ஸ்ரீமன் நாராயணனின் 5 ஆவது திருஅவதாரம்.
விவஸ்வானுடைய புத்திரன் சிராத்த தேவன் ஏழாவது மனுவாக இருக்கிறார். இந்த மன்வந்த்ரத்தில்,
ஸ்ரீமன் நாராயணர் கஸ்யபருடைய கடைசி புத்திரராக பாத்ரபத மாதத்திய சுக்ல பக்ஷ த்வாதசி
திதியும், ச்ரவண நக்ஷத்திரமும் கூடிய சுப தினத்தில் அபிஜித் என்ற ச்ரவணத்தின் முதல்
பாக நக்ஷத்திரத்தில் அதிதி மற்றும் கஸ்யபர் தம்பதிக்கு பயோ விரதத்தின் பலனாய் சங்கு,
சக்கரம், கதை மற்றும் தாமரையுடன் பகவான் வாமனர் (குள்ளமான) கருப்பு நிற தேகத்துடனும்,
மஞ்சள் நிற ஆடையுடனும் அவதாரம் புரிந்தார். மார்பில் ஸ்ரீவத்ச அடையாளம் இருந்ததது.
இந்திரனின் பெற்றோர் கஸ்யபர்-அதிதி. ஆதலால் வாமனர் இந்திரனுக்கு சகோதரன் முறையாவார்.
ஸ்ரீமன் நாராயணனின் தசாவதாரத்தில் முழுமையான பிராம்மண அவதாரம் வாமன அவதாரம்தான்.
(பரசுராமர் அந்தணர் குலத்தில் பிறந்தாலும் 21
க்ஷத்ரிய வம்சத்து அரசர்களை அழித்ததனால் நிறைவான பிராம்மண அவதாரமாக நம் நினைவில்
இருப்பதில்லை).
இவர் பிறப்பின் பொழுது அநேக சுப சகுனங்கள் தோன்றின.
வாமனருக்கு
உபநயனம் செய்யும் பொழுது, சூரிய தேவன் காயத்ரி மந்திரம் உபதேசித்தார். தேவ குரு பிரஹஸ்பதி
யக்னோபவீதம் (பூணுல்) அணிவித்தார். கஸ்யபர் மேகலையையும் (ப்ரஹ்மச்சாரி இடையில்
அணியும் முப்புரி கயிறு), பூமி க்ருஷ்ணாஜினத்தையும் (கருப்பு மானின் தோல்), சந்திரன்
தண்டத்தையும், மாதாவான அதிதி கௌபீனத்தை மறைக்கக்கூடிய வஸ்திரத்தையும், த்யுலோகமானது
குடையையும், பிரம்மா கமண்டலத்தையும், சப்தரிஷிகள் தர்பைகளையும், சரஸ்வதி ஜபமாலையையும்,
குபேரன் பிக்ஷ பாத்திரத்தையும், உமாதேவி முதல் பிக்ஷை அளித்தாள். அபார பிரம்ம தேஜஸுடன்
திகழ்ந்தார். அதனால்தான் அந்தணர் இல்லங்களில் பூணுல் போடுவது தள்ளிப்போனால் ஸ்ரீ வாமன
மூர்த்தியை நினைத்தால் உடனே நடைபெறும் என்பது நிதர்சனமான உண்மை.
பகவான் வாமனரின் கால் விரலிலிருந்து உற்பத்தியாகும் கங்கை நீரை சிவ பெருமான்
தனது சிரம் மீது தாங்கி கொண்டார். அப்பேற்பட்ட மகிமை பொருந்திய அவதாரம் ஸ்ரீ வாமன அவதாரம்.
ப்ரஹ்லாதனின் பேரனான மஹாபலி
சக்ரவர்த்தியின் விஸ்வஜித் என்ற மஹாயாகத்தை ப்ருகு குல அந்தணர்கள் மிகவும் விமர்சையாக
நடத்தினார்கள்.
100 அசுவமேத யாகங்கள்
செய்தால் இந்திரப் பதவியை அடையலாம் என்று முடிவு செய்து யாகங்களைச் செய்யத் தொடங்கினான்
மஹாபலி. அவ்வாறு அவன் யாகம்
செய்து முடித்துவிட்டால் தேவலோகம் முழுமையும் நிரந்தரமாக அவன் வசமாகிவிடும் என்பதால்
தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் சரண் அடைந்து தங்களைக் காக்குமாறு வேண்டினர்.
பகவத்
சங்கல்பத்தின்படி அடுத்த மன்வந்தரத்தில்தான் மஹாபலிக்கு இந்திர பதவி. ஆனால் பலி
பகவத் சங்கல்பத்தை மீறி சற்று ஆணவ மிகுதியால் நடப்பதை கண்டு மனம் பொறுக்காத
ஸ்ரீமன் நாராயணர் அவனது ஆணவத்தை அடக்க வாமனராக சென்றார்.
மஹாபலி நம் நினைப்பது
போன்று சாதாரண அசுரன் அல்ல. பகவான் ஸ்ரீ மன் நாராயணனே நேரிடையாக சென்று யாசகம் கேட்டாரென்றால்
அவனது கீர்த்தி நமக்கு விளங்கும்.
மஹாபலியின் தனி சிறப்புகள் சில:-
- மஹாபலி சப்த சிரஞ்சீவிகளில் ஒருவன்.
- ப்ரஹ்லாதனின் பேரன்.
- அடுத்த மன்வந்த்ரத்தில் இந்திர பதவிக்கு வருபவன்.
- இவனின் பாதாள லோகத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு வாயில் காப்பானாக இருந்து
பாதுகாத்து வருகிறார்.
- இவனின் நினைவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- பகவானாகிய புருஷோத்தமனாகிய நாராயணனுக்கே யாசகம் கொடுத்த கீர்த்திமான்.
- கற்பக வ்ருக்ஷத்தைவிட அள்ளி கொடுக்கும் கொடையாளி.
- எப்படி இவனின் பாதாள லோகத்தில் ஸ்ரீமன் நாராயணன் வாயில் காப்பாளனாக உள்ளாரோ, அதேபோல் இவனின் 100 புதல்வர்களில் ஒருவனான
பாணாசுரனின் சோணிதபுரத்தில் சிவபெருமான் வாயில் காப்பாளனாக உள்ளார்.
பகவான் ஸ்ரீ மன் நாராயணனிற்கு 1000 நாமங்கள் இருந்தாலும் பின்வரும் 24 திருநாமங்கள் ஜபிப்பது மிகவும் புண்ணியம் தரும். அதில் 13 மற்றும் 15 ஆம் திருநாமங்கள் முறையே ஓம் த்ரிவிக்ரமாய நம மற்றும் ஓம் வாமனாய நம என்பது ஸாக்ஷத் ஸ்ரீ வாமன மூர்த்தியை குறிப்பிடுகின்றன என்றால் இதன் மகத்துவம் நமக்கு நன்கு விளங்கும்.
மஹாபலி வாமனரின் திவ்ய தேஜஸினால் உந்தப்பட்டு அவரை முறைப்படி வரவேற்று, தங்களின்
வருகையால் தனது வம்சமும், நாடும் அனைத்து மக்களும் புனிதமடைந்தோம் மற்றும் தங்களின்
விருப்பம் ஏதுவாகினும் அதனை நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதியும் அளித்தான்.
வாமனர் இதுதான் சமயம் என்றெண்ணி மகாபலியின் மூதாதையர் மற்றும் அவனது வம்சத்தின்
சிறப்பையும் கூறி அவனிடம் மூன்றடி நிலத்தை யாசித்தார். இது மிகவும் அற்பமானதால் வேறு
ஏதாகினும் உயர்ந்த ஒன்றை தானமாக அளிப்பதாக கூற, வாமனர் தனக்கு மூன்றடி நிலம் போதுமானது
என்று கூற, மஹாபலி வேறு வழியின்றி தருவதாக ஒத்துக்கொண்டார். அசுரர் குருவாகிய சுக்கிராச்சார்யர்
வந்திருப்பது ஸாக்ஷத் ஸ்ரீமன் நாராயணன் அவசரப்பட்டு வாக்கு அளித்து விடாதே என்று கூறினார்.
மஹாபலி பகவான் நாராயணனே யாசகம் கேட்டால் எப்படி தர மறுப்பது என்று தூய பாகவத எண்ணத்துடன்
தானம் அளிக்க தயாரானான். தனது முதல் அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் ஆகாசத்தையும்,
மூன்றாவது அடிக்கு இடமின்மையால் மஹாபலி தனது ஆணவம் அழிந்து தனது சிரத்தின்மீது பகவானின்
திருப்பாதத்தை வைக்குமாறு வேண்டினான். வாமனர் தனது புனித திருவடியை மகாபலியின் சிரத்தின்
மீது வைத்து அவனை பூமியில் அழுத்தி பாதாள லோகத்திற்கு சக்ரவர்தியாக்கி அனுக்கிரஹம்
புரிந்தார். என்னே நாராயணரின் காருண்யம். இதனை கண்ணுற்ற தனது பரம பக்தனும் மஹாபலியின்
தாத்தாவுமாகிய ப்ரஹ்லாதரை பார்த்து பகவான், சுதலலோகம் சென்று உன்னுடைய பேரனுடன் சந்தோஷமாக
வசிப்பாயாக என்றதும், ப்ரஹ்லாதர் பகவானை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்கரித்து விடைபெற்று
சுதல லோகம் சென்றார்.
வாமனர் பலியிடமிருந்து பூமியை யாசித்து, மூவுலகத்தையும் தனது சகோதரனாகிய இந்திரனுக்கு
கொடுத்து அவனுடைய இந்திர லோகத்தையும் மஹாபலியிடமிருந்து மீட்டார்.
இதில் என்னவொரு விந்தை என்றால் ஸ்ரீமன் நாராயணனின் தசாவதாரத்தில், வராஹம், நரஸிம்ஹம்,
வாமன, ராம, கிருஷ்ண அவதாரங்கள் ப்ரஹ்லாத/மஹாபலியுடன்
ஒன்றுக்கொன்று தொடர்புடையது. எப்படி என்று பார்த்தால் நமக்கு மிகப்பெரும் ஆச்சர்யமாகவும்
அதிசயமாகவும் இருக்கும்.
வராஹம் - இரண்யாக்ஷன் வதம் - ப்ரஹ்லாதரின் சிறிய தந்தை.
நரஸிம்ஹம் - இரண்யகசிபு வதம் - ப்ரஹ்லாதரின் தந்தை.
வாமனர் - மஹாபலி கர்வ பங்கம் - ப்ரஹ்லாதரின் பேரன்.
ராமர் - இந்த ப்ரஹ்லாதர் கலியுகத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளாக திருஅவதாரம் புரிந்து
மத்வ பீடத்தை அலங்கரித்து மூல ராம பூஜை செய்து தனது ஹரிபக்தியை நிலைநாட்டினார்.
கிருஷ்ண - பாணாசுர கர்வ பங்கம் - பலிச்சக்ரவர்த்தியின் 100 புதல்வர்களில்
மூத்தவன், பெரும் சிவபக்தன்.
வேறு எந்த வம்சத்திற்கும் கிடைக்காத இவ்வரிய நிகழ்வு ப்ரஹலாத வம்சத்திற்கு கிடைத்தது.
அதனால்தான் கீதையில் கிருஷ்ணன், அசுரர்களில் நான் ப்ரஹ்லாதன் என்கிறார்.
ஜலமத்யே வராஹம் ச பார்வதி ரகுநந்தனம் !
கமனே வாமனம் சைவ ஸர்வ காலேஷு மாதவம்!!
தாம் அக்ஷீணாம் பலிகிரம் உபாக்ர்ண்ய காருண்ய பூர்ண: அபி அஸ்ய உத்ஸேகம் ச மயிதுமனா:
தைத்யவம்சம் ப்ரசம்ஸன் பூமிம் பாதத்ரய பரிமிதாம் ப்ரார்த்தயாம் ஆஸித த்வம் ஸர்வம் தேஹீதி
து நிகதிதே கஸ்ய ஹாஸ்யம் நவாஸ்யாத் - நாராயணீயம் தசகம் (31-2)
இப்புண்ணிய சரிதம் கேட்பதும் படிப்பதும் பரம விசேஷம். தேவ, பித்ரு காரியங்கள்,
ஏகாதசி நடைபெறும் சமயத்தில் படித்தால் மஹா மஹா புண்ணியம்.
வாழ்த்துக்கள் சார். தங்களின் ஆன்மிக பயணம் தொடரட்டும்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சார். தங்களின் ஆன்மிக பயணம் தொடரட்டும்...
ReplyDeleteவாழ்த்துக்கள் சார். தங்களின் ஆன்மிக பயணம் தொடரட்டும்...
ReplyDeleteAs I started to celebrate onam in Kanniyakumari district as a small boy with most of friends, I was having a childish grudge against the action of the Lord in the form of Vamana. My loyalty continued with Mabali Thamburan. The detailed note here has made me mellow with the narration of the background and the necessity. Very good.
ReplyDeleteநன்றி ஐயா. திருவோண சமயத்தில் ஸ்ரீ வாமனமூர்த்தி அவதார மகிமை படித்ததில் ஒரு மனநிறைவு .
ReplyDeleteபகவான் நாராயணரின் வாமன அவதாரம் குறித்து அவரது ஜெயந்தி தினத்தன்று படித்து அவரது அருளைப் பெறும் வண்ணம் இக்கட்டுரை அமைந்துள்ளது பிரகலாத வம்சத்தில் குள்ளேயே பகவான் கிருஷ்ணரின் ஐந்து அவதாரங்கள் நிகழ்ந்திருப்பது வியப்பாக உள்ளது ஓனம் பண்டிகை வாழ்த்துக்கள்
ReplyDeleteAt the outset of Onam festival, very glad to read Vamana Charithram very well presented. May the Lord give us strength to come out of this dreadful disease. Thanks.
ReplyDeleteமகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஐந்தாவது அவதாரமாக வாமன அவதாரம் உள்ளது குறிப்பாக ஓணம் திருநாள் ஒட்டிய தங்களின் ஆன்மீக பதிவு அதிஅற்புதம் பகவான் வாமனரின் கால்விரலிலிருந்து உற்பத்தியாகும் கங்கை சிவபெருமானின் சிரத்தில் தாங்கிக்கொள்ளப்படுகிறது என்ற செய்தி வாமனரின் சிறப்பைக்காட்டுகிறது மகாபலி இந்திரபதவிஅடையநடத்தும் விஸ்வஜித் தடுத்து நிறுத்த பகவான் வாமனராக உருக்கொண்டு மூன்று அடிகேட்டு மகாபலியைஆட்கொள்ளும் விதம் அற்புதம்தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி வாழ்த்துக்கள்
ReplyDeleteநமஸ்காரம்.அந்தந்த பண்டிகை நாட்களுக்கு ஏற்ப அதன் தொடர்புடைய தகவல்களை பகிர்வது குறித்து மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவாமன சரிதம் neatly presented.vaztnukkal raghu
ReplyDeleteSimply nice
ReplyDelete