ஆதி
குரு ஸ்ரீ தத்தாத்ரேயர் கலியுகத்தில் எடுத்த முதன்மை அவதாரம் ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ
வல்லபர். மகா தபஸ்வி யதிகளில் ஸ்ரேஷ்டர். அபரிமிதமான பூர்வ ஜென்ம புண்ணியத்தினால்
மட்டுமே இவரை பற்றி நாம் சிறிதளவாவது அறிய முடியும். வெளி உலகத்திற்கு அதிகம்
தெரியாமல் குப்தமாக மற்றும் சுக்ஷும ரூபமாக அருளும் பரம குரு.
கி.பி. 1320 ஆண்டு ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர்
ப்ரம்மஸ்ரீ கண்டிகோட்டா அப்பலராஜ சர்மா அவர்களுக்கும் அகண்ட லக்ஷ்மி சௌபாக்யவதி
சுமதி மஹாராணிக்கும் (மூன்றாவது குழந்தையாக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி
மாவட்டத்தில் உள்ள பிதாபுரம் என்னும் ஊரில் பிறந்தார். செவ்வாய் கிரஹத்தின்
ஆதிக்கத்தில் சித்திரை நக்ஷத்திரத்தில் ஸ்ரீ கணேச சதுர்த்தி அன்று அவதரித்தார். எனவேதான்
ஸ்ரீ கணேச சதுர்த்தி ஸ்ரீ ஸ்ரீ பாத வல்லபரின் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. பிறந்த
குழந்தையின் கால்களில் மீன் மற்றும் ஆமை மற்றும் சங்கு போன்ற வடிவ ரேகைகள்
இருந்தன. அப்படிப்பட்ட ரேகைகள் சாதாரண மானிடர்களுக்கு இருக்காது. தப்பித்தவறி
யாருக்காவது சங்கு ரேகை இருக்க முடியும். அதைக் கொண்டவர்கள் பெரும் வித்வான்களாக
இருப்பார்கள். ஆனால் கூர்ம அவதாரத்தைக் குறிக்கும் ஆமை மற்றும் மச்சாவதாரத்தைக்
குறிக்கும் மீன் போன்ற உருவ ரேகைகள் மானிடர்களுக்கு இருக்காது. அவை இரண்டும்
பெரிய மகான்களாக உருவெடுக்க உள்ளவர்களுக்கும், தெய்வாம்சம் பொருந்தியவர்களுக்கு மட்டுமே
இருக்கும்.
ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர் த்வாதச (12) ஆதித்யர்களை விட
உயர்ந்தவர். அவரது உடல் அற்புதமான தெய்வீக அதிர்வுகளால் ஆனது. அனைத்து தெய்வங்களின்
உருவமாகும்.இவரின் அற்புதங்களை ஸ்ரீ பாத வல்லப சரிதாம்ருதம் மிக மிக விரிவாக கூறுகிறது. மகா புண்ணியமான நூல் இது.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஜில்லாவில் இயற்கை எழில்
கொஞ்சும் பிட்டாபுரத்தில் உள்ளது குக்குடேஸ்வரர் திருக்கோவில். மகிமை வாய்ந்த 18 சக்தி
பீடங்களுள் பத்தாவது பீடமாகவும் பாத கயா தலமாகவும் புகழ்பெற்ற பிட்டாபுரம் புராதன ஆலயங்களுக்குப்
பெயர் பெற்ற நகரம் சக்தியின் உடல் பாகத்தில்
பிருஷ்ட பாகம் விழுந்த இடமாதலால் பீடிகாபுரம் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி பிட்டாபுரம்
ஆனது. இந்த பிட்டாபுரத்தில்தான் இவரின் மூல மஹாசமஸ்தானம் உள்ளது.
33 கோடி ருத்ர கணங்களின் அதிபதி ஸ்ரீ கணபதி. தன்னிலுள்ள
கணபதி தத்துவத்தை ஒரு யோக வழியில் உலகிற்கு வெளிப்படுத்தவே ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ
வல்லபர் கணேச சதுர்த்தி அன்று பூமியில் அவதரித்தார். ஆகையால் எவரொருவர் ஸ்ரீ ஸ்ரீ
பாத ஸ்ரீ வல்லபரை ஸ்மரணம் செய்து வழிபாடு செய்து பூஜை செய்கிறார்களோ அவருக்கு 33
கோடி ருத்ர கணங்களின் அருளும் கிடைக்கும்.
ஆகையால் சித்திரை நக்ஷத்திரத்தில் அவரை பூஜித்தால்
அனைத்து கிரஹ தோஷங்களும் நீங்கிவிடும். சித்திரை நக்ஷத்திரத்தின் பொழுது அல்லது
செவ்வாய் கிழமைகளில் ஸ்ரீ பாதர் செந்நிறத்தில் ஜொலிப்பர். அவர் அன்று
அருணாச்சலேஸ்வரராக ஜொலிப்பர். ஆகையால் செவ்வாய்கிழமை சித்திரை நக்ஷத்திரம் அன்று
பூஜை செய்வது மிக மிக விசேஷமாகும், கன்னியர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும்,
பூத பிசாசுகளின் தொல்லை நீங்கும். ச்ராவண மாத முழு பௌர்ணமியன்று ஸ்ரீ வாசவி கன்யா ஸ்ரீ
பாதருக்கு ராக்கி அணிவித்த புண்ணிய தினம். அன்று பீடிகாபுரத்தில் இருப்பவர்களுக்கு
சித்ர குப்தன் அதிக புண்ணியம் என எழுதுகிறார் என்று ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப
சரிதாம்ருதம் இயம்புகிறது.
இவர் கர்நாடக மாநிலத்தில் குருவபுரத்தில் ஜலசமாதி அடைந்தார்
என்றும் இன்றும் சிரஞ்சீவியாக தன்னை வழிபடும் உண்மையான பக்தர்களுக்கு நெருக்கடியான
தருணங்களில் தரிசனம் அளிக்கும் சர்வ வல்லமை படைத்தவராகவும் விளங்குகிறார். குரு சரிதத்தின் படி, வல்லபேசன் என்னும் பக்தனுக்காக சூலம் ஏந்திய சிவ பெருமானாக அவனை கொன்ற கொடியவர்களை
அழித்து மீண்டும் உயிர்ப்பித்த சக்தி மிக்கவர்.
அபார
தீர்க்க தரிசி. ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ சமர்த்த ராம்தாஸ் சுவாமி, ஸ்ரீ இராமலிங்க
அடிகள், ஸ்ரீ சதாசிவ ப்ரம்மேந்திரரின் அவதார ரஹஸ்யங்களை முன்பே கணித்து கூறியவர்.
புரட்டாசி மாதம் தேய்பிறை துவாதசி திதி ஹஸ்த நட்சத்திர நாளன்று கிருஷ்ணா நதியில் மூழ்கி ஜல சமாதி அடைந்தார் .
ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் தன் அவதாரத்தை முடித்துக் கொண்டாலும் அங்கு பக்தர்களுக்கு தரிசனம் தந்து அருள் புரிகிறார் .
தற்போது பக்தர்கள் புரட்டாசி மாதம் தேய்பிறை துவாதசி திதியன்று வணங்கி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
மூன்று
நாட்களுக்கு இடைவிடாது ஸ்ரீ பாத நாமத்தை ஜெபிப்பவருக்கும் த்யானம் செய்பவருக்கும்
ஸ்ரீ பாதர் ஸ்தூல உடலுடன் எலும்பும்
தோலுடன் தத்ரூபமாக தரிசனம் அளிப்பார். எப்படி ஸ்ரீ விநாய பெருமானை துதித்தால் சகல
தேவதைகளை வணங்கின பலன் கிடைக்குமோ அப்படி ஸ்ரீ பாத வல்லபரை வணங்கினால் சகல குரு மூர்த்தங்களை வணங்கின பலன்
கிடைக்கும்.
ஸ்ரீ பாத ராஜம் சரணம் பிரபத்யே !
திகம்பரா திகம்பரா ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப திகம்பரா!
(இந்த மந்திரத்தை எப்பொழுதுவேண்டுமானாலும் ஜெபித்தால் எல்லா துக்கங்களும் பாபங்களும் அழிந்து போய்விடும்)
மிகவும் அருமை ! அறியப்படாத பல தகவல்கள்!நன்றக
ReplyDeleteஅறியப்படாத பல தகவல்கள்! மிகவும் அருமை! நன்றி
ReplyDeleteI got more Information.Very Good.
ReplyDeleteIt is a very special and beautiful account on his jayanti. Thank you
ReplyDeleteஆதிகுரு தத்தாத்ரேயர் கலியுகத்தின் முதன்மை அவதாரமாக சீரீ சீரீ பாதவல்லபராக அவதரித்தார் என்பதனை தெரியப்படுத்தி அம்மகாணின்ஜெயந்தி அன்று அவரின் வாழ்க்கை வரலாற்றை தந்த உங்களுக்கு என்மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் தெய்வத்தால் ஆகாத காரியம் குருவை சரண்அடைந்தால் பெறமுடியும் என்பதை அறிந்து கொண்டேன் திகம்பரா திகம்பரா சீரீபாதவல்லபதிகம்பரா அரிய நல்ல ஆன்மீக பதிவுகள் தரும் உங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்
ReplyDeleteமிக அருமையான பதிவு۔ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் ஸ்ரீ கணேச சதுர்த்தி அன்று பிறந்தார்۔ அன்றைய தினத்தில் அவரது அவதார பெருமைகளை அறிவது மிக மிக பாக்கியம் நிறைந்ததாகும்۔ மிக எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் தாங்கள் பதிவிட்டு இருப்பது மிகவும் பாராட்டுக்குரியதாகும்۔ தங்களுடைய ஆன்மீக இறை பணி தொடர எல்லாம் வல்ல குருவையும் இறைவனையும் பிரார்த்திக்கின்றேன்۔ ஜெய ஜெய ஸ்ரீ ஸ்ரீபாத ஸ்ரீ வல்லபா۔ திகம்பரா திகம்பரா ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப திகம்பர۔
ReplyDeleteஅனைவருக்கும் ஐயன் ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபரின் ஜெயந்தி இன்று என் தெரிவித்து அவருடைய அருளையும் ஒரு சேர கிடைக்க வைத்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி. தங்களால் அவரையும் வணங்கும் பாக்கியம் கிடைக்கிறது.
ReplyDeletewe have his temple in Kancheepuram Melsirunai village near Balu chetty chatram
ReplyDeletehttps://www.facebook.com/sreepada2498/videos/300756937883404/?sfnsn=wiwspmo&extid=NZhzqv0YO8Q6KRu2&d=n&vh=e
simply superb
ReplyDeleteஸ்ரீபாத ஸ்ரீ வல்லபர் இன் சரிதம் மிக சுருக்கமாக அழகாக தெரிவிக்கப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்.
ReplyDeleteUnknown facts about Shri Dattatreya avathara Sripada Vallabar presented in anice manner. We are blessed to read this article on an auspicious day. Thanks.
ReplyDeleteஸ்ரீபாதவல்லபர் பற்றிய தகவல் தந்த தங்களுக்கு என் வணக்கங்கள்
ReplyDelete