ஸ்ரீமத்வ மடயதிகளில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தருக்கு என்றும் ஓர் சிறப்பான இடம் உண்டு. பழுத்த த்வைத ஞானி. அபார ஞானம் உடையவர். இவர்தான் அகிலம் போற்றும் ஒப்பற்ற மகானாக விளங்கிய ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளுக்கு குருவாக விளங்கியவர் என்றால் இவரின் மேதா விலாசம் நமக்கு நன்கு விளங்கும். 18 க்ரந்தங்களுக்கு மேல் எழுதியவர். இவரின் குருதான் ஸ்ரீமத்வ மதம் புகழும் ஆய கலைகள் 64கிலும் வல்லவரான ஸ்ரீ விஜயீந்திர தீர்த்தர். இவரின் ஸ்வப்னத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் கட்டளைக்கிணங்க தனக்கு பிறகு அடுத்த மடாதிபதியாக ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளை நியமித்தவர்.
மிகவும் வறுமையின் பிடியிலிருந்த ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் இவரின் ஸ்ரீமடம் (கும்பகோணம்) அடைந்த பிறகுதான் முன்னேற்றம் கண்டார். இவர்தான் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளுக்கு “சுதா” என்ற பாடத்திற்கு அபூர்வ விளக்கம் எழுதியமையால் "ஸ்ரீ பரிமளாச்சார்யார்" என்ற நாமம் சூட்டியவர்.
ஸ்ரீ சுதீந்திரர் தன் பூர்வாஸ்ரம பந்துவான ஸ்ரீ வாசுதேவசாரியாரின் மகள் சரஸ்வதி தேவியை வேங்கடநாதனுக்கு முன்நின்று மணம் முடித்து வைத்தார்.
1623ல் ஸ்ரீசுதீந்திர தீர்த்தர் ஆனேகுந்தியில் நவ பிருந்தாவனம் என்னும் இடத்தில் பிருந்தாவனஸ்தரானார்.
வணக்கம். தங்களுடைய ஆன்மீக பதிவுகள் மூலம் நல்ல பல புது விஷயங்களை அறிய முடிகிறது.தொடரட்டும் இந்த தொண்டு. நன்றி.
ReplyDeleteஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் குருவான ஸ்ரீ சுசீந்திர தீர்த்தரின் ஆராதனை தினமான இன்று எல்லோருக்கும் அவரின் ஆசி கிடைக்கட்டும் இதனை அறிய எங்களுக்கு வழங்கிய தங்களுக்கு குருமார்களின் அனுக்கிரகம் கிட்டட்டும்
ReplyDeleteThanks for bringing this nice article at the appropriate time. Thanks 🙏
ReplyDeleteThanks for giving an opportunity to know one more devotional story which we are not aware.
ReplyDeleteஅருமையான ,புதுமையான,அற்புதமான பதிவு.
ReplyDelete