவதரித்ததும் அருமை.
ReplyDeleteNice. Lot of details. Who are the other saints wrote bhashyam for Brahma sutram?
ReplyDeleteSri Adisankarar, Sri Ramanujar...
DeleteFor The First Time Iam Knowing About Sri Madhvacharya In Detail
ReplyDeleteVery Interesting, Thanks For Sharing
Keep Going...
For The First Time Iam Knowing About Sri Madhvacharya In Detail
ReplyDeleteVery Interesting, Thanks For Sharing
Keep Going...