ராதேஸம் ராதிகாப்ராண வல்லபம் வல்லவீஸுதம்
ராதேஸேவித பாதாப்ஜம் ராதா வக்ஷஸ்தலஸ்திதம்
ராதானுகம் ராதிகேஷ்டம் ராதாபஹ்ருத மானஸம்
ராதாதாரம் பவாதாரம் ஸர்வாதாரம் நமாமிதம்
ராதா ரமணகிருஷ்ண ஸ்தோத்ரம்
கிருஷ்ண ஜென்மாஷ்டமிக்கு அடுத்த அஷ்டமி ராதாஷ்டமி.
ஸ்ரீமதி ராதாராணி திருஅவதாரம் புரிந்த நன்னாள். இந்த வருடம் 26-08-2020 (புதன் கிழமை)
ஸ்ரீ ராதாஷ்டமி.
மஹாலக்ஷ்மியின் மூல அவதாரமாக கருதப்படுகிறார். ஸ்ரீ
கிருஷ்ணரின் அந்தராத்மாவாகவும், அந்தரங்க சக்தியாகவும், உள்ளுணர்வாகவும், நித்ய துணைவியாகவும்
வீற்றிருந்து ஆட்சி புரிவதனால் "ஸ்ரீ
மதி ராதா ராணி" என்று அழைக்கப்படுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் அஷ்ட மஹிஷிகளுக்கு கிடைக்காத சிறப்பு
ராதாவின் பிரேம பக்திக்கு கிடைத்தது. அதனால் தான் ராதா கிருஷ்ணன் என்றும் ராதே கிருஷ்ணா
என்றும் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமாவுடன் சேர்த்து துதிக்கப்படுகிறாள்.
பரிபூரண தூய பக்தி, பிரேமம் (தெய்வீக காதல் உணர்வு) இவற்றில் ஸ்ரீ கிருஷ்ணரின் முதன்மை பக்தை என்ற
சிறப்பு பெற்ற ஒரே சக்தி ஸ்ரீ மதி ராதா ராணியாகும். மற்ற யாருக்கும் கிடைக்காத ஒரே
பாக்கியம் ஸ்ரீ மதி ராதா ராணிக்கு கிடைத்தது. இது ஸ்ரீ கிருஷ்ணரே மனமுவந்து அளித்த
பொக்கிஷம். அதனால்தான் பாகவதோத்தமர்களில் ஸ்ரீ கிருஷ்ண பக்திக்கு முன்னோடியாக ஸ்ரீமதி
ராதாரணி அசைக்க முடிய சக்தியாக விளங்குகிறாள்.
கிருஷ்ணரின்
சேவையில் ராதாராணியே முதலிடம். கிருஷ்ணருக்கு சேவை செய்வதில், ஸ்ரீமதி
ராதாராணிக்கு இணையாக வேறு யாரையும் கூற இயலாது.
ஸ்ரீ கிருஷ்ணர் மதுராவில் அவதாரம் புரிந்த சிறு
நாழிகை கழித்து ஸ்ரீமதி ராதாரணி வ்ருஷபானு மன்னரின் தோட்டத்தின் அருகே யமுனை நதியில்,
பொன் தாமரை மலரில் அவதரித்தார். இவரின் தாயார் கீர்த்திதா. குழந்தையின் தேகம் பொன்னிறமாக
ஜொலித்தது. பூர்வ ஜென்ம புண்ணிய குவியல் மற்றும் பகவத் சங்கல்பத்தினால் மன்னர் வ்ருஷபானு
மஹாலக்ஷ்மியின் மூலமான ஸ்ரீ ராதா ராணியின் தகப்பனார் ஆகும் பாக்கியம் கிடைத்தது.
இத் தெய்வீக குழந்தை பிறந்ததும் கண் திறக்கவும் இல்லை வாய் பேசவும் இல்லை. பெற்றோர்கள்,
மற்ற குழந்தைகளை போல் இல்லாமல் இயற்கைக்கு வினோதமான முறையில் இருப்பதை கண்டு மிக்க
மனம் வருந்தினர். இவர்களின் கவலையை போக்கும் விதமாக ஸ்ரீ நாரத மகரிஷி, அவர்கள் இல்லம்
வந்து உடனே இக்குழந்தை பிறந்ததிற்கான விழா நடத்துங்கள் அனைத்தும் சுபமாக முடியும் தங்களின்
மனக்கவலையும் போய்விடும் என்றும் கூறினார்.
நாரதரின் ஆணைப்படி, மன்னர் வ்ருஷபானு மிக கோலாகலமாக விழாவிற்கு ஏற்பாடு செய்தார்.
இப்புனித விழாவிற்கு அனைத்து உறவினர்கள், பந்து மித்ரர்கள் மற்றும் இவரின் நெருங்கிய
நண்பருமான ஸ்ரீ நந்தகோபரும் அழைக்கப்பட்டார். ஸ்ரீ நந்தகோபர், யசோதா, ரோகினி பலராமர்,
ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் அனைத்து வ்ருஷ்ணி இனத்தவர்களும் விழாவிற்கு சென்றனர்.
சின்னஞ்சிறு குழந்தை கிருஷ்ணர் தவழ்ந்து, ராதாராணியின் தொட்டில் அருகே சென்றார். தன் பிஞ்சு விரல்களில் இருந்த
புல்லாங்குழல் நழுவி ஸ்ரீமதி ராதாராணி மேல் விழ, ராதா ராணி தனது முதல் பார்வையை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் மீது
செலுத்தினாள். என்ன ஒரு மனோகரமான நிகழ்வு. கற்பனைக்கும் எட்டாத பிரேம நிகழ்வு. வசீகரமான
அந்த கிருஷ்ணரின் பார்வையின் காந்தத்தினால் உந்தப்பட்டு அவள் மனதில் ஸ்ரீ கிருஷ்ணரைத்
தவிர வேறு யாரும் இல்லாத பிரேம பக்தியுடன் திகழ்ந்தாள். உலகத்திலேயே கிருஷ்ண பரமாத்மாவின்
பக்தர்களில் முதன்மையானவர் என்ற சிறப்பு அந்தஸ்து பெற்றார். வேறு யாருக்கும் கிடைக்காத
அரிய பொக்கிஷம். ஸ்ரீ கிருஷ்ணரின் மனமெனும் அரண்மனையில் நித்ய ராணியாக ஸ்ரீ மதி ராதா
ராணி கொலுவீற்று இருக்கிறாள்.
ஒருவர் கிருஷ்ணரின் கருணையை பெறுவதற்கு, ஸ்ரீமதி
ராதாராணியின் கருணையை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும். யார் ஒருவர் கிருஷ்ணருக்கும்,
கிருஷ்ண பக்தர்களுக்கும் சேவை செய்கிறாரோ அவர்
ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருடத்தின் ஒரு நாள் அதாவது ஸ்ரீ ராதாஷ்டமி அன்று
மட்டும்தான் ஸ்ரீ மதி ராதா ராணியின் திருப்பாதம் தர்சனம் பண்ண முடியும். ஆண்டு முழுவதும்
ஸ்ரீ கிருஷ்ணரின் பாத தரிசனத்தை விட வருடத்தின் ஒரே ஒரு நாள் ஸ்ரீமதி ராணியின் பாத
தர்சனம் மிக புண்ணியம். ஏனென்றால் தன்னைவிட தன்னுடைய பக்தர்களின் தரிசனத்தையே ஸ்ரீ
மன் நாராயணன் மிகவும் விரும்புகிறார்.
ஸ்ரீராதாஷ்டமி அன்று செய்ய வேண்டியது:.
அன்று மதியம் வரை விரதம் இருக்க வேண்டும்.
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகபட்சம் உச்சரிக்க
வேண்டும். ஸ்ரீமதி ராதாராணியின் திருப்பாத தரிசனம் செய்ய வேண்டும்.
மகா காருண்ய சிந்து. பக்தர்களுக்கும் பகவானுக்கும் ஓர் பாலமாக இருந்து அனைத்து
கோரிக்கைகளையும் நிறைவேற்றி கொடுப்பவள்.
பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் ஸ்ரீமதி ராதா ராணியின்
பிரேம பக்தி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.
கோடி மன்மத அழகும், தேஜஸும் உடையவள். அனைவரையும்
வசீகரிக்கும் அதி ரூப லாவண்யம் ஸ்ரீ மதி ராதாரணியினுடையது. அனைத்தும் பிரம்மமாக கண்ட
சுக ப்ரஹ்மத்தையே சற்று அசைத்து பார்த்த பக்தி என்றால் அது ஸ்ரீமதி ராதா ராணியின் பிரேம
பக்தி ஒன்று மட்டுமே. உலகில் உள்ள அனைத்து பிரேம பக்தியின் மூலம் ஸ்ரீ மதி ராதா ராணியினுடையது
என்று ஸ்ரீ சுகர் கூறுவார்.
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தில் வரும் ஹரே என்னும்
சொல் ஸ்ரீமதி ராதா ராணியையே குறிக்கும்.
ஹரே கிருஷ்ண
ஹரே கிருஷ்ண
கிருஷ்ண
கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம
ஹரே ராம
ராம ராம
ஹரே ஹரே
என்னும் மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால்
‘ராதா’ என்று பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும்போது ‘ராதே’ என்று மாறுவதைப்
போலவே, ‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.
இதில் என்னவொரு விந்தை என்றால் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா
ராதாவினுடைய பிரேம பக்தியின் ஆழம் அறிவதற்காக மாயாப்பூரில் ஸ்ரீ கிருஷ்ணா சைதன்ய மஹாப்ரபுவாக
திரு அவதாரம் புரிந்து அதனை அனுபவித்தார். அப்பேற்பட்ட பக்தி ஸ்ரீ ராதாவினுடையது.
விருந்தாவனத்தின் அம்பிகையாக ஸ்ரீ மதி ராதா ராணி
விளங்குகிறாள். வ்ருந்தாவனம் முழுவதும் ஸ்ரீ மதி ராதா ராணி ப்ரபாவம்தான். மும்பையில்
ஒருவருக்கொருவர் சந்திக்கும் பொழுது எப்படி ராம் ராம் என கூறுவார்களா அப்படி விருந்தவனத்தில்
ராதே கிருஷ்ணா என்று கூறுவார்கள்.
நாம் அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது ஸ்ரீ வ்ருந்தாவனம்
சென்று ஸ்ரீமதி ராதா ராணியை தரிசனம் செய்ய வேண்டும்.
தப்த காஞ்சன கௌராங்கி
ராதே வ்ருந்தாவனேஸ்வரி
வ்ருஷபானு ஸுதேதேவி
ப்ரணமாமி ஹரி-ப்ரியே
“பொன்னிற மேனியுடையவரும், வ்ருஷபானு மஹாராஜாவின் புதல்வியுமான ராதாராணியே,
விருந்தாவனத்தின் ஈஸ்வரியே, உம்மை நான் வணங்குகின்றேன்.”
ராதே கிருஷ்ணா !!!!
Super Raghu
ReplyDeleteThis is indeed touched me a lot, for it has taught me more about Radhamani. Previously I was not knowing much about the background of her. Thanks to Raghu I am able to learn new things regarding our scriptures and culture.
ReplyDeleteExcellent
ReplyDeleteIt is so beautiful. I can assert that thanks to Raghu I am getting to something about our scriptures and culture.
ReplyDelete2682020ல் ராதாஷ்டமியை ஒட்டிய தங்களின் ஆன்மீக பதிவு அற்புதம் அதிஅற்புதம் மகாலக்ஷ்மி யின் மூல அவதாரமாகவும் மற்றும் கிருஷ்ணரின் நித்தியதுணைவியாகவும் விளங்குபவர் கிருஷ்ண பக்திக்கு வித்திட்டவரே ராதாராணிதான் கிருஷ்ணரின் அருளைப் பெற இவரின் அனுக்கிரகம் அவசியம் வருடத்தில் ஒருநாள் அதாவது ராதாஷ்டமி அன்று தான் இவரின் பாததரிசனம் கிடைக்கும் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்றமஹாமந்திரம் ராதாராணியைத்தான் குறிக்கும் மேலே சொன்ன தகவல்கள் உங்கள் மூலம் அறியப்பெற்றேன் எந்தெந்த நாட்களில் என்னென்ன விஷேங்கள் வரும் என்பதை அறிந்து வழங்கும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி ஜெய் ராதாராணி ஜெய் கிருஷ்ணா
ReplyDeleteநாளை ஸ்ரீ ராதாஷ்டமி என்பதால் சமயம் பார்த்து ஸ்ரீமதி ராதாராணி அவதாரம் குறித்து கட்டுரையாக எழுதி இருந்ததைப் படித்தேன் சின்ன வயதில் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாட்டு கேட்ட போது கண்ணன் ராதா நமக்கு என்றென்றும் நினைவுக்கு வருகிறார்
ReplyDeleteநன்றி.
அருமை ஐயா. நன்றி.ராதேகிருஷ்ணா.
ReplyDeleteஅருமை. ராதே கிருஷ்ணா.ஆன்மீகத்தேடலுக்கு வந்தனம்.
ReplyDeleteOn the day of Radhashtami, we are blessed to read the touching facts about Radhamani, a great devotee of Lord Krishna. Thanks.
ReplyDelete