🔱 வசுதேவருக்கும் ரோஹிணிக்கும் ஆதிசேஷனின் அம்சமாக பிறந்தவர் பலராமர். இவர் மஹாவிஷ்ணுவின் 8ஆவது திருஅவதாரம். மக்களிடம் அதிகம் பேசப்படாத ஒரே தசாவதாரம். அதற்கு காரணம் பல பல. பகவான் ஸ்ரீ நாராயணர் ராமாவதாரத்தில் லட்சுமணனின் சேவைக்கு தன்னுடைய நன்றி கடனை தீர்ப்பதற்காக தன்னுடைய க்ருஷ்ணாவதாரத்தில் ஆதிசேஷனை தனக்கு ஜேஷ்டனாக பிறக்க வைத்து சேவைகள் புரிந்து தன்னுடைய நன்றி கடனை தீர்த்தார்.
🔱 வைகாசி மாத
சுக்கில பட்ச திருதியை திதியில், கிருஷ்ணருக்கு மூத்தவரான ஹலாயுதன், சங்கர்ஷணன் (பலராமன்)
தோன்றினார்.
வைசாகே சுக்லபக்ஷே து த்ருதீயாயாம் ஹலாயுத:
சம்கர்ஷணோ பலோ ஜக்ஞே ராம: க்ருஷ்ணாக்ரஜோ ஹரி:
🔱 இவர் பலதேவர்,
பலபத்திரர், சங்கர்ஷணர், ஹலாயுதன் என்று பல திருநாமங்களில் அழைக்கப்படுகிறார். இவர்
வெண்ணிற தோற்றத்தில் அபார தேஜஸுடன் இருப்பார். மிகுந்த பலசாலி உலகையே தாங்கும் ஆதிசேஷனின்
அம்சாவதாரம்.
🔱 உலகையே காத்து ரக்ஷிக்கும் ஸ்ரீமன் நாராயணனையே தாங்கும் வல்லமை படைத்தவர் ஆதிசேஷனான ஸ்ரீ பலராமர். பலராமரின் முழு பராக்கிரமத்தை அறிந்தவர் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஒருவர் மட்டுமே. அதனால்தான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ பலராமரிடம் சற்று அனுசரித்தே செல்வார்.
🔱 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் அரசாட்சி புரியும் பொழுது பலராமனை கலந்து ஆலோசிக்காமல் எந்த ஒரு முடிவையும் எடுக்க மாட்டார், அண்ணனிடம் மிகுந்த மரியாதையும், நன்மதிப்பும் வைத்து இருந்தார். கிருஷ்ணரும் பலராமரும் இரண்டு ரூபங்களுடனும் இரண்டு வேறுபட்ட பாவங்களுடனும் வீற்றுள்ள ஒரே முழுமுதற் கடவுள். இவரின் சகோதரி சுபத்ரா தேவி. இவரது மனைவியின் பெயர் ரேவதி. மகள் வத்ஸலா. தன்னுடைய மகளை அபிமன்யுவிற்கு மணம் முடிக்கிறார்.
🔱 த்ரேதா யுகத்திலே
இராமாவதாரத்தின் போது இலஷ்மணனாக அவதரித்து இராமருக்கு சேவை செய்தார், துவாபர யுகத்தி’லே
அவரே பலராமராக அவதரித்தார். இந்த கலியுகத்திலே நாம் எல்லோரும் உய்யவும் விசிஷ்டாத்வைதம்
உலமெங்கும் பரவ ஸ்ரீ ராமானுஜராக திருஅவதாரம் புரிந்தார்.
🔱 பிருந்தாவனத்தில், ஆயர்பாடியிலும் ஸ்ரீ கிருஷ்ண பலராம
லீலைகள் தெவிட்டாத புண்ணிய சரிதங்கள். தேனுகாசுரன், பிரலம்பன், மயிந்தன், ருக்மி மற்றும் பல முக்கிய அசுரர்களை அழித்து மக்களை
காத்ததில் இவருக்கு பெரும் பங்கு உண்டு.
🔱 மகாபாரத்தில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் கதை பயிற்சி
கற்று கொடுத்தவர்.
🔱 கிருஷ்ணனின்
மைந்தனான சாம்பனை சிறை மீட்டு மீண்டும் ஸ்ரீ க்ருஷ்ணனரிடம் அளித்தவர்.
🔱 கையில் கலப்பை
வைத்து இருப்பதால் விவசாயிகளின் முன்னோடியாக கருதப்படுகிறார்.
🔱 துரியோதனன்
பலராமரிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தான். இதையறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், பலராமரை புண்ணிய
க்ஷேத்ராடனம் அனுப்பி மஹாபாரத யுத்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் செய்தார். கிருஷ்ணரின்
தேர்ந்த ராஜதந்திரம்.
🔱 ஸ்ரீ மத்வ
சம்பிரதாயத்தில் ஸ்ரீமன் நாராயணர், சதுர்முக பிரம்மா, கருட, சேஷ, ருத்ர என்று தாரதம்ய
முறைப்படி வணங்குவர். இந்த தாரதம்யத்தில் சேஷ என்பது சங்கர்ஷணராகிய ஸ்ரீ பலராமரையே
குறிக்கும்.
🔱 சங்கர்ஷணரின்
அம்ச அவதாரமாக ஸ்ரீ ஸ்கந்தன் மத்வ சம்பிரதாயத்தில் வணங்கப்படுகிறார். இன்றும் கர்நாடக
மாநிலத்தில் சேஷனாக குமாரசுவாமி வணங்கப்படுகிறார். அதில் மிக முக்கியமான திருக்கோயில்
ஸ்ரீ சுப்ரமண்யா இங்கு ஸ்ரீ நாகராக முருகப்பெருமான் அருள் புரிகிறார். வாசுகி என்னும்
பாம்பிற்கு அடைக்கலம் அளிக்கும் சேஷனாக முருகன் அருள்பாலிக்கிறார்.
🔱 யதுகுலம்
முடிவுற்றதையும், க்ருஷ்ண அவதாரம் முடியப்போவதையும் உணர்ந்த பலராமர் யோகநிலையில் அமர்ந்தார்.
யோகத்தின் துணைக்கொண்டு தன் உடலை அழித்து வெள்ளை பாம்பாய் உருக்கொண்ட அவர் ஆத்மா கடலில்
கலந்தது. தன் அண்ணனான பலராமனுக்கு சடங்குகள் செய்வித்து க்ருஷ்ணரும் வேடன் இட்ட அம்பால்
தன் அவதாரத்தை முடித்துகொண்டார்.
பலராமர் காயத்ரி
ஓம் ஹலாயுதாய வித்மஹே
மஹாபலாய தீமஹி
தன்னோ பலராம ப்ரசோதயாத்
பலராமர் திருஅவதாரம் புரிந்த இந்நன்னாளில் அவரை வணங்கி அருள் பெறுவோம்.
பலராமர் காயத்ரி
ReplyDeleteஓம் ஹலாயுதாய வித்மஹே
மஹாபலாய தீமஹி
தன்னோ பலராம ப்ரசோதயாத்
பலராமர் திருஅவதாரம் புரிந்த இந்நன்னாளில் அவரை வணங்கி அருள் பெறுவோம். Great History and it's very interesting. Thank you
தங்களின் ஆன்மிக பயணம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்....
ReplyDeleteதங்களின் ஆன்மிக பயணம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்....
ReplyDeleteபலராமர் அவதார நாளில் இப்புண்ணிய சரித்திரம் வெளியிடப்பட்டது நாங்கள் செய்த பாக்கியம் மிகவும் அருமையான பதிவு மேலும் மேலும் உங்கள் ஆன்மீக பணி தொடர என் வாழ்த்துக்கள்
ReplyDeleteIt is very nice to read a detailed but grisp commentary on his jayanti. Skanda is a reflection of him is news to me. Well written.
ReplyDeleteதொடரட்டும் தங்களது இந்த அரிய ஆன்மீகப் பயணம். ஜெய் சாய் ராம்.
ReplyDeleteIt is very nice to read a detailed but grisp commentary on his jayanti. Skanda is a reflection of him is news to me. Well written.
ReplyDeleteVery nice to read this article on this auspicious day and very nicely written
ReplyDeleteVery nice to read this article on this auspicious day and very nicely written
ReplyDeleteIhanks for the opportunity to know more about balaraman.
ReplyDeleteGood Story
ReplyDeleteஸ்ரீபாத சிறி வல்லவரின் அத்தியாயம் நாலு மற்றும் ஸ்ரீ பலராமரின் சரித்திரம் ஆகியவற்றைக் கேட்டேன் மிகவும் அருமையாக நன்றாக இருந்தது நிகழ்ச்சிகளை கேட்க ஆர்வம் உள்ளவனாக இருக்கிறேன் தொடர்ந்து அனுப்பவும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteVery good story
ReplyDeleteமிக அருமை. வாழ்க வளமுடன். அடுத்த ஆன்மீக செய்திக்கு ஆவலுடன் இருக்கிறோம். நன்றி.
ReplyDeleteExcellent Story
ReplyDeleteBeautiful presentation of details regarding Balarama. Thanks.
ReplyDelete