Friday, March 19, 2021

ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளின் 426வது (1595-2021) அவதார தினத் திருவிழா - 20.03.2021 (சனிக்கிழமை)

கலியுகத்தில் மக்களை நல்வழிப்படுத்தி "ஸ்ரீ ஹரியே சர்வோத்தமன் வாயு ஜீவோத்தமன்" என்னும் த்வைத மத கொள்கையை ஆணித்தரமாக வலியுறுத்தி இப்பாரதம் கண்ட மிக சிறந்த புனித மஹானாக பிறந்து மந்த்ராலயம் என்னும் புனித க்ஷேத்ரத்தில் ஜீவனோடு ப்ருந்தாவனப்ரவேசம் செய்து மக்களின் இன்னல்களை அல்லும் பகலும் தீர்த்து ப்ரத்யக்ஷ குருவாக இந்த கலியுகத்தில் விளங்குகிறார். யதிகளிலேயே ஸ்ரேஷ்டர்.  முக்காலமும் உணர்ந்த அபரோக்ஷ ஞானி.

த்வைத மத குருமார்களில் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளுக்கு என்றும் தனி இடம் உண்டு. இன்றும் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் அதிகம் வணங்கப்படும் குருவாக உள்ளார்.

இவரின் பரம குரு (குருவின் குரு ) ஸ்ரீ ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர்.இவர் ஆய கலை 64 நான்கிலும் வல்லவர். இவரின் பிருந்தாவனம் கும்பகோணம் சோலையப்பன் தெருவில் உள்ளது. இவரின் சிஷ்யர் ஸ்ரீ ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர். இவரின் சிஷ்யர் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தர். இதில் என்னவொரு விந்தை என்றால் இவரின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வ்யாசதீர்த்தரின் சிஷ்யர்தான்  ஸ்ரீ ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர். அவர் ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராக அவதாரம் புரியும் பொழுது ஸ்ரீ  விஜயீந்திர தீர்த்தர் இவரின் பரம குருவாகிறார். என்னவொரு விந்தை பாருங்கள். குருவே சிஷ்யனாக சிஷ்யனே குருவான விந்தை. நமது கற்பனைக்கும் எட்டாத அற்புதம்.

"தேவெரெந்தரெ திருப்பதி திம்மப்பனு...

குருகளெந்தரெ மந்த்ராலய ராகப்பனு..."

(எப்படி  தெய்வம் என்றால் திருப்பதி வெங்கடாசலபதியை குறிக்குமோ அதுபோல் குரு என்றால் ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை மட்டும்தான் குறிக்கும்)

"சங்கு கர்ணாக்ய தேவஸ்து பிரம்ம சாபாஸ்ய பூதலே

ப்ரஹ்லாத இதி விக்ஷ்யாதோ பூபாரக்ஷ பனே ரதஹ

ச ஏவ ராகவேந்த்ராக்ஷ யதிரூபேண சர்வதா

கலவ்யுகே ராமசேவா குர்வன் மந்த்ராலயே பவத்"

                                - ந்ருஸிம்ஹ புராணம்

ப்ரஹ்மலோகத்தில் விளங்கிய ஸ்ரீ சங்குகர்ணன் என்னும் தேவதை ப்ரஹ்மனின் விஷ்ணு பூஜைக்கு தாமதமாக பூ மற்றும் பூஜா த்ரவ்யங்களை கொண்டு வந்ததினால் ப்ரஹ்மதேவனால் சபிக்கப்பட்டு க்ருத யுகத்தில் ஸ்ரீ ப்ரஹ்லாதராகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீ பாஹ்லீகராஜாவாகவும், கலியுகத்தில் இரண்டு அவதாரங்கள் முறையே ஸ்ரீ  வ்யாஸராய தீர்த்தராகவும், ஸ்ரீ ராகவேந்திர தீர்த்தராகவும் அவதாரம் புரிந்து கற்பக வ்ருக்ஷமாகவும், காமதேனுவாகவும் என்றும் ஜீவனோடு விளங்கி மக்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறார்.

தமிழகத்தில் தென்ஆற்காடு மாவட்டம் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள புவனகிரியில் திம்மண்ண பட்டர் - கோபிகாம்பாள் தம்பதியருக்கு பால்குணஸுக்ல சப்தமி திதி குருவாரம் மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தில் திருமலை வேங்கடவனின் திருவருளால் 1595 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் பிறந்தவுடன் அநேக சுப சகுனங்கள் தோன்றின.  இவரின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வ்யாஸதீர்த்தர் திருப்பதி வேங்கடவனை 12 ஆண்டுகள் பூஜை செய்யும் மஹாபுண்ணியம் கிடைத்தது. அதன் பலனால்தான் என்னவோ அந்த வேங்கடவன் அருளால் அதே வ்யாசராஜ தீர்த்தர்  தனது அடுத்த அவதாரத்தில் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளாக பிறந்தார்.

"வருங்காலத்தில் மாஞ்சால கிராமம் உலக புகழ் பெற்றதாக அமையும். புகழ் பெற்ற ஒருவரின் ஜீவ சமாதியால் அது புகழ் பெரும்" என்று ஸ்ரீ ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லப சரிதாம்ருதத்தில் 20-ஆம் அத்தியாயத்தில் 13ஆம் நூற்றாண்டிலேயே இவரின் பிறப்பை பற்றி கணித்து கூறப்பட்டதென்றால் இவரின் அபார கீர்த்தி நமக்கு நன்கு விளங்கும்.

சாலிவாகன சகம் 1671 ஆம் ஆண்டு விரோதிகிருது வருடம், ச்ராவண மாதம், க்ருஷ்ணபக்ஷம், த்விதீயை,வியாழக்கிழமை ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மா தனது கரங்களினால் பிடித்து ஜீவனோடு துங்கபத்திரா நதிக்கரையினில் அமைந்துள்ள ஸ்ரீ மந்த்ராலயம் என்னும் க்ஷேத்திரத்தில் பிருந்தாவன பிரவேசம் செய்தார்.

பூஜ்யாய ராகவேந்த்ராய சத்ய தர்ம ரதாயச |

பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||

 


 


 

6 comments:

  1. பத்மினிMarch 19, 2021 at 7:04 PM

    ஸ்ரீ ராகவேந்தரின் அவதாரங்களின் மஹிமையை நேரில் கண்டு அனுபவதித்தது போன்ற பிரமையை ஏற்படுத்தி விட்டது. அவதாரத்தின் நோக்கத்தையும், இந்நாளில் அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கும்படி பதிவிட்டதற்கு கோடி நன்றிகள்.

    ReplyDelete
  2. V.H.Bhargavi


    Thanks for the excellent presentation of Guru Raghavendra well done.

    ReplyDelete
  3. It is a good write up on Guru Raghavendrar.This is coming from our Raghu at the apt and appropriate time to remind people like me to devote some spiritual time reading and worshing Sri Raghavendra Swamiji. Thanks 🙏

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா. குரு ஸ்ரீஇராகவேந்திரரின் பிறப்பின் மகிமை விளக்கம் நன்றாக உள்ளது. குருவே சரணம்.

    ReplyDelete
  5. We had the opportunity to know about Guru Raghavendra. Thanks

    ReplyDelete
  6. Excellent narration 🙏🙏🙏🙏Thsnk you sir

    ReplyDelete