சந்திரனை ஆதாரமாக கொண்ட
பஞ்சாங்கத்தின்படி, சுக்லபட்ச
சதுர்தசியில் நிகழும் விரதங்களில் மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுவது அனந்த
சதுர்தசி விரதமாகும்.
பாத்ரபத புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில்
சம்பவிக்கும் இதை அனந்த பத்மநாப சுவாமி விரதம் எனவும் நம் பூலோக இச்சைகளை முழுவதுமாக
நிறைவேற்றி வைப்பதால் காம்யா விரதம் எனவும் அழைக்கப்படுகிறது.
அனந்த விரதம் அளவிட முடியாத செல்வச் செழிப்புக்களை
அளிக்கக் கூடியது. ஸ்ரீமந் நாராயணன் ஆதிசேஷன் மீது, அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு
இந்நாளில் தோன்றியதாக ஐதீகம்.
ஒவ்வொரு
ஆண்டும் வரும் ஆவணி மாத சுக்லபட்ச சதுர்த்தசியன்று சுமங்கலிப் பெண்கள், விரதம் இருந்து
அனந்த பத்மநாப சுவாமி படத்தை கிழக்கு பார்த்து வைத்து மலர் அலங்காரம் செய்ய வேண்டும்.
ஆவணி அல்லது புரட்டாசி மாதத்தில், விநாயகசதுர்த்திக்கு அடுத்து வரும் சதுர்த்தசி திதியில்
கடைபிடிக்கப்படுகிறது.
இழந்த செல்வம், பொருட்கள் மற்றும் அனைத்தையும் மீட்டுத்தரும்
அறிய விரதம் ஸ்ரீ அனந்த விரதம்.
இந்த
பூஜையை கணவன், மனைவி இருவரும் சேர்ந்து செய்வது சிறப்பு. இயலாவிட்டால், பெண்கள்
செய்யலாம். பொதுவாக, இது பெண்களுக்கான விரதமாகவே கூறப்பட்டிருக்கிறது.
மிகுந்த ஆசாரத்துடன்,
நியமங்களை வழுவாது கடைப்பிடித்துச் செய்ய வேண்டிய பூஜையாகும் இது. பூஜை முடியும்
வரை உபவாசம் இருப்பது கட்டாயம்.
பாத்ரபத மாத வளர்பிறை சதுர்த்தி
அன்று இந்த விரதத்தை செய்ய வேண்டும். 14 முடிகள் போட்ட சிவப்பு வண்ணக் கயிற்றினை தயார்
செய்து நதியில் நேரடி சிவப்பு வஸ்திரம் தரித்து கலசத்தை சிவப்பு வண்ணத்தினால் அலங்கரித்து
கலசத்தில் நீரை நிரப்பிக் கொள்ள வேண்டும்.
ஒரு சிவப்பு வஸ்த்ரத்தில் தாமரைப்பூவை வரைந்து
அதன்மேல் கலசத்தை வைக்க வேண்டும். சில தர்ப்பைகளை எடுத்து பாம்பு போல் பின்னி கலசத்தின்
மீது வைக்க வேண்டும். இதன் மேல் மஞ்சள் பூசிய தேங்காயை ஸ்ரீ அனந்தசயனனாக பாவித்து பூஜையை
செய்ய வேண்டும்.
அப்புண்ணிய கலசத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணு நான்கு கரங்களில் சங்கம், பத்மம்,
சுதர்சனம், கதை முதலியவைகளை கொண்டு வீற்றிருப்பதாக த்யானித்து, "ஓம் நமோ பகவதே" என்கிற மந்திரத்தால் தர்ப்ப க்ரந்தியை பூஜிக்க வேண்டும். புதிய சிகப்பு பட்டு நூலை கொண்டு கலசத்தின் மீது வைத்து புருஷ ஸுக்தத்தினால்
16 விதமாக உபசரித்து "அதோ தேவேதி"
என்கிற மந்திரத்தினால் பூஜிக்க வேண்டும்.
"ஸம்ஸாரேதி" என்கிற மந்திரத்தை சொல்லி புதிய அனந்த சூத்திரத்தை
வலது புஜத்தில் கட்டி கொண்டு "நமஸ்தே
வாஸுதேவா" என்கிற மந்திரத்தை சொல்லி பழைய நூலை விஸர்ஜனம் செய்ய வேண்டும்.
ஷோடசோபசார
பூஜைகளும், அங்க பூஜையும் செய்து துதிக்க வேண்டும். அதன் பின், நோன்புச்சரடை
ஸ்வாமியின் பாதத்தில் வைத்துப் பூஜிக்க வேண்டும். பக்தியுடன் நிவேதனங்கள்,
பழங்கள், தாம்பூலம் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
மந்திர
புஷ்பாஞ்சலி முடிந்த பிறகு,
அனந்தாய நமஸ்துப்யம் ஸஹஸ்ர சிரஸே
நம:|
நமோஸ்து பத்மநாபாய நாகாநாம் பதயே
நம:||
என்ற
மந்திரத்தைக் கூறி, சரட்டை நமஸ்கரிக்கவும். பிறகு, மந்திரங்களைக் கூறி,
நோன்புச்சரட்டை பக்தியுடன் அணிந்து, பிரார்த்தனை செய்யவும்.
நமஸ் ஸர்வஹிதானந்த ஜகதானந்தகாரக |
ஜீர்ணதோரம் வாஸூதேவ விஸ்ருஜாமி
த்வதாஜ்ஞயா ||
"ததாச விஷ்ணுர் பகவான்" என்கிற மந்திரத்தை சொல்லி நெய்யுடன் கூடிய கோதுமையையும்,
பழங்களையும், ஆபூபம் (அப்பம்), தாம்பூலம், தக்ஷிணை (கலசத்துடன்) இவைகளை ஓர் வேதம் அறிந்த
அந்தணர்க்கு தனது தகுதிக்கு ஏற்றவாறு தானம்
செய்ய வேண்டும். இவ்வாறு 14 ஆண்டுகள் 14 கலசங்களை தானம் செய்தால் எல்லா மனோபீஷ்டங்களும்,
நான்கு வித புருஷார்த்தங்களும், வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ்வர்.
இந்நாளில் பரந்தாமனிடமிருந்து
வெளிப்படும் சக்தி அலைகள் இவ்வுலகம் முழுவதும் பரவியிருக்குமாம். ஆகையால் அந்நாளில்
விரதமிருந்து அனந்தனை வழிபட்டால் அந்தச் சூட்சுமச் சக்தி அலைகள் நம்மில் இரண்டறக் கலக்கும்
என்பது நம்பிக்கை.
சூதில் தோற்ற பாண்டவர்கள்
12 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து பலவித இன்னல்களை அனுபவித்து கொண்டு இருக்கும் பொழுது,
மேலும் அவர்களுக்கு இன்னல்களை விளைவிக்க நினைத்து துரியோதனன் துர்வாச மகரிஷியை அனுப்பி
வைத்தான். கோப முனியான துர்வாசரிடம் இருந்து அவர்களை காக்கும் பொருட்டு கிருஷ்ணர் அவ்விடம்
வந்தார். அப்பொழுது தருமர், கிருஷ்ண பரமாத்மாவிடம் நீ அருகில் இருக்கும் பொழுது இவ்வாறு
இன்னல்களை அனுபவித்து கொண்டிருக்கிறோம், தாங்களும் எங்களை கைவிட்டால் வேறு யார் எங்களை
காப்பாற்றுவார் என வேண்ட, ஸ்ரீ கிருஷ்ணர், "நான் இந்த உலகம் முழுவதும் வ்யாபித்து
இருக்கும் அனந்தன்! மும்மூர்த்திகள், 14 உலகங்கள், சூரிய, சந்திரர்கள், நக்ஷத்திர மண்டலம்,
தேவர்கள், கோள்கள், இரவு, பகல், நாள், வாரம், மாதம், வருடம், நதிகள், மலைகள், அணுக்கள்,
எல்லாமும் நானே! இவ்வாறு அனந்தனாக பாவித்து என்னை பூஜித்தால் உங்கள் இன்னல் தீர்ந்து
வேண்டுவன கிடைக்கும். அதன்படி பாண்டவர்கள்
ஸ்ரீ அனந்த விரதம் இருந்து கீர்த்தி பெற்றனர்.
க்ருத யுகத்தில் வசிஷ்ட கோத்திரத்தை சேர்ந்த சுமந்தன்
கவுதமி தம்பதியருக்கு புதல்வியாக சுசீலை பிறந்தாள். கௌடிண்யர் என்ற வேதம் பயின்ற அந்தணரோடு
திருமணம் நடந்தது. கௌடிண்யர் மிக அற்ப ஆயுள் உள்ளவனாக இருந்தான். சுசீலாவின் மாற்றான்
தாயின் கொடுமையில் இருந்து வீட்டை விட்டு வெளியேறி பல இன்னல்களை அனுபவித்து இந்த அனந்த
விரதத்தை மேற்கொண்டு இப்புண்ணிய வ்ரதத்தினால் நீண்ட ஆயுளையும், இழந்த அனைத்தையும் பெற்று
முக்தி அடைந்தாள். இப்புண்ணிய சரிதம் ஸ்ரீ குரு சரித்திரம் என்னும் நூலில் மிக விரிவாக
எடுத்துரைக்கிறது.
ஓம்
நமோ நாராயணா !