யுகங்கள்
பொதுவாக 4 வகையாக நமது ஹிந்து தர்மம் கூறுகிறது.
1. க்ருத2. த்ரேதா3. துவாபர4. கலி
இந்த கலியுகத்தின் கோர பிடியிலிருந்து
நம்மை ரக்ஷிக்க ஒரு எளிய உபாயத்தை நமது முன்னோர்கள் வகுத்தனர். அதுதான் "நாம சங்கீர்த்தனம்"
அல்லது "நாம ஜபம்".
குறிப்பாக நாம சங்கீர்த்தனத்தில்
"ராம", "கிருஷ்ண", "நமசிவாய" மற்றும் "ஹரி, நாராயண"
மந்திரங்களே பெரும்பாலும் சொல்லப்படும்.
நாம ஜபம் என்பது மிகவும் எளிய
உபாயம்தான். அனால் அது அவ்வளவு சுலபமும் அல்ல. நாம ஜபம் என்பது மனம் ஒருமுக நிலையில்
ஒரு குறிப்பிட்ட கடவுளின் மந்திரத்தை லக்ஷ கணக்கில், கோடி கணக்கில் ஜபித்து அம்மந்திரத்தை
உருவேற்றி, அத்தெய்வீக மந்திரத்தின் அதிர்வலைகள் பரிபூர்ணமாக வியாபித்து, அம்மந்திரத்தின்
தேவதை ப்ரத்யக்ஷமாகி அனுகிரஹித்து, அதன் மூலம் மக்களை நல்வழிப்படுத்தி, நமது புராண,
கலாச்சாரத்தின் மஹிமையை உணர்த்தி, அறியாமையின் பிடியிலிருந்து விடுவித்து, நமது பாரதத்தின்
ஆணிவேரான கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், இறை உணர்வையும் வளர்க்க அந்தந்த காலகட்டங்களில்
இறைவன் தன்னை வெளிப்படுத்திய தவறியதில்லை.
எத்தனையோ மஹான்கள் நமது சனாதன
தர்மத்தை ரக்ஷிக்க, அந்நியரின் கோர பிடிலியிருந்து நமது தர்மத்தையும், கலாச்சாரத்தையும்,
பாரம்பரியத்தையும், திருக்கோயில்களையும் மீட்டு இன்று நமது ஹிந்து மதம் மற்ற அனைத்திற்கும்
ஒரு முன்னுதாரமாக இருந்ததில் நமது முன்னோர்களின் பங்கு, தியாகம், சிரத்தை வார்த்தைகளால்
வருணிக்க முடியாதது.
கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம்
ஒன்றே நாம் உய்யும் ஒரே வழி.
அப்படி நாம ஜெபத்தை தமிழகத்தில்
பிரபல்யப்படுத்திவர்களில் ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் முக்கியத்துவம் பெறுகிறார்.
பஜனை சம்பிரதாயத்தின் முதல்
குரு என்னும் சிறப்பு பெற்றவர். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர்
மற்றும் ஸ்ரீ வேங்கடேச ஐயாவாள் இவரின் சமகாலத்தவர்கள்.
திரு அவதாரம்
கேசவ
பாண்டுரங்கன் - சுகுணா தம்பதியருக்கு ஆதி சங்கர பகவத்பாதரின் அம்சமாக 1610 இல் கலியுக
ஈஸ்வரனாக திருஅவதாரம் புரிந்தார். இவரின் இயற்பெயர் புருஷோத்தமன்.
இவரின் குரு ஸ்ரீ ஆத்ம போதேந்திரர்
என்னும் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். பரம அத்வைதி. மஹா ஸ்ரேஷ்டர். இவர் காஞ்சி
காமகோடி பீடத்தின் 58 வது பீடாதிபதி. இவரின் பிருந்தாவனம் விழுப்புரம் அருகில் “வடவாம்பலம்” என்னும் இடத்தில் இருக்கிறது.
இவரது பிருந்தாவனத்தில் நித்யம் "ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர" என்று ஒலித்து
கொண்டே இருக்கும். த்யானம் செய்ய ஏற்ற அருமையான இடம்.
இவரின் தீக்ஷண்யத்தை ஞான திருஷ்டியால்
அறிந்த குரு ஆத்ம போதேந்திரர் இவருக்கு ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்னும் திருநாமம்
சூட்டி காஞ்சி காமகோடி பீடத்தின் 59 ஆவது பீடாதிபதியா க்கினார். இவர் காஞ்சி காமகோடி சங்கர மடத்தின் பீடாதிபதியாக இருந்த காலம் 1638-1692 (54 ஆண்டுகள்).
இவர் தினமும் 1,08,000 ராம
நாமஜபம் செய்வார். ஆதலால் இவரின் வாக்கில் கலைவாணியின் சாந்நித்யம் இருந்தது. ராம நாம
மகிமையை, ராம நாம ஜெபத்தின் அவசியம் மற்றும் முக்கியத்துவத்தை பஜனை சாம்ராஜ்யத்தின்
மூலம் மக்களுக்கு உணர்த்தியதில் முதலிடம் பெறுபவர் இவரே. இவரும் திரு விசயநல்லுர் ஸ்ரீ வேங்கடேச
ஐயாவாள் இருவரும் இணைந்தே கிராமம் கிராமமாக ஊர் ஊராக சென்று நாம
ஜெபத்தை மக்களிடையே பரப்பினர். இவரால்தான் ராம நாம ஜபம் தமிழகத்தில் அதி விரைவாக பரவியது.
அற்புதங்கள்
1. ஒரு சமயம் இருவரும் இணைந்து
நாம ஜபம் செய்யும் பொழுது ஓர் பிராம்மண தம்பதியின் வீட்டிற்கு சென்று அவர்களின் பிக்ஷயை
ஏற்று காது கேளாத வாய் பேசாத அத்தம்பதியின் குழந்தை இவர் உண்ட மிச்ச அன்னத்தை உண்டு
அபார ஞானம் பெற்று பேசும் திறன் பெற்றான். இது எப்படி சாத்தியம் என்றால் நித்யம் பகவான்
நாமங்களை உச்சரிக்கும் மஹானுபவர்களின் வாக்கில் சரஸ்வதி வாசம் புரிவதனால் அவர்களின்
மிச்ச உணவு அதி திவ்யமான அமிர்த ப்ரசாதமாகும்.
2. இவர் யாத்திரை செல்லும்
வழியில் ராம நாம ஜபத்தின் மஹிமையை உலகிற்கு உணர்த்த பல்லாயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில்
மிலேச்சர்களால் கவரப்பட்ட ஒரு பத்தினியின் பாவம் நீக்கி அவளை பரிசுத்தமாக்கி ராம நாம ஜபத்தின்
மஹிமையை உணர்த்தினார். தாரக மந்த்ரமாகிய ராம நாம ஜெபத்தின் மூலம் செயற்கரிய காரியங்கள்
பகவத் சங்கல்பத்துடன் நிகழ்த்தியதால் இவர் "ஸ்ரீ ராம நாம போதேந்திரர்" என்றும்
அழைக்கப்பட்டார்.
இவர் ஜீவனோடு ப்ருந்தாவனஸ்தரானதால்
இவரின் பிருந்தாவனத்தில் நித்யம் ராம் ராம் என்று பகவதோத்தமர்கள் அகண்ட ராம நாம ஜபம்
செய்வர். கோவிந்தபுரத்தில் அனைத்து ஊரிலிருந்தும் வந்து ராம நாம ஜெப தீக்ஷை எடுத்து செல்வது வழக்கம்.
இவரது பிருந்தாவனத்தை அடையாளம்
காட்டியவர் "மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள்". இவருக்கு நாம் என்றென்றும்
நன்றி கடன் பட்டுள்ளோம் ஏனென்றால் இவர் இல்லையென்றால் நம்மால் போதேந்திரரின் பிருந்தாவன
ப்ரதிஷ்டாபனம் என்பது சாத்தியமில்லை. இவரின் காலம் 1777-1817.
கோவிந்தபுரம்
அதிஷ்டானம்
கும்பகோணத்தில் திருவிடைமருதூரை
அடுத்த கோவிந்தபுரம் என்னும் புனித தலத்தில் இவரின் அதிஷ்டானம் உள்ளது. காவேரி அன்னையின்
மடியில் ராம-சீதா தர்பாரின் நுழைவாயிலின் முகப்போடு முதலில் ஸ்ரீ ஹனுமானின் விஸ்வரூப
தரிசனம். ஆஞ்சநேயரை தரிசித்து நுழைந்தால், ஆஞ்சநேயரின் சந்நிதி மேல் நாம/பஜனை சம்பிரதாயத்தின்
ஆணிவேராக விளங்கிய, ஸ்ரீ போதேந்திரர், ஸ்ரீதர ஐயாவாள், நாராயண தீர்த்தர், விஜயதாசர், கோபாலதாசர், புரந்தரதாசர், ஜயதேவர்,
பத்ராசல ராமதாசர் ஆகியோரின் அதியற்புத சிற்பங்கள் தரிசிப்பது பரம புண்ணியம். பூர்வ
ஜென்ம புண்ணியம் மற்றும் பகவத் சங்கல்பம் இருந்தால் மட்டுமே நம்மால் இவரின் ஜீவ பிருந்தாவனம்
செல்ல முடியும்.
அடுத்து நாம் செல்ல இருப்பது
கலியுக ஈஸ்வரனான ஸ்ரீ போதேந்திராள் துளசி மாட அதிஷ்டானம். காவேரியில் ஸ்நானம் செய்து
மடியோடு போதேந்திராள் பிருந்தாவனத்தை ராம நாம ஜெபத்துடன் ப்ரதக்ஷிணம் செய்வது அதி ஸ்ரேஷ்டம்.
நம்மையும் மீறி ஒரு சாந்தம், தெய்வீக அநுபவம் பற்றிக்கொள்வது நிதர்சனம். இவருக்கு செய்யும்
பாதுகா பூஜை மிகவும் விசேஷம். ஸ்ரீ போதேந்திராள் பிருந்தாவனத்தை சுற்றியும் பாககவதோத்தமர்களான
ஸ்ரீ வ்யாஸர், சுகர், சதாசிவ பிரம்மேந்திரர், ஜெயதேவர், நர்சி மேத்தா, மகா பெரியவா,
ராம நாம புத்தக அறை என்று எங்கெங்கு காணினும்
குருவின் சாந்நித்யம்தான். நம்மையும் மீறிய ஒரு அபூர்வ அதிர்வலை நிச்சயம்
ஸ்ரீ போதேந்திராள் அதிஷ்டானத்தில் நிச்சயம் ஏற்படுவதை உணர முடியம். அடியேன் முதன் முறையாக
19-09-2020 அன்று சென்று வந்து அடைந்த பேரின்பத்தை வார்த்தைகளால் விளக்கமுடியாது. அதன்
ஒரு மிக மிக சிறு அனுபவத்தைத்தான் தங்களிடம் பகிர்ந்துள்ளேன்.
போதேந்திராள் அதிஷ்டானத்தை
அடுத்து கோசாலா. இங்கு ஆநிரைகளை காண்பது மனதிற்கு மகிழ்ச்சியையும், சாந்தத்தையும் ஏற்படும்.
இங்கிருக்கும் அகத்திக்கீரையை பசுவிற்கு உணவாக அளிப்பது மிகவும் புண்ணியம். ஏனென்றால்
கோமாதா ஸாக்ஷத் மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபமல்லவா!!. இந்த கோசாலையில் காஞ்சி காமகோடி பீடாதிபத்யத்தை
அலங்கரித்த மஹாநுபாவர்களின் பட்டியலை மிக துல்லியமாக நமது பார்வைக்கு வைத்துள்ளனர்.
நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொக்கிஷம் இது.
இவரின் பிருந்தாவனத்தை அடுத்து
ஸ்ரீ நாம கேந்திரம் என்ற ஓர் இடம். இவ்விடம் ஓர் மிக புண்ணிய இடமாகும். இங்குதான்
1008 கோடி முறை ராம நாமம் எழுதிய ராம நாம வங்கி உள்ளது இதை ஓர் நூலகமாக அமைத்து பொக்கிஷமாக
வைத்துள்ளனர். மக்கள் இங்கு வந்து ராம நாம வங்கியை ப்ரதக்ஷிணம் செய்வதை மிகவும் புண்ணியமாக
கருதுகின்றனர்.
அதிஷ்டானத்தை சுற்றியுள்ள கோவில்கள்
சைதன்ய குடீரம், ஸ்ரீ வெங்கடேச
பெருமாள் திருக்கோயில், காஞ்சி மஹாபெரியவா தபோவனம், இரட்டை ஆஞ்சனேயர் திருக்கோயில்,
காசி விஸ்வநாதர் கோயில், பாண்டுரங்கன் கோயில், யோகி ராம் சுரத் குமார் ஆசிரமம், ஸ்ரீ ஞானானந்த
பாதுகா மடம்.
ஈஸ்வரப்ராப்தி
அடைதல்
இவர் 1692 ஆம் ஆண்டு பூர்ணிமை
திதி பாத்ரபத மாதம் பிரஜோத்பத்தி வருடம் விதேகமுக்தி அடைந்தார் என்றும் இவரின்
பிருந்தாவனத்தில் ஸ்ரீ ராம நாம ஜபம் கேட்பதாக பலரும் கூறியுள்ளனர்.
ஸ்ரீ
போதேந்த்ராஷ்டகம்
1. ஸ்ரீமந் போதேந்த்ர யோகீந்த்ர
தேஸிகேந்த்ர நமோஸ்துதே !
ஸர்வலோக ஸரண்யஸ்த்வம்
நாம பக்திம் ப்ரயச்ச மே !!
2. த்வம் தாதா ஞானரத்னஸ்ய
த்வம் த்ராதா
ஸ்வஜனஸ்யச !
த்வம் மாதா நிஜஸிஷ்யாணாம்
நாமபக்திம் ப்ரயச்ச
மே !!
3. ஸ்ரீ மந்ந பீஷ்ட
பலத
ஸ்வாமின் ஸம்ஸாரதாரக!
ஜகத்குரோ ஜகந்நாத
நாமபக்திம் ப்ரயச்ச
மே !!
4. பகவந்நாம ஸாம்ராஜ்யப்ரபோ
மாம் ஸரணாகதம் !
ஸமுத்தர்தும்
க்ருபாஸிந்தோ
நாமபக்திம் ப்ரயச்ச
மே !!
5. குரும் ப்ரபத்யே
லோகானாம்
த்வாமேவ கருணாலயம்
!
க்ருபா கடாக்ஷ
லேஸேன
நாமபக்திம் ப்ரயச்ச
மே !!
6. ஸம்ஸாரார்ணவமக்னஸ்ய
நான்ய: பந்தா மம
ப்ரபோ!
தஸ்மாத் குர்வன்
மயிக்ருபாம்
நாமபக்திம் ப்ரயச்ச
மே !!
7. ஸரண்யம் கில நாமேதி
பவதா நஸ்சிதம் மதம்
!
நீசானாமபி தஸ்மாத்
த்வம்
நாமபக்திம் ப்ரயச்ச
மே !!
8. அக்ஞானத்வாந்த
முக்தஸ்ய
மம த்வம் பாஸ்கரோ
யதா !
மார்கதர்ஸீ மஹாபந்து
:
நாமபக்திம் ப்ரயச்ச
மே !!
9. ஏவம் போதேந்த்ர
பாதாப்ஜ
ப்ரேம போகப்ரதாயகம்!
அஷ்டகம் ய : படேந்நித்யம்
தஸ்ய நாம ப்ரஸீததி!!
திருக்கோயில் அமைவிடம்
சத்குரு
ஸ்ரீ பகவன் நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அதிஷ்டானம்
ஸ்ரீ
மடம் சமஸ்தானம் கோவிந்தபுரம் 612 101, தஞ்சை ஜில்லா - தமிழ்நாடு
"குரோ:அநுக்ரஹேண ஏவ புமான்
பூர்ண: ப்ரஷாந்தயே"
- ஸ்ரீ மத் பாகவதம்
(குருவின் அனுகிரஹத்தால் மட்டுமே
மனிதன் பரிபூர்ண சாந்தியை அடைகிறான்)
"ஜெய
ஜெய சங்கர ஹர ஹர சங்கர"!!!