ஸ்ரீ
சைதன்ய மஹாப்ரபு 1407 ஷகாப்த வருடம் (கிபி 1486) பால்குன மாதத்தின் பௌர்ணமி நாள் இரவில் மேற்கு வங்காளத்திலுள்ள மாயாப்பூரில் ஜகன்னாத மிஸ்ரா சச்சிதேவிக்கு
ஸ்ரீகிருஷ்ணரின் கலியுக அவதாரமாக பிறந்தார். விஸ்வம்பரர்/விஸ்வரூபர், நிமாய் மற்றும்
பொன்னிற மேனியராய் இருந்ததினால் கௌரங்கர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் முழு சந்திர
க்ரஹணத்தின் போது ஜனித்தார்.
பௌர்ணமாஸ்யாம் பல்குணஸ்ய
பால்குனி-ரக்ஷ-யோகத:பவிஷ்யே கௌர ரூபேண ஷஷி -கர்பே புரந்தராத்
ராதையும்
ஸ்ரீக்ருஷ்ணரும் இரு தேகத்தில் விளங்கிய ஒரே ஆத்மாக்களாக ஸ்ரீ
க்ருஷ்ண சைதன்யராக பிறந்துள்ளார். (சைதன்ய சரிதாம்ருதம் 1.1.5). ஸ்ரீராதையின் ப்ரேம
ராஸலீலை என்னும் பரவச நிலையிலேயே அனவரதமும் இருந்தார்.
ஹரே
க்ருஷ்ண மஹாமந்த்ரத்தை பிரகடனப்படுத்தியவரும் இவரே. இவரின் காலத்தில்தான் க்ருஷ்ண
/ஹரி நாம கீர்த்தணங்கள் செழுத்தோங்கி வளர்ந்தது.
இவரின்
பாதத்தில் பகவான் விஷ்ணுவின் சின்னங்களான கொடி, வஜ்ரம், சங்கு, சக்கரம், மீன் ஆகியவை காணப்பட்டன
என்று ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் (1.14.7) தெரிவிக்கின்றது.
500
வருடங்களுக்கு முன்னர் இவர் உருவாக்கிய ஹரே க்ருஷ்ண மஹாமந்திரம் 10000 வருடங்கள் நீடிக்கும் என்று கூறப்படுகின்றது.
கலியின் கோர பிடியிலிருந்து மக்களை காப்பாற்றி காம எண்ணங்களை அழித்து பகவத்
சிந்தனையில் நிலை பெற செய்யும் ஒரே சாதனம்
ஸ்ரீ ஹரே க்ருஷ்ண மஹாமந்திரம் என்று ஸ்ரீமத் பாகவாதமும் உரைக்கின்றது.
ஸ்ரீசைலக்ஷேத்ரத்தில்
சிவபெருமானும் பார்வதிமாதாவும் ப்ராஹ்மண உடையில்
வாழ்ந்து பலரஹஸ்ய விஷயங்களை பேசி ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபுவிற்கு உத்தரவு அளித்தவுடன் அவர்
ஸ்ரீ பூரிக்ஷேத்ரத்திற்கு சென்றார். ( ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் 9.175-177)
ஈஸ்வரபூரி
இவருக்கு தீக்ஷை அளித்து ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை உச்சரிக்கும்படி போதித்தார்.
கேஸவபாரதீ
என்ற சந்நியாசி நவத்வீபத்தில் ஸ்ரீசைதன்யருக்கு சன்யாசம் வழங்கினார். மற்ற மக்களை க்ருஷ்ண
உணர்விற்கு தூண்டக்கூடியவர் என்ற பொருள் கொண்ட "ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்" என்ற
சந்யாச நாமத்தை கேஸவபாரதீ அவருக்கு அளித்தார்.
அஹோபிலம்,
திருப்பதி, ஸ்ரீசைலம், காஞ்சி, ஸ்ரீரங்கம், மதுரை, கும்பகோணம், தஞ்சை, ராமேஸ்வரம்,
கன்னியாகுமரி போன்ற பல தென்னிந்திய புண்ணியத்தலங்களுக்கு சென்று மக்களுக்கு ஸ்ரீமத்
பாகவதமும், ஹரே க்ருஷ்ண மஹாமந்திரத்தின் அவசியத்தையும் இரவு பகல் பாராது பரப்பி மகத்தான
சேவை புரிந்தார்.
பூவுலகில்
தனது இறுதி 18 வருடங்கள் ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு பூரியில் ஸ்ரீ ஜகன்னாதருடனே கழித்தார்.
ஒருநாள்
பூரியின் கடற்கரைக்கு அருகாமையிலுள்ள டோடா-கோபிநாதர் கோயிலுக்கு அருகில் தனது பக்தர்களுடன்
நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டே திடீரென்று கோயிலுக்குள் விரைவாக சென்று ஸ்ரீகோபிநாத்
விக்கிரஹத்தினுள் ஐக்கியமானார்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே
என்னும்
மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால் ‘ராதா’ என்று
பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும்போது ‘ராதே’ என்று மாறுவதைப் போலவே,
‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.