மாதவன் , அம்பா பவானி என்னும் சிவ பக்த தம்பதிகளுக்கு.
தத்தாத்ரேயரின் இரண்டாவது கலியுக அவதாரமாக பிறந்தவர் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி
ஸ்வாமிகள். பிறந்த குழந்தை அழாமல் முதலில் ஓம்காரத்தை உச்சரித்து அனைவரையும்
ஆச்சர்யப்படுத்தியது. இவரது ஜாதகத்தை கணித்த ஜோதிடர்கள் இக்குழந்தை ஒரு
தெய்வீகப்பிறவி என்றும், அனைவர்க்கும் குருவாக இருந்து நமது ஹிந்து சனாதன தர்மத்தை
காப்பனானென்றும், அஷ்டமாசித்திகளும் இவனது வாயிலில் குற்றேவல்புரிய காத்திருக்கும்
என்றனர். பெற்றோர்கள் அக்குழந்தைக்கு நரஹரி என்று பெயர் சூட்டினர்.
நமது குரு பரம்பரையில் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதிக்கு சிறப்பான இடம் உண்டு. இவரின்
பிறப்பு, அவதார நோக்கம், அவரின் மஹிமை, தீர்த்த யாத்திரை, க்ஷேத்ர மஹிமை பற்றி ஸ்ரீ
குருசரித்ரம் மிக மிக விரிவாக பேசுகிறது.
இவர் நரசிம்ம மூர்த்தியின் அம்சமாக கருதப்படுகிறார். அதனால் தான் அவருக்கு
மிகவும் ப்ரீதியான அத்தி மரத்தினடியில் ஸ்ரீ நரசிம்ம ஸரஸ்வதி நித்ய வாசம் புரிந்தார்.
இவரை வணங்குவதால் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் பரி பூரண க்ருபா கடாக்ஷம் நமக்கு கிடைக்கும்.
கணேசோ வாக்னினா யுக்தோ விஷ்ணுனா
ச ஸமன்வித
வர்ணத்வயாத்மகோ மந்த்ர சதுர்வர்க பலப்ரதா
குரு என்னும் இரண்டெழுத்து கணேசர், அக்னி மற்றும் விஷ்ணு ஆகியோரின் பெயர்களை
உள்ளடக்கியது.
குரு: பிதா குருர் மாதா குருதேவோ பர: சிவா
சிவருஷ்டே குருஸ்த்ராதா குரோருஷ்டே ந கச் சன !!
குருவே அன்னை, தந்தை, அந்த சிவபெருமானுமாவார். சிவன் கோபம் கொண்டால் குரு காப்பாற்றுவார்.
ஆயின் குரு கோபம் கொண்டால் அந்த மும்மூர்த்திகளாலே காப்பாற்ற முடியாது.
குரு பரம்பரை
ஸ்ரீ சதாசிவன் - ஸ்ரீமன் நாராயணன்
- சதுர் முக ப்ரஹ்மா – வசிஷ்டர்- சக்தி - பராசரர் - வ்யாஸர் - சுக ப்ரஹ்மம் - கௌட பாதர் - கோவிந்த பகவத் பாதர்
- ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யர் - ஸ்ரீ விஸ்வரூபாச்சார்யர்- ஸ்ரீ ஞானபோதகிரி- ஸ்ரீ சிம்மகிரி-
ஸ்ரீ ஈஸ்வர தீர்த்தர்- ஸ்ரீ நரசிம்ம தீர்த்தர்- ஸ்ரீ வித்யா தீர்த்தர்- ஸ்ரீ சிவ தீர்த்தர்-
ஸ்ரீ பாரதி தீர்த்தர்- ஸ்ரீ மலியானந்தர்- ஸ்ரீ தேவதீர்த்தர்- ஸ்ரீ சரஸ்வதி வ்ருந்தர்-
ஸ்ரீ யாதவேந்திர சரஸ்வதி- ஸ்ரீ கிருஷ்ண சரஸ்வதி - ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி.
நரஹரிக்கு ப்ரஹ்மோபதேசம் செய்விக்க அவனின் பெற்றோர்
முடிவு செய்தனர். அனைவரும் இப்புனித வைபவத்திற்கு அழைக்கப்பட்டனர். சரியாக பேச்சு
வராத இக்குழந்தை எவ்வாறு காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் என்று அனைவரும்
ஒருவருக்கொருவர் பேசினர். அம்பா பவானி மாத்ரு போஜனம் செய்வித்தபின் பல புண்ணிய
மந்திரங்கள் சாஸ்திரோதமாக ஓதப்பட்டு யக்னோபவீதம் என்னும் பூணுல் நரஹரியின்
மார்பில் அணிவிக்கப்பட்டது. குரு முகமாக உபதேசிக்கப்பட்ட காயத்ரி மந்திரத்தை நரஹரி
மனதில் உச்சரித்தான்.
அதன்படி முதல் பிக்ஷா வந்தனத்திற்கு தாயிடம் சென்றவுடன், முதல் பிக்ஷயை இட்டு
அவனிடம் ரிக்வேதம் படிக்குமாறு கூற, உடனே நரஹரி 'அக்னிமீளே புரோஹிதம்' என்று ரிக் வேதத்தின் முதல் வாக்கியத்தை
கூறினான். இரண்டாவது பிக்ஷையிட்டவுடன் யஜுர் வேதத்தின் முதல் வாக்கியமான ' ஈஷேத்துவா /இஷேத்வா'
எனவும், மூன்றாவது பிக்ஷை அளித்ததும், சாம வேதத்தின் முதல் வாக்கியமான் 'அக்னி ஆயாஹி ' என்றவுடன் சுற்றி இருந்த
அனைவருக்கும் வியப்பாகவும் அதே சமயம் ஆச்சர்யமாகவும் இருந்தது. சரியாக பேச்சு வராத
ஊமை குழந்தை இப்படி அக்ஷர சுத்தமாக வேதும் ஓதுகிறது என்றால் நிச்சயம் இக்குழந்தை
ஓர் தெய்வீக பிறவியாக மட்டும்தான் இருக்க முடியும் என்று நினைத்தனர்.
நரஹரி தன் தாயிடம் அம்மா நான் துறவறம் கொள்ளும் நேரம்
வந்து விட்டது. என்னை தயவு செய்து சன்யாச ஆஸ்ரமம் ஏற்றுக்கொள்ள அனுமதி
அளிக்கும்படி வேண்டினான். அம்மா சென்ற ஜென்மத்தில் தங்கள் செய்த சிவ பூஜையின்
விளைவாகத்தான் நான் இன்று உங்களின் மகனாக பிறந்தேன். உங்களுக்கு இன்னும்
குழந்தைகள் பிறந்து மிகவும் கீர்த்தியுடன் விளங்குவார்கள். அம்பா பவானி , மகனே
எனக்கு அடுத்த குழந்தை பிறக்கும் வரை நீ எங்கு எங்களுடன் இருக்க வேண்டும் என்று
கூற நரஹரியும் அதற்கு சம்மதம் தெரிவித்தான். அம்பா பவானி இரட்டை மகவை ஈன்றதும்,
நரஹரி சன்யாச ஆஸ்ரமம் மேற்கொண்டு அன்னையிடம் மற்றும் சுற்றி இருந்த அனைவரிடமும்
விடை பெற்று, கவலைதோய்ந்த அன்னையிடம், அம்மா வருந்தாதே அனைத்தும் ஈஸ்வர
சங்கல்பத்தினால் மட்டுமே நிகழ்கிறது. ஒருவன் சன்யாச ஆஸ்ரமம் மேற்கொள்ளும் பொழுது
அவனுடைய 21 தலைமுறைகளும் மோக்ஷம் அடைகின்றன. நான் இப்பொழுது பத்ரிகாஸ்ரமம் சென்று நர
நாராயணர்களை தரிசித்து புண்ணிய யாத்திரை மேற்கொண்டு 30 வருடங்கள் கழித்து திரும்ப
வருவதாக வாக்களித்துவிட்டு சென்றார்.
பத்ரிநாத் செல்லும்வழியில் வாரணாசியில் ஸ்ரீ கிருஷ்ண
சரஸ்வதியிடம் சன்யாச தீக்ஷை ஏற்றார்.
இன்றும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் பீடாதிபதியாக
வருபவர்கள் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளும் மற்றும் நெரூரில் உள்ள ஸ்ரீ ஸதாசிவ
ப்ரமேந்திர ஸ்வாமிகளையும் வணங்குவதை ஸம்ப்ரதாயமாக வைத்துள்ளனர்.
இவர் தனது கடைசி 20 வருடங்கள் குல்பர்கா அருகில் உள்ள
ஸ்ரீ கானகாபூரில் வாழ்ந்தார். இவரால் குருவபுரம் மற்றும் கானகாபூர் புண்ணிய க்ஷேத்ரங்களாக
விளங்கின.
இவர்
புரிந்த மெய் சிலிர்க்கும் அற்புதங்கள் பல :
தனது முந்தைய அவதாரத்தில் தன்னை வணங்கிய பெண்ணிற்கு
அடுத்த ஜென்மத்தில் மகனாக பிறந்தது.
தனது பக்தனான வண்ணானை அடுத்த ஜென்மத்தில் மன்னனாக
பிறக்க வைத்தது.
இறந்தவர்களை உயிர்பித்தது.
பாஸ்கரன் என்னும் ஏழை அந்தணனின் மலட்டு எருமை பால்
சுரந்தது.
65 வயதான கங்காபாய்க்கு மகப்பேறு வழங்கியது. இவர்களுக்கு
பிறந்த சரஸ்வதி என்னும் பெண்ணிற்கு மாபெரும் புகழ் மிக்க ஒருவர் கணவனாக வருவார் என்ற
குரு வாக்கிற்கு ஏற்ப, பரம அத்வைதியான ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் கணவனாக வரும் பாக்கியம்
குருவின் கிருபையினால் கிடைத்தது.
ஓர் அந்தணனின் தீராத வயிற்று வலியை தீர்த்தது.
சாயம்தேவன் என்னும் பக்தனுக்காக முகமதிய மன்னனுக்கு
தக்க பாடம் புகட்டியது.
குருவை தவறாக புரிந்த ஒருவனுக்கு குரு மஹிமையை
விளக்கி கூறியது.
அறிவற்ற அந்தண சிறுவனுக்கு பேசும் திறனை அளித்து அவனை
மேதையாக்கியது.
ஏழை அந்தணனின் வீட்டிற்கு பிட்சைக்கு சென்று
அங்கிருந்த அவரைக்கொடியை அறுத்து பானை நிறைய பொன்னை அளித்த நிகழ்வு.
பிரம்மராக்ஷசன் சாபத்திலிருந்து ஒரு பெண்ணை
விடுவித்து, அவளின் பிள்ளை இறந்தபொழுது ஞானம் புகட்டி இறந்த குழந்தையை மீண்டும்
உயிர்ப்பித்து.
விஸ்வரூப தரிசனம் அளித்து த்ரிவிக்ரம பாரதி என்னும்
பண்டிதனுக்கு அருள் புரிந்தது.
படிப்பறிவற்ற மாதங்கன் என்பவனை வைத்து இரு கர்வமிக்க
அந்தணர்களின் செருக்கை அகற்றியது.
பாஸ்கரன் என்னும் ஏழை அந்தணன் சமைத்த மிக சிறிய உணவை
பல்லாயிரம் மக்கள் உண்ட அற்புதம்.
நரகேசரியின் தொழுநோயை குணப்படுத்தி கல்லேஸ்வரராக
காட்சி அளித்தது.
நெசவாளியாகிய தனது உண்மையான பக்தனுக்கு ஸ்ரீ சைலம்
ஸ்ரீ மல்லிகார்ஜுனனனாக காட்சி அளித்தது.
நந்தி சர்மாவின் தீர்க்க முடியாத வெண்குஷ்டத்தை
நீக்கியது.
எட்டு வடிவங்கள் எடுத்து எட்டு இடங்களில் பக்தர்களை அனுகிரஹித்தது.
விவசாயி பர்வதேசனின் வயலில் 10 மடங்கு மகசூல்
கிட்டுபடி செய்தது.
இப்படி இவர் புரிந்த மகிமைகள் ஏராளம். இவரை பற்றி ஸ்ரீ
குருசரித்ரம் என்னும் புண்ணிய நூலில் மிக மிக விரிவாக காணலாம்.
பஹுதான்ய ஸம்வத்ஸரத்தில் (1458 கி.பி) பிரஹஸ்பதி கன்னியிலிருக்க,
மாக மாசம் கிருஷ்ணபக்ஷம் பிரதமை வெள்ளிக்கிழமை புண்ணிய தினத்தன்று ஸ்ரீ சைலம் மல்லிகார்ஜுனருடன்
ஐக்கியமானார். 300 வருடங்கள் ஸ்ரீ சைலத்தில் ஸ்ரீ மல்லிகார்ஜுனத்தில் உள்ள கதலி வனத்தில்
குப்தமாக இருந்து , அதன் பிறகு ஸ்ரீ சுவாமி சமர்த்தராக திரு அவதாரம் புரிகிறார்.
ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி
அஷ்டகம்
இந்து
கோடி தேஜ கிர்ண சிந்து பக்தவத்சலம்
நந்தனாத்ரி
சூனுதத்த இந்திராட்ச ஸ்ரீகுரும்
கந்த
மால்ய அக்ஷதாதி வ்ருந்த தேவ வந்திதம்
வந்தயாமி
நரசிம்ஹ ஸரஸ்வதீச பாஹிமாம்
மோஹ
பாச அந்தகார சாயதூர பாஸ்கரம்
ஆஹிதாக்ஷ
பாஹீஸ்ரீய வல்லபேச நாயகம்
ஸேவ்ய பக்த
வ்ருந்த வரத பூயோ பூயோ நமாம்யஹம்
வந்தயாமி
நரசிம்ஹ ஸரஸ்வதீச பாஹிமாம்
சித்தஜாதவர்கஷ்டக
மத்தவார்ணாங்குசம்
ஸத்வஸார
சோபிதாத்ம தத்தஸ்ரீயாவல்லபம்
உத்தமாவதார
பூத கர்த்ரு பக்தவத்ஸலம்
வந்தயாமி
நரசிம்ஹ ஸரஸ்வதீச பாஹிமாம்
வ்யோம
வாயுதேஜ ஆப பூமி கர்த்ருமீச்வரம்
காமக்ரோத
மோஹரஹித ஸோம சூர்யலோசனம்
காமிதார்த்த
தாத்ருபக்த காமதேனு ஸ்ரீகுரும்
வந்தயாமி
நரசிம்ஹ ஸரஸ்வதீச பாஹிமாம்
புண்டரீக
ஆயதாக்ஷ குண்டலேந்து தேஜஸம்
சண்டதுரித
கண்டனார்த்த தண்டதாரி ஸ்ரீகுரும்
மண்டலீக
மௌலி மார்தாண்ட பாஸிதானனம்
வந்தயாமி
நரசிம்ஹ ஸரஸ்வதீச பாஹிமாம்
வேத
சாஸ்திர ஸ்துத்ய பாதமாதிமூர்த்தி ஸ்ரீகுரும்
நாத
பிந்து கலாதீத கல்பபாத ஸேவ்யயம்
ஸேவ்ய
பக்த வ்ருந்த வரத பூயோ பூயோ நமாம்யஹம்
வந்தயாமி
நரசிம்ஹ ஸரஸ்வதீச பாஹிமாம்
அஷ்டயோக
தத்வ நிஷ்ட துஷ்டஞான வாரிதிம்
கிருஷ்ணவேணி
தீரவாஸ பஞ்சநதி ஸங்கமம்
கஷ்ட
தைன்யதூர பக்த துஷ்டகாம்யதாயாகம்
வந்தயாமி
நரசிம்ஹ ஸரஸ்வதீச பாஹிமாம்
நரஸிம்ஹ
ஸரஸ்வதீச அஷ்டகம்ச ய: படேத்
கோர
சம்ஸார சிந்து தாரணாக்ய ஸாதனம்
ஸார
ஞான தீர்க்க ஆயு ஆரோக்யாதி ஸம்பதம்
சாருவர்க
காம்ய லாப நித்யமேவய: படேத்
இந்த நரசிம்ம சரஸ்வதி
அஷ்டகத்தை எவனொருவன் படிப்பானோ
அவனுக்கு ஞானமும், நீண்ட ஆயுளும்
ஆரோக்கியமும் , எல்லா செல்வங்களும் நான்கு
விதமான புருஷார்த்தங்களும் பெற்று சம்ஸாரமென்ற கடலைத்
தாண்டுவதற்கு ஏதுவாக இருக்கும்.
வாழ்த்துகள் sir. தங்களின் ஆன்மிக பயணம் தொடரட்டும்...
ReplyDeleteவாழ்த்துகள் sir. தங்களின் ஆன்மிக பயணம் தொடரட்டும்...
ReplyDeleteதங்களது ஆன்மீக உரைகள் மிகவும் நன்றாக உள்ளன. நன்றி
ReplyDeleteதங்களது ஆன்மீக உரைகள் மிகவும் நன்றாக உள்ளன. நன்றி
ReplyDeleteஅருமை. தங்கள் ஆன்மீகத் தகவல் ஆச்சரியப் பட வைக்கிறது. வாழ்க வளமுடன்.
ReplyDeleteIt is so beautiful. You have done very good background work to gather the details.
ReplyDeleteதங்கள் ஆன்மீக கருத்துக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி....
ReplyDeleteஸ்ரீநரசிம்ம சரஸ்வதியின் பதிவு மிக அற்புதம்۔ ஸ்ரீநரசிம்ம சரஸ்வதி ஸ்ரீதத்தாத்ரேயரின் இரண்டாவது அவதாரம் ஆகும்۔ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லவராக அவதரித்து பின்னர் இரண்டாவது அவதாரத்தில் நரசிம்மர் சரஸ்வதியாக திருஅவதாரம் புரிந்தவர்۔ இவருடைய அவதார சிறப்பை அறிவதற்கு பல ஜென்ம புண்ணிய பலன்கள் நாம் புரிந்து இருக்க வேண்டும்۔ தாங்கள் மிக சுருக்கமாக அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் மிக அழகாக பதிவு செய்துள்ளது உண்மையிலேயே பாராட்டத்தக்க விஷயமாகும்۔ ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமிகள் குல்பர்கா அருகில் கானகாபூரில் அவருடைய நிர்குண பாதுகைகள் அமைந்திருக்கின்றன۔ அங்கு சென்று அவரை தரிசித்து குரு குரு அருள் பெற்று அனைவரும் நான்கு வித புருஷார்த்தங்களையும் பெறவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்۔ தங்களுடைய ஆன்மிகப் பணி தொடர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏
ReplyDeleteகுரு பரம்பரை. . தத்தாத்ரேயர் வாயிலாக தொடங்குகிறது பாதவல்லபருக்கு பிறகு தோன்றியகுருமகான் நரசிம்ம சரஸ்வதி சுவாமிகள் என விளக்கி அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை மிக தெளிவாக கூறியுள்ளீர்கள் மிகவும் அக்கறையுடன் ஆராய்ந்து தந்துள்ளீர்கள் அவருடைய அதிசயங்கள். பிரமிக்க வைக்கிறது அரிய கேட்டறியாதஉங்களின் ஆன்மீக தேடல் பாராட்டுக்கு உரியது வாழ்த்துக்கள் குருவே மாதா பிதா என்ற வாக்கு சத்தியம் அதனால் தானோ மாதா பிதா குரு என்றாயிற்றோ? க்ருப்பியோநமஹ
ReplyDeleteGood presentation
ReplyDeleteதங்களது ஆன்மீக உரைகள் மிகவும் நன்றாக உள்ளன. நன்றி
ReplyDeleteWondetful presentation of lifestory of a great seer and his mahima well described.
ReplyDeleteWondetful presentation of lifestory of a great seer and his mahima well described.
ReplyDeleteஸ்ரீ தத்தாத்ரேயரின் இரண்டாவது அவதாரமான நரசிம்ம சரஸ்வதி சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு இந்த அத்தியாயத்தில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவரது வரலாறு சுருக்கமாக அழகாகஅமைந்துள்ளது அவர் செய்த அதிசயங்கள் மிக சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன தங்களது ஆன்மீக பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்!
ReplyDelete