பகவான் ஸ்ரீ மன் நாராயணன் எடுத்த அவதாரங்கள்
24. அவற்றில் தசாவதாரம் மிகவும் முக்கியமானது. அதிலும் பரிபூரண அவதாரமாக விளங்குவது
ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ண என்னும் இரண்டு அவதாரங்கள் மட்டும்தான்.
யாதவ குலத்தில்
மொத்தம் ஏழு பிரிவுகள் உள்ளன. அதில் ஹைஹேயர்கள் யாதவ குலத்தில் உயர் பிரிவை சேர்ந்தவர்களாகவும்
மற்ற யாதவ குல பிரிவுகளான சேதர்கள், விதர்ப்பர்கள், அந்தகர்கள், குகுரர்கள், போஜர்கள்
மற்றும் விருஷ்ணிகள். ஸ்ரீ கிருஷ்ணர் இதில் விருஷ்ணி பிரிவை சேர்ந்தவர். இவரால் வ்ருஷ்ணி
வம்சமே புகழ் பெற்றது.
ஸ்ராவண பஹுள அஷ்டமியன்று ரோஹிணி நக்ஷத்திரத்தில்
சந்திர வம்சத்தில் ஸ்ரீ வசுதேவருக்கும் தேவகிக்கும் மகா விஷ்ணுவின் எட்டாவது
அவதாரமாக பிறந்தவர். பின்பு கோகுலத்தில் யசோதா மற்றும் நந்த கோபரால்
வளர்க்கப்பட்டவர்.
ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தை ரூபமும், பால்ய லீலைகளை
எத்துணை முறை கேட்டாலும், படித்தாலும், பார்த்தாலும் சலிக்காத ஒன்று. இது ஸ்ரீ க்ருஷ்ணருக்கே
உரித்தான அடையாளம். ஸ்ரீ ராம கிருஷ்ண அவதாரங்கள் மட்டுமே என்றும் ஒன்றுக்கொன்று பிரிக்க
இயலாததாக விளங்குகின்றது. பல கனக்கற்ற அசுரர்களை அழித்து பூ பாரத்தை குறைத்து உலகில்
சனாதன தர்மத்திற்கு வித்திட்ட இறைவனில் பிரதானமாக கருதப்படுபவர் ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா.
ஸ்ரீ கிருஷ்ணர்
அகில உலங்களுக்கும் இறைவனாக (Universal God) விளங்குகிறார். இது இவருக்கு மட்டும் உண்டான
தனிச்சிறப்பு.
கி.மு.
3228, ஜூலை 19ம் நாள், ஸ்ரவன மாதம் தேய்பிறையின் அஷ்டமி திதியின் நள்ளிரவில்,
மதுராவின் சிறைச்சாலையில் கிருஷ்ணர் குழந்தையாக அவதரித்தார். அன்றிரவே கோகுலம்
சென்றடைந்தார்.
3 வருடம் , 4 மாதங்கள் வரை கோகுலத்தில் வசித்த
பின், விருந்தாவனம் சென்றார். மேலும் 3 வருடம் 4 மாதங்களை விருந்தாவனத்தில்
கழித்தபின் 6 வருடம் 8 மாத வயதில், நந்தகிராமத்திற்கு இடம் பெயர்ந்தார்.
10 வருடம் 7 மாத வயதில் சைத்ர மாத தேய்பிறையின்
11வது நாளில் கம்சனின் அழைப்பின் பேரில் மதுரா சென்றார். (கிருஷ்ணரின் திவ்யமான
உடல் பத்து வயதைத் தாண்டி மாறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) அன்றிலிருந்து
பதினான்காவது நாளில் கம்சனைக் கொன்றார்.
18 வருடங்கள் 4 மாதங்கள் மதுராவில் வசித்த
கிருஷ்ணர், 28 வயதில் துவாரகை கோட்டையை நிறுவி அங்கு வசிக்கத் தொங்கினார்.
கி.மு 3138, 90 வயதில் பகவத்கீதையை அர்ஜுனனுக்கு
உபதேசித்தார்.
96 வருடங்கள் 8 மாதங்கள் துவாரகையில் வசித்த
பின், கி.மு 3102, பிப்ரவரி 18ம் நாள், 125 வயதில், பல்குன மாதத்தின் அமாவாசை
அன்று இவ்வுலகிலிருந்து புறப்பட்டு, மீண்டும் ஆன்மீக உலகத்திற்குச் சென்றார்.
(ஆதாரம் : ஸ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர் அருளிய
பாகவத உரை)
ஸ்ரீ கிருஷ்ணரின் குரு ஸ்ரீ சாந்தீபனி மகரிஷி.
நந்தகோபரின் குல குரு கர்காசார்யர்.
நாம ஜெபம், பஜனை சம்பிரதாயங்களில் பிரதானமாக ஸ்ரீ
ராம மற்றும் கிருஷ்ண கீர்த்தனங்களே இடம்பெறும்.
நமது சனாதன தர்மத்திற்கு வித்திட்ட ஸ்ரீ ஆதி
சங்கர பகவத்பாதரின் குல தெய்வம் ஸ்ரீ கிருஷ்ணர்.
ஆயிரம் விஷ்ணு நாமங்கள் ஒரு ராம நாமத்துக்கு
சமம் என்றும், மூன்று ராம நாமம் ஒரு கிருஷ்ண நாமத்துக்கு சமம் என்று ஸ்ரீமத்
பாகவதத்தில் கூறப்பட்டு உள்ளது.
ஐந்தாம் வேதமான ஸ்ரீ பகவத் கீதை என்னும் ஒப்பற்ற
பொக்கிஷத்தை குருவாகி அர்ஜுனனை மூலமாக வைத்து நமக்கு அளித்த மஹா குரு. இந்த
ஜகத்திற்கே ஆதி புருஷர் மற்றும் ஆதி குரு ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவர் மட்டுமே "ஸ்ரீ க்ருஷ்ணம் வந்தே ஜகத்
குரும்" என்று நாம் வணங்கும் அனைத்து குரு மஹநீயர்களின் க்ருபா
கடாக்ஷம் முடிவில் ஸ்ரீ க்ருஷ்ணரையே சென்று அடைகிறது. இறைவனை குருவாக பார்ப்பது ஸ்ரீ
தக்ஷிணாமூர்த்திக்கு பிறகு ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை மட்டுமே. தாமே இந்த பிரபஞ்சத்தில்
அனைத்திலும் முழுமையாக வியாபித்து இருப்பதாகவும், அனைத்து தேவதைகளின் வடிவமாகவும்,
அனைத்து வழிபாடுகளும், பூஜை முறைகளும் முடிவில் தம்மை வந்து அடைவதாகவும் பகவத் கீதையின் 10 ஆவது அத்யாயமான விபூதி யோகத்தில்
ஸ்ரீ கிருஷ்ணன் கூறுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூபமே இதற்கு சாட்சியாக விளங்குகிறது.
ஸ்ரீமத் பாகவதம் (10ஆவது அத்யாயமான தசம ஸ்கந்தம்)
மஹாபாரதம், விஷ்ணு புராணம், ஹரி வம்சம், ஸ்ரீ மகா பக்த விஜயம் முழுமையும் ஸ்ரீ
கிருஷ்ண ப்ரபாவம்தான்.
பரமாத்மா என்னும் சப்தம் ஸ்ரீ கிருஷ்ணரயே குறிக்கும்.
முக்தி ஞானம் வழங்கும் ஒரே கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் மட்டுமே.
ஸ்ரீ கிருஷ்ணரின் அம்சங்களாக கருதப்படுபவை: பசு,
அந்தணர், தேவர், மூத்தோர் , குரு மற்றும் ஜீவ ராசிகள்.
அணைத்து
மந்திரங்களிலும் பிரதானமான ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம் ஸ்ரீ பீஷ்ம பிதாமஹரால் குருக்ஷேத்ரத்தில்
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் முன்னால் கூறப்பட்ட பெருமை பெற்றது.
நமது ஹிந்து தர்மத்தின் ஆணிவேராக வேதத்திற்கு அடுத்தபடியாக
விளங்குவது ஸ்ரீ மத் பகவத் கீதையும் , ஸ்ரீ மத் பாகவத மஹாபுராணமும் , ஸ்ரீ
விஷ்ணு சஹஸ்ரநாமமும் மட்டுமே. இம்மூன்றும் ஸ்ரீ கிருஷ்ணரால் மட்டுமே நமக்கு கிடைத்த
பொக்கிஷம்.
கோ பூஜை, காயத்ரி ஜபம், அந்தணர்களை வணங்குதல், பகவத்
கீதை பாராயணம், கங்கா ஸ்னானம், குரு பூஜை, மாதா பிதா வந்தனம், ஸஹஸ்ரநாம பாராயணம், நாம
ஜெபம், தானம் வழங்குதல், சத்யம் வழுவாமை, பதி ஸேவை, ஸ்த்ரீ சம்ரக்ஷணம் இவை க்ருஷ்ண பக்தர்களுக்கு
இருக்க வேண்டிய உன்னத லக்ஷணங்கள்.
கிருஷ்ணர் வணங்கும்
ஆறு பேர்
நித்யான்ன தாதா
தருணாக்னிஹோத்ரி
வேதாந்தவித் சந்திர சஹஸ்ர தர்சீ
மாஸோபாவாசீச
பதிவ்ரதா ச
ஷட் வந்தனீ யா மம ஜீவ லோகே
நித்ய அன்னதானம்,
அக்னிஹோத்ரம், வேதம் ஓதுவோர், சதாபிஷேகம் செய்து கொண்டவர், ஏகாதசி உபவாசம் இருப்பவர்
மற்றும் பதிவ்ரதா பெண்கள்.
ஸப்த புண்ணிய ஷேத்ரங்களில் இரு புண்ணிய க்ஷேத்ரங்களான
மதுரா மற்றும் துவாரகா ஸ்ரீ க்ருஷ்ணர் வாசம் புரிந்த இடங்களாகும். (மற்றவை காசி, அவந்திகா,
காஞ்சி, அயோத்யா,ஹரித்வார்)
நமது பாரத புண்ணிய பூமியில் குரு மஹநீயர்களில் பெரும்பாலும்
ஸ்ரீ ராம மற்றும் ஸ்ரீ க்ருஷ்ணரை பிரதான மூர்த்தியாக வணங்கி நமது பூமியில் சனாதன தர்மத்தை
வித்திட்ட பிரதான ஸ்ரீ கிருஷ்ண பாகவதோத்தமர்கள்: நாரதர் , உத்தவர், திரௌபதி, அர்ஜுனன்,
ஸ்ரீமன் மத்வாசார்யர், ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாப்ரபு, நாமதேவர்,
துக்காராம், ஞானதேவர், நிவ்ருத்தி மஹாதேவ், பக்த மீரா, ஜனாபாய், சூர்தாசர், ஸ்ரீ நாராயண
பட்டதாரி, பில்வமங்கள ஸ்வாமிகள், குரூர் அம்மையார், பூந்தானம் மற்றும் பல பல பாகவதோத்தமர்கள்.
ஸ்ரீ கிருஷ்ணரின்
அஷ்ட மஹிஷிகள்
ருக்மிணி, சத்யபாமா, ஜாம்பவதி, நீலா,
பத்ரா, மித்ரவிந்தா, காளிந்தீ, லக்ஷணா. இதில் ருக்மிணி, சத்யபாமா இருவரும் சாக்ஷத்
ஸ்ரீ மஹாலக்ஷ்மியே. மற்ற அறுவர் ஷன்மஹிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணரின் சக்திகள் பின்வரும் பிரதான 18 புதல்வர்களாக
உருவெடுத்தது:-
ப்ரத்யும்னன், அநிருத்தன், தீப்திமான்
, பானு , சாம்பன், மது, பிருஹத்பானு , சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன் , வேதபாஹு
, ச்ருததேவன் , ஸுநந்தனன் , சித்ரபாஹு,விரூபன் , எனும் வரூதன், கவி, ந்யக் ரோதன்.
க்ருஷ்ணாய வாஸுதே வாய தே வகீநந்த நாய ச !
நந்த கோப குமாராய கோவிந்தாய நமோ நம: !!
வசுதேவர் - தேவகியின் மகனும், நந்தகோபரின்
செல்வகுமாரனுமாகிய கோவிந்தனுக்கு வந்தனங்கள்.
நம: பங்கஜநாபாய நம:
பங்கஜமாலிநே !
நம: பங்கஜநேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே !!
தாமரையை நாபியிலுடையவரும், தாமரை மாலையணிந்தவரும்,
தாமரைக் கண்ணரும், தாமரை போன்ற சரணங்களை உடையவருமான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு பிராணாமங்கள்.
கஸ்தூரீதிலகம் லலாடப லகே வக்ஷ:
ஸ்த லே கௌஸ்துப ம்
நாஸாக் ரே வரமௌக்திகம் கரதலே வேணும் கரே கங்கணம் !
ஸர்வாங்கே ஹரிசந்த நம் ச கலயந்
கண்டே ச முக்தாவளிம்
கோபஸ்திரீபரிவேஷ்டிதோ
விஜயதே கோபாலசூடாமணி: !!
நெற்றியில் கஸ்தூரி திலகமும், மார்பில்
கௌஸ்துபமணியும் , மூக்கின் நுனியில் முத்து புல்லாக்கும் , கையில் வேய்ங்குழலும் ,
கரங்களில் வளையல்களும், மார்பு நிறைய சந்தனப்பூச்சும் கொண்டு முத்து மாலை அணிந்தவனாக,
கோபியர்கள் புடை சூழ நிற்கும் இடைச்சிறுவர்களின் தலைவனான ஸ்ரீ கிருஷ்ணன் மகிமையுடன்
விளுங்குகிறார்.
ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியன்று கீழ்கண்ட
ஸ்லோகத்தை சொல்லி அர்க்யம் விடுவது பரம பவித்ரம்.
ஜாத: கம்ஸவதா ர்த் தாய பூ பா
ரோத்தாரணாய ச!
கௌரவாணாம் விநாஸாய
தை த்யானாம் நித நாய ச!
பாண்டவானாம் ஹிதார்த் தாய த ர்ம
ஸம்ஸ்தா பனாய ச!
க் ருஹாணார்க் யம் மயா த த்தம் தேவக்யா
ஸஹிதோ ஹரே!
"ஸ்ரீ க்ருஷ்ணம் வந்தே ஜகத் குரும்"
இக் கட்டுரை விஷ்ணு உடன் பயணம் போன்று உள்ளது. நன்றி
ReplyDeleteஓம் நமோ நாராயணாய
ReplyDeletesimply supereb
ReplyDeleteஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே கலியுகத்தின் கண்கண்ட தெய்வங்கள் ராமபிரான் மற்றும் கிருஷ்ணரும் ஆவார் கள் தங்கள் ஆன்மீக தகவல்கள் கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை தெளிவாக விளக்குகிறது ஒருராமநாமம் 1000 சகஸ்ரநாமத்திற்கு சமம் எனில் ஒருகிருஷ்ண நாமம் 3000 சகஸ்ரநாமத்திற்கு சகஸ்ரநாமத்திற்கு சமம் என்ற உங்கள் ஆன்மீக பதிவு உண்மையே வரும் கோகுலாஷ்டமி ஒட்டிய உங்கள் ஆன்மீக பதிவு அற்புதம் வாழ்த்துக்கள்
ReplyDeleteI am very happy to have read this, this evening. At the time of Sri Krishna jayanti I will be in a position to narrate a Birdseye view about Him to the kids. It is brief and concise.
ReplyDeleteI am very happy to have read this, this evening. At the time of Sri Krishna jayanti I will be in a position to narrate a Birdseye view about Him to the kids. It is brief and concise.
ReplyDeleteHare Krishna hare Krishna Krishna Krishna hare hare.
ReplyDeleteInformative about shri Krishna, the Jagadguru when nearing Janmashtami.Thanks.
ReplyDeleteGood Information
ReplyDeleteமிக மிக அருமை, நல்ல பதிவு.
ReplyDeleteExamplary
ReplyDeleteஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ராதே கிருக்ஷ்ண ராதே கிருக்ஷ்ண
ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் ஸ்ரீ கிருஷ்ண
ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் 🙏🙏🙏
Came to know how powerful Krishna nama is. Thanks.
ReplyDeleteI am trying to chant daily krishna nama atleast five times a day
மிக அருமை. கிருஷ்ணஜெயந்தி அன்று இதைப் படித்தாலே அனைத்து நன்மையும் கிட்டும். ராதே கிருஷ்ணா.
ReplyDeleteமிகவும் அருமை ஐயா. ஜென்மாஷ்டமி அன்று தாங்கள் கூறிய ஸ்லோகத்தை படித்து பயன் அடைவோம். நன்றி.
ReplyDeleteதர்மத்தின் காவலன் கலியுக கடவுள் கண்ணன் லீலைகளை கேட்க கேட்க புளகாங்கிதம் அடைகிறோம். ரகு எழுதியுள்ள கட்டுரையில் அனைத்து விவரங்களும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனை நேரம் கிடைக்கும் பொழுது விரிவாக ஒரு கட்டுரையாக சமர்ப்பிக்குமாறு அல்லது வாட்ஸ் அப்பில் எல்லாருக்கும் தெரியும் படியாக வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள்!
ReplyDeleteSarvam Sri Krishnarpanam
ReplyDeleteDetailed Information In Precised Manner
Nice To Share
Thanks, Keep It Up 👌
அருமையான பதிவு. கிருஷ்ண ஜெயந்தி 2 வேறு தினங்களில் கொண்டாடுவது ஏன்?
ReplyDelete*கோகுலாஷ்டமி ஒரு விளக்கம்*
Delete********************************
*கோகுலாஷ்டமி:-* 11.08.2020 கோகுலாஷ்டமி இல்லை. 10.09.2020 தான் கோகுலாஷ்டமி அனுஷ்ட்டிக்க வேண்டும் என்று பல சோஷியல் மிடியாக்களில் வந்து கொண்டு இருகின்றது.
அடிப்படையாக ஒரு விஷயம் என்னவென்றால், பண்டிகைகள் சாந்திரமாண ( சந்திரனின் நகர்வுபடி) முறைப்படி கணக்கிடப்படுகின்றன. அதன்படி, கடந்த 21.07.2020 அன்று ஆடி அமாவாசைக்கு அடுத்த நாள் சிராவண மாஸம் (ஆவணி) ஆரம்பித்து விட்டது.
அதன்படி ஸ்ராவன பெளர்ணமி அன்று (03.08.2020) யஜுர் வேத உபாகர்மாவும் , ஸ்ராவன அவிட்டம் நக்ஷ்த்திரம் அன்று ( 04.08.2020) ரிக் வேத உபாகர்மாவும் நடைப்பெற்று முடிந்து காயத்ரி ஜபம் முடிந்தது.
*****இதே விதியைப் பின்பற்றித்தான் கோகுலாஷ்டமியும் நிர்யணம் செய்யப்பட்டுள்ளது.***🙏🙏
ஸ்ராவண கிருஷ்ண பக்ஷ அஷ்டமி அன்று ( 11.08.2020 ) பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டுள்ளது தவறேயில்லை. சரியாக உள்ளது. 🙏🙏
*ஆகையால், 11.08.2020 அன்றுதான் கோகுலாஷ்டமி என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.*
கோகுலாஷ்டமி என்பது சிராவண பகுள அஷ்டமி என்று நள்ளிரவில் உள்ளதோ அன்றுதான் கோகுலாஷ்டமி.
அதன்படி இந்த வருடம்
11 - 8 - 2020 அன்றுதான் வருகின்றது. ஆகையால்; அன்றுதான் கோகுலாஷ்டமி தினம் கொண்டாடப்பட வேண்டும்.
********************************
Thanks for the clarification
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete